Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

28.2.14

மன அழுத்தத்திற்கு யோகா சிறந்த மருந்து-(MANA AZHUTHATHIRUKU YOGA SIRANTHA MARUNTHU)


      மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், மன நோய் சார்ந்த பாதிப்பு உள்ளவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களுக்கும் யோகா சிறந்த நிவாரணம் அளிக்கிறது.

     உடலை மட்டுமல்லாமல் மனதையும் கட்டுப்படுத்தி சீராக வைத்துக் கொள்ளும் தன்மை யோகக் கலைக்கு உள்ளது. அந்த காலத்தில் யோகாவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் நோயற்ற வாழ்க்கை வாழ முடிந்தது. ஆனால் தற்போது யோகாவை ஒரு சிலரே கற்று பயிற்சி செய்து வருகின்றனர்.

      நாம் நன்றாகத்தானே இருக்கிறோம், நமக்கு எதற்கு யோகா என்று நினைத்தால் அது தவறு. நாம் செய்யும் ஒவ்வொரு செயலினாலும், நமது உடல் ஒரு பிரச்சினையை எதிர்கொள்கிறது. அதில் இருந்து நம்மைக் காக்க உதவுவது யோகாதான்.

      தற்போது, மன அழுத்த நோய் பாதித்தவர்களுக்கும் யோகக் கலை மூலமாக குணமளிக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

        மூளைக்கு செல்லும் நரம்புகளை சீராக்க உதவும் யோகாக்களை செய்வதன் மூலமும், மன அழுத்தத்தை குறைத்து, அமைதியை அளிக்கும் யோகாக்களையும் முறையான பயிற்சியோடு செய்வதன் மூலமும் நிச்சயம் மன நோயாளிகள் மறு வாழ்வு பெறலாம் என்பது உறுதி.

      முதுகு வலிக்கும் யோகா சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இந்தியாவில் யோகாவிற்கு அவ்வளவு வரவேற்பு இல்லாவிட்டாலும், தற்போது வெளிநாடுகள் பலவும் யோகா குறித்த ஆராய்ச்சிகளை மேம்படுத்தி வருகின்றன. மேலும், தங்கள் நாட்டு மக்களிடையே யோகா குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக