Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

3.11.15

டெங்கு, சிக்கன் குனியா, பறவை காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சலை தடுக்கும் சித்த மருந்துகள்-(DENGU,CHICKEN KUNIYA KAAICHALAI THADUKA SIDDA MARUNTHU)


டெங்கு, சிக்கன் குனியா, பறவை காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சலை தடுக்கும் சித்த மருந்துகள்
 தமிழக அரசு மூலம் டெங்குவை குணப்படுத்தும் சித்த மருந்துகள் அருமையாக செயல்படுகிறது
 நிலவேம்பு குடிநீர் எல்லா சுர நோயாளி களும் அருந்தலாம் அளவு 60 மி.லி இரண்டு முதல் நான்கு வேளை நோய் தீவிரம் தகுந்தார் போல .
சுரம் வராமலும் இருக்க இதே நில வேம்பு குடிநீர் அருந்தலாம் ஒரு வேளை மட்டும்
 பப்பாளி இலை சாறு டெங்கு நோய் நிலையில் ஏற்படும் பிலேட்லெட் (platelet) எண்ணிக்கையை வெகு விரைவில் அதிகரிக்க செய்கிறது அளவு 10 மி.லி நான்கு வேளை
 இவை பல நோயாளிகளை குணமடைய செய்தது
 இத்துடன் மலைவேம்பு சாறும் 10 மி.லி எடுக்கவும் கிடைக்கவில்லை எனில் மற்ற இரண்டும் பயன்படுத்தலாம்
 இவற்றுடன் தண்ணீர் அதிகம் எடுத்து கொள்வது மிக மிக அவசியம்
 இவ்வாறே டெங்குவை சித்த மருந்துகள் கட்டு படுத்துகிறது குணமாக்குகிறது

கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்-(KARUVEPPILAI DINAMUM SAPIDUVATHAL YERPADUM NANMAIGAL)



தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்!!!
பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம்.


ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
மேலும் கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


அதிலும் இதனை தொடர்ந்து 120 நாட்கள் சாப்பிட்டு வந்தால், என்ன நன்மைகளெல்லாம் பெறலாம் என்று தெரியுமா? இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.


கொழுப்புக்கள் கரையும் காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.


இரத்த சோகை இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.


சர்க்கரை நோய் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

இதய நோய் கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.


செரிமானம் நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான ிரச்சனைகள் நீங்கிவிடும்.


முடி வளர்ச்சி கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.


சளித் தேக்கம் சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

கல்லீரல் பாதிப்பு நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.

ம‌ஞ்ச‌ள் காமாலை -(MANJAL KAAMALAI ENDRAL ENNA)



ம‌ஞ்ச‌ள் காமாலை எ‌ன்றா‌ல் பா‌ர்‌த்தது‌ம் அ‌றி‌ந்து கொ‌ள்ள‌க் கூடிய நோ‌ய் எ‌ன்பது பலரு‌க்கு‌ம் தெ‌ரியு‌ம். க‌ண்க‌ள், நக‌ம் போ‌ன்றவை ம‌ஞ்ச‌ள் ‌நிறமாவது‌ம், ‌சிறு‌நீ‌ர் ம‌ஞ்ச‌ள் ‌நிறமாக இரு‌ப்பது‌ம் இத‌ற்கான அ‌றிகு‌றிக‌ள்.



மு‌க்‌கியமாக‌க் கூற வே‌ண்டுமானா‌ல் ம‌ஞ்ச‌ள் காமாலை எ‌ன்பது ஒரு நோ‌யே அ‌ல்‌ல. ஏதோ ஒரு நோ‌யி‌ன் அ‌றிகு‌றி. ஒருவரு‌க்கு ம‌ஞ்ச‌ள் காமாலை ஏ‌ற்ப‌ட்டா‌ல், எ‌ந்த காரண‌த்‌தினா‌ல் அவரு‌க்கு ம‌‌ஞ்ச‌ள் காமாலை ஏ‌ற்ப‌ட்டது எ‌ன்பதை முத‌லி‌ல் ஆரா‌ய்‌ந்து, அத‌ற்கு உ‌ரிய ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம்.



ம‌ஞ்ச‌ள் காமாலை‌யி‌ல் 6 வகை உ‌ள்ளது. அதாவது 6 வகை ‌கிரு‌மிகளா‌ல் ம‌ஞ்ச‌ள் காமாலை ஏ‌ற்படலா‌ம். ஹெ‌பிடைடி‌ஸ் ஏ முத‌ல் ‌பி,‌சி,டி,இ, ‌‌ஜி வரை 6 வகைக‌ள் உ‌ள்ளன.



மஞ்சள் காமாலையை தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணமடைந்துவிடலாம். ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்காம‌ல், வெறு‌ம் ப‌த்‌தியமு‌ம், ‌கீழாநெ‌ல்‌லியு‌ம் சா‌ப்‌பிடுவது ம‌ஞ்ச‌ள் காமாலையை குணமா‌க்காது.



அதே‌ப்போ‌ல் ம‌ஞ்ச‌ள் காமாலை நோ‌ய் எ‌ன்றா‌ல் எ‌ப்படி வரு‌கிறது எ‌ன்பதையு‌ம் அ‌றிய வ‌ே‌ண்டு‌ம்.

