Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

30.8.22

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க(HOW TO INCREASE IMMUNITY)

நோய்_எதிர்ப்பு_சக்தி அதிகரிக்க


பசும்பால் மற்றும் கொழுப்பு நீக்கப்படாத பால் எடுத்துக்கொள்ளலாம்.

பெரிய நெல்லிக்காய், கொய்யாப்பழம்,கேரட்,பூண்டு, இஞ்சி,மஞ்சள் தூள்,கருஞ்சீரகம் , தயிர்,பார்லி, ஓட்ஸ்,கிரீன் டீ

டீ, காபி ( பால் இல்லாமல் )

சர்க்கரைவள்ளி கிழங்கு,காளான்

ப்ரொக்கோலி,கிவி பழம், எல்லாவகைபழங்கள்,பெர்ரி பழங்கள்

எலுமிச்சை,கீரைகள், காய்கறிகள்

சுருள்பாசி (ஸ்பைருலினா)

மஞ்சள் பட்டாணி, கொண்டைக்கடலை, 

நிலக்கடலை, பாதாம்,பிஸ்தா பருப்பு, 

துவரம் பருப்பு, பாசிப்பருப்பு ,சூரிய காந்தி விதை ,மீன், நண்டு, இறால்

சிக்கன், முட்டை, பால் ,மாம்பழம், 

பப்பாளி, வெண்பூசணி, தர்பூசணி,  

வெள்ளரிப்பிஞ்சு, சிட்ரிக் அமிலம் அதிகமுள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி 

பீன்ஸ், வெண்டைக்காய், பாகற்காய்

பச்சை நிறக் காய்கறிகள் அனைத்தும்.


தினம் இரண்டு எனபது அனுதினமும் காலை மாலை மலஜலம் கழிக்கும் பழக்கத்தை உண்டாக்கிக்கொண்டு மலச்சிக்கலில்லாமல் உடலைப்

பாதுகாத்துக் கொண்டால் நமக்கேற்படும் பல நோய்களைத் தவிர்க்க முடியும்.


 தினம் தோறும் மிளகு ரசம் சாப்பாட்டுடன் சேருங்கள் அல்லது ஒரு டம்ளர் அளவாவது குடியுங்கள்..


 தினமும் 4 மிளகுகள் வரை நன்றாக மென்று தின்று விட்டு வெந்நீர் குடியுங்கள்.


தினமும் காலை மாலை சூரிய உதய நேரம் மற்றும் அஸ்தமன நேரங்களில் வரும் சூரிய கதிர்வீச்சை சரீரத்தில் படும்படி பார்த்துக்கொள்ளுங்கள்


 பத்து துளசி இலைகள் மற்றும் நான்கு கிராம்பு இரண்டு வெற்றிலை நான்கு மிளகு போன்றவற்றை எல்லாம் இரண்டு டம்ளர் தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளராக வற்றிய உடன் அதனை நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை வீதம் தினமும் குடித்து வரலாம்.


சுடுநீரில் கல் உப்பு போட்டு வாய் கொப்புளித்து வரலாம்.


வாரம் இரண்டு என்பது வாரத்தில் இரண்டுநாள் நல்லெண்ணெய்க் குலியல் அதாவது சனிநீராடு என்ற வழக்கிற்கிணங்க சனிக்கிழமையும் அடுத்தது செவ்வாய் அல்லது புதன் கிழமை அன்றோ என ஏதாவது ஒரு நாளில் ஆக வரத்தில் இரண்டு நாட்களில் சுத்தமான நல்லெண்ணெயை தலையிலும் உடலிலும் தேய்த்து நல்லா கைக்கால் பிடிச்சிவிட்டு( மசாஜ் செய்து)

சுடுநீரில் குளித்து வருவதால் உடலின் சூட்டினைத்தவிர்த்து கண்களையும் பாதுகாக்கலாம் மசாஜ் செய்வதால் மேனி மெருகேற்றப்படுவது மட்டுமல்லாது கைக் கால்களைப் பிடித்துவிட்டு சுளுக்கெடுத்து நெட்டிப்பறிப்பதனாலும் நரம்புகளும் உடல் சதைகளும் நல்ல வலுப்பெறும்.உடல் உறமேறும்.


 மாதம் இரண்டு என்பது தன் மனைவிவுடன் மட்டும் குறைந்தபட்சம் மாதம் இருமுறை அதாவது பதினைந்து நாட்களுக்கொரு முறையாவது தாம்பத்ய உறவுகொண்டு அளவோடு மகிழ்தல் இருபாலருக்கும் நலம்.


வருடம் இரண்டு என்பது வருடத்தில் இருமுறை அதாவது ஆறு மாதத்திற்கொருமுறை இயற்கை மருத்தவ முறையில் பேதிமருந்துண்டு வயிற்றை சுத்தம் செய்தால் உடலில் உணவைசெரிக்க சுரக்கும் செரிமானசுரப்பிகள் நன்கு செயல்படவும் பெருங்குடலில் ஏற்படும் மலச்சிக்கல் தொல்லைகளுக்கும் ஒரு நல்ல தீர்வாகவும் அமைகிறது.

28.8.22

காரட் மருத்துவ குணம் -(CARROT MARUTHUVA GUNAM)

தாவரத் தங்கம் என்று நாம் அவ்வப்போது உணவில் பயன்படுத்துகின்ற ஒரு பொருளை அழைக்கிறார்கள். அது எந்தப் பொருள் தெரியுமா? காரட் தான் அது. காரட்டிற்கு தாவரத் தங்கம் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா.


தங்க நகை எப்படி நமது மேனிக்கு பளபளப்பினை தந்து அழகூட்டுகின்றதோ அவ்வாறு காரட்டை நாம் சாப்பிட்டு வந்தால் நமது மேனி பளபளப்பாகும் என்பதனால் தான் காரட்டிற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.

        அது மட்டுமல்ல வேறு எந்த காய் கனிக்கும் இல்லாத சிறப்பு குணம் காரட்டிற்கு மட்டுமே உள்ளது. உலகத்தில் இதுவரை மருந்தே கண்டு பிடிக்கப்படாத ஒரு நோய் உண்டென்றால் அது புற்று நோய் (கேன்சர்) தான். அந்த நோய் நமக்கு வராமல் செய்கின்ற ஆற்றல் வேறு எந்த காய் கறிக்கும் கிடையாது. அந்த சிறப்பு குணம் காரட்டிற்கு மட்டுமே உள்ளது. காரட்டில் கரோட்டின் என்கின்ற உயரிய சத்து உள்ளது தான் இதற்கு காரணமாகும். இதனை உயர்வாக சொல்வது என்றால் காரட்டில் பீட்டா கரோட்டின் என்கின்ற நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துகின்ற சத்து உள்ளது என்று சிறப்பித்து விஞ்ஞானிகள் கூறுவார்கள்.

        இந்த பீட்டா கரோட்டினின் உள்ள சிறப்பு அணுக் கூறுகள்தான் புற்று நோய்க்கு எதிரியாக இருந்து செயல்படுகின்றது. இந்த சமயத் தில் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். புற்று நோயை வரவிடாமல் செய்கின்ற ஆற்றல் மட்டும்தான் உள்ளதா? இல்லை-புற்று நோய் வந்தவர்களுக்கு குணம் அளிக்கின்ற ஆற்றல் காரட்டில் உள்ளதா? என்று நீங்கள் கேட்கலாம். காரட்டில் புற்று நோயை வரவிடாமல் செய்கின்ற நோய் தடுப்பு ஆற்றல் மட்டுமே உள்ளது.

          காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற சத்து வயிறு தொடர் பான எல்லாவித நோய்கள் அனைத்தையும் குணப்படுத்துகின்ற சக்தி பெற்றவை. உதாரணமாக பல காலமாக அல்சர் நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் காரட்டினை நன்கு சாறு பிழிந்து வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டால் போதும் வயிறு மற்றும் குடல் சம்மந்தமான நோய்கள் எல்லாம் குணம் அடைவதுடன் மறுபடியும் இதுபோன்ற பாதிப்புகள் வரவிடாமலும் செய்துவிடும் காரட்.

           சிலருக்கு வாயில் எப்போதும் துர்நாற்றம் இருந்து கொண்டே இருக் கும் எத்தனை தடவை பல் துலக்கினாலும் அந்த துர்நாற்றம் சிலரு க்கு போகவே போகாது. அதற்கு காரணம் வாயோ, பற்களோ அல்ல. வயிற்றிலிருக்கும் கோளாறுதான் காரணம். எனவே வயிறு குறைபாட்டை ஒழித்தால்தான் அந்த வாய் துர்நாற்றம் போகும். வாய் துர் நாற்றம் உள்ளவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு இனிப்பான செய்தி இது. வாரம் ஐந்து நாட்கள் மட்டும் காரட் சாறினை சர்க்கரை மற் றும் உப்பு எதுவுமின்றி அருந்தி வாருங்கள். அப்புறம் பாருங்கள் வாய் துர்நாற்றம் போயே போயிந்து என்று நீங்கள் சொல்வீர்கள்.

          காரட்டினை வாரத்தில் இரண்டு நாட்களாவது நமது சமையலில் பயன்படுத்துவது உடம்பிற்கு நல்லது. ஏனெனில் காரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியை தருகின்றது. காரட்டினை பச்சையாகவே நிறைய சாப்பிடலாம். பற்களில் கரை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக காரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கரைகள் போய்விடும். உங்களுக்கு தாங்க முடியாத பசியா? எதாவது கிடைத்தால் சாப்பிடலாம் என்று தோன்றுகின்றது… ஆனால் எதுவும் கிடைக்கவில்லை என்கின்ற சூழ்நிலையா? சற்றும் தயங்க வேண்டாம். அருகில் காய்கறி கடை உள்ளதா என்று பாருங்கள். ஒரே ஒரு காரட் வாங்கி பச்சையாக மென்று தின்று பாருங்கள். பசி காணாமல் போய் விடும். காய சண்டிகையின் தீரா பசியைகூட காரட் போக்கி விடும் சக்தி பெற்றது.

26.8.22

குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கல்_(HOME REMADY FOR BABIES CONSTIPATION)

குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கலைப் போக்கும் வீட்டு_வைத்தியம்


குழந்தைகளுக்கு மலச்சிக்கல் என்பது சொல்ல முடியாத ஒரு தொந்தரவு. மிகவும் கஷ்டப்படுவார்கள், அழுது கொண்டும் இருப்பார்கள். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கவும் மலச்சிக்கல் வந்தால் சரி செய்யவும் வீட்டு மருத்துவ முறைகள் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொண்டால் குழந்தைகளை இந்த மலச்சிக்கல் தொந்தரவுகளிலிருந்து பாதுகாக்கலாம்.

0_6 மாத குழந்தைகள்

தாய்ப்பாலை முறையான இடைவேளியில் சரியாக கொடுத்தாலே மலச்சிக்கல் தொந்தரவு வராது. இதனுடன் பாலூட்டும் தாய், கீரைகள், பூண்டு, காய்கறி, பழங்கள், கைக்குத்தல் அரிசி, சிறுதானியம், பருப்பு - பயறு வகைகள் போன்ற நல்ல தரமான உணவுகளை சாப்பிடுவதும் முக்கியம். இப்படி முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்றி வரும் தாய்மார்கள் பாலூட்டி வந்தாலே குழந்தைக்கு மலச்சிக்கல் தொந்தரவு இருக்காது.


6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளின் மலச்சிக்கல் தொந்தரவுகளை நீக்கும் வழிகள்

பாலூட்டும் தாய்மார்களின் உணவுப் பழக்கம் சரியாக இருக்க வேண்டும்.

தாயின் மனநிலை, மகிழ்ச்சியாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதும் முக்கியம்.

குழந்தை பாதுகாப்பான உணர்வை உணர்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள்.

தாயின் அரவணைப்பும் அன்பும் மிகவும் முக்கியம்.

ரப்பர் மேட்டில் குழந்தைகளைப் படுக்க வைக்க கூடாது.

மலச்சிக்கல்_நீங்க

1. திராட்சை சாறு

பச்சை திராட்சை அல்லது கறுப்பு திராட்சை - 8, எடுத்துக் கொள்ளவும்.

அரை மணி நேரம் சாதாரண தண்ணீரில் ஊறவைத்து நன்கு கழுவவும்.

பின்னர் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து, அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் இந்த 8 திராட்சைகளைப் போட்டு 1 மணி நேரம் அப்படியே விட்டு விடவும்.

திராட்சைகள் நன்கு ஊறி, பாதி வெந்து விடும்.

பின்னர், இந்த திராட்சைகளையும் 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு மத்தால் நன்கு மசித்து சாறு எடுக்கவும்.

இந்த சாறை வடிகட்டி, தினமும் குழந்தைகளுக்கு கொடுத்தால் மலச்சிக்கல் தொந்தரவுகள் இருக்கவே இருக்காது.


2. இளஞ்சூடான தண்ணீர் 

குழந்தைகளுக்கு எப்போதுமே இளஞ்சூடான தண்ணீரைக் கொடுக்க வேண்டும்.

ஜூஸ் கொடுத்தாலும் அதில் இளஞ்சூடான தண்ணீரைக் கலப்பது நல்லது.

போதுமான அளவு குழந்தைக்கு தண்ணீர் தருகிறீர்களா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

3. வாழைப்பழ கூழ்

வாழைப்பழத்தைக் கரண்டியால் நன்கு மசித்து கூழாக்கி அதில் டேட்ஸ் சிரப் ஊற்றிக் கொடுக்கலாம். தினமும் ½ கப் அளவுக்கு இதைக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கல் நீங்கிவிடும்.

4. சப்போட்டா கூழ்

சப்போட்டாவை பாதியாக அறிந்து மேலிருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு, ஸ்பூனால் அதன் சதைப்பகுதியை எடுத்து ஸ்பூனால் நன்கு மசித்துக் கொள்ளுங்கள். இதைக் குழந்தைக்கு கொடுத்து வர மலச்சிக்கல் இருக்காது.

5. உலர்திராட்சை டானிக்

உலர்திராட்சை - 15, எடுத்துக் கொள்ளவும்.நன்கு கழுவி விடவும்.

அரை டம்ளர் வெந்நீரில் உலர்திராட்சை 4 மணி நேரம் அல்லது இரவு முழுக்க ஊற விடவும்.

ஊறியதும் தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதை நன்கு வடிகட்டி, குழந்தைக்கு கொடுக்கவும்.

இதைத் தொடர்ந்து செய்தாலே குழந்தைகளுக்கு மலச்சிக்கல் தொந்தரவுகள் இருக்காது.

6. இளஞ்சூடான ஒத்தடம்

ஒத்தடம் பேக்கில் இளஞ்சூடான தண்ணீர் ஊற்றி அதைக் குழந்தைகளின் வயிற்று, முதுகு பகுதியில் ஒத்தி ஒத்தி ஒத்தடம் கொடுப்பது போல செய்யுங்கள்.

இதனாலும் மலச்சிக்கல் தொந்தரவு நீங்கும்.

7. பப்பாளி கூழ்

பப்பாளி கூழ் அவ்வப்போது குழந்தைகளுக்கு கொடுத்து வர மலச்சிக்கல் நீங்கிவிடும்.

8. கொய்யா ஜூஸ்

கொய்யா பழத்தை சிறிது சிறிதாக அறிந்து, விதை நீக்கி, ஜூஸ்home  எடுத்து வடிகட்டி ½ டம்ளர் அளவுக்கு குழந்தைக்கு கொடுக்க மலச்சிக்கல் நீங்கும்.

9. இஞ்சி டிரிங்க்

ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு, 1 டீஸ்பூன் தேன் கலந்து அரை டம்ளர் இளஞ்சூடான நீரில் கலந்து கொடுக்க மலச்சிக்கல் நீங்கும்.

இதை 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

10. ஆப்பிள்

ஆப்பிளை நன்கு கழுவித் தோலை நீக்கி கொள்ளுங்கள்.

ஆப்பிளை துண்டு துண்டாக அறிந்து கூழாக்கி கொண்டு, அதில் ஒரு ஸ்பூன் டேட்ஸ் சிரப் கலந்து குழந்தைக்கு கொடுக்க மலச்சிக்கல் நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க_(CONSTIPATION PROBLEM HOME REMEDIES)

மலச்சிக்கல் நீங்க


கீரை_சூப்

தேவையான_பொருட்கள்

அகத்திக் கீரை – ஒரு கைப்பிடி
வெந்தயக் கீரை – ஒரு கைப்பிடி
ஓமம் – 5 கிராம்
மிளகு – 5 கிராம்
சீரகம் – 5 கிராம்
பூண்டு – 5 கிராம்
காய்ந்த மிளகாய் – 3 எண்ணிக்கை
உப்பு – பெருங்காயம் தேவையான அளவு

தண்ணீர் அரை லிட்டர்

செய்முறை

உப்பு, பெருங்காயம் தவிர அனைத்தையும் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து, தேவையான அளவில் உப்பு, பெருங்காயம் சேர்த்துச் சாப்பிட, மலச்சிக்கல், வாயு, வயிற்று உப்புசம், குடற்புண் ஆகியன தீரும்.

உடலுக்கும் கால அட்டவணை உண்டு_(TIME TABLE FOR BODY)

 உடலுக்கும்_கால_அட்டவணை உண்டு

விடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.

காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.

இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.

இரவு 9 முதல் 11 வரை – உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.

இரவு 11 முதல் 1 வரை – பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.

இரவு 1 முதல் 3 வரை – கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.

21.8.22

இருமல் மற்றும் சளி _(GUAVA FOR COLD AND COUGH)

 

இந்த‌ இருமல் மற்றும் சளிப் பிரச்சனையில் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் இதிலிருந்து விரைவாக‌ விடு பட அற்புதமான எளிய வைத்தியம் 

முக்கால்வாசி பழுத்தும் கால் வாசி பழுக்கும் தருவாயில் இருக்கும் கொய்யா (Guava) பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நீங்கள் விரு ம்பியவாறு நான்காகவோ அல்ல‍து எட்டாகவோ வெட்டி துண்டு களாக எடுத்துக் கொள்ளுங்கள்.

சுத்த‍மான மிளகு எடுத்து அதனை மிக்ஸியில் போட்டு தூளாக அரைத்து ஒரு பதார்த்த‍ தட்டில