உட‌லி‌ல் ர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌சிவ‌ப்பு அணு‌க்க‌ள் அ‌ழி‌ந்து அவை பிலிரூபின் (
Spleen)
என்ற நிறப்பொருளாக உடலில் உற்பத்தி ஆகிறது. ரத்தத்தின் வழியே பிலிரூபின், பித்தநீர் மூலமாக மலம், சிறுநீர் வழியில் வெளியேறுகிறது.








webdunia photo
WD
கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ, பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ கழிவுப்பொருளான பிலிரூபின் உடலிலேயே தங்கிவிடுகிறது. இதனால்தான் உடலில் மஞ்சள் நிறம் ஏற்படுகிறது. மது அருந்துதலாலும், ஹெபடைட்டிஸ் கிருமிகள் கல்லீரலைத் தாக்குவதாலும் கூட மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.



ஒருவருக்கு `மஞ்சள் காமாலை' என்றால் வாந்தி, குமட்டல், பசியின்மை, உடல் சோர்வு, வயிற்றின் வலதுபக்க மேல்பாகத்தில் வலி, மூட்டுவலி, வயிறுவீக்கம், காய்ச்சல், ரத்தக்கசிவு என ஒன்பது விதமான அறிகுறிகள் காணப்படும்.



கண்ணின் வெள்ளைப்படலத்திலும், நாக்கின் அடிப்பகுதியிலும் மஞ்சளாக இருக்கும். உடலும் மெலிந்து காணப்படும்.



மஞ்சள் காமாலை என்பது அடைப்புக் காமாலை என்றும், அடைப்பில்லா காமாலை என்றும் இருவகைப்படும். அடைப்புக் காமாலையில் கணைய கோளாறு, பித்தக்குழாய் கற்கள், பித்தக்குழாய் புற்றுநோய் என்ற மூன்று உட்பிரிவும், அடைப்பில்லா காமாலையில் வைரஸ் கிருமிகள், அ‌திகமாக அரு‌ந்து‌ம் மதுபானம், ‌டைபாய்டு போ‌‌ன்ற கா‌ய்‌ச்சலை ஏ‌ற்படு‌த்து‌ம் பா‌க்டீ‌ரியா‌க்க‌ள், மலேரியா என்ற ஒட்டுண்ணிகள், ‌சில மா‌த்‌திரைக‌‌ள் போ‌ன்றவ‌ற்றாலு‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு ம‌ஞ்ச‌ள் காமாலை ஏ‌ற்படலா‌ம்.



கொழுப்புச் சத்துள்ள உணவை நாம் உட்கொள்ளும்போது அதை ஜீரணிப்பதற்காக கல்லீரல் பித்தநீரை சுரக்கிறது. இந்த நீர் பித்தபைக்கு குழாய் மூலம் வருகிறது. இந்த பித்தக் குழாயில் கல் மற்றும் கேன்சர் (
Cancer)
கட்டிகளா‌ல் அடைப்பு ஏற்படலாம். அப்படி அடைப்பு ஏற்பட்டால் பித்தநீர் கல்லீரலிலேயே தேங்கி ரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இது அடைப்பு காமாலை எனப்படுகிறது.



கல்லீரலை தாக்கும்
A,B,C,D,E,G
என்ற பலவகையான வைரஸ்களாலும் மஞ்சள் காமாலை ஏற்படலாம். மலேரியா காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் வந்தாலும் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வரலாம். மதுபானங்கள் அருந்துவதன் மூலமாகவும் மஞ்சள் காமாலை ஏ‌ற்படலா‌ம். இதனை அடை‌ப்‌பி‌ல்லா காமாலை எ‌ன்‌கிறா‌ர்க‌ள்.

எதுவாக இரு‌ந்தாலு‌ம் உ‌ரிய ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டியது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். வெறு‌ம் ‌கீழாநெ‌ல்‌லியு‌ம், ‌ப‌த்‌‌தியமு‌ம் போதாது.



அடை‌ப்பு காமாலை‌க்கு ‌சி‌றிய அள‌வி‌ல் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌‌ய்வது ‌மிகவு‌ம் மு‌க்‌கியமா‌கிறது. இதை‌த் த‌விர இத‌ற்கு ‌நிர‌ந்தர ‌சி‌கி‌ச்சை வேறு எது‌வு‌மி‌ல்லை.



எனவே, ம‌ஞ்ச‌ள் காமாலை ஏ‌ற்ப‌ட்டா‌ல் வெறு‌ம் ‌சிறு‌நீரக‌ம் ம‌ற்று‌ம் ர‌த்த‌த்தை ப‌ரிசோ‌தி‌ப்பதுட‌ன், வ‌யி‌ற்று‌ப் பகு‌தியை அதாவது க‌ல்‌லீரலை ‌ஸ்கே‌ன் செ‌ய்வது‌ம் அவ‌சியமா‌கிறது. அ‌ப்போதுதா‌ன் அடை‌ப்பு‌க் காமாலையை அடையாள‌ம் காண இயலு‌ம்.



இ‌ல்லையெ‌னி‌ல், ம‌ஞ்ச‌ள் காமாலை‌க்கு ‌சி‌கி‌ச்சை எடு‌த்து குணமடை‌ந்த ‌பிறகு ‌சில மாத‌ங்க‌ள் க‌‌ழி‌த்து க‌ல்‌லீர‌லி‌ல் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌வது ‌நி‌ச்சய‌ம். அ‌ப்போது அத‌ற்கு த‌னியாக ஒரு ‌சி‌கி‌ச்சை எடு‌த்து‌க் கொ‌ள்ள நே‌ரிடு‌ம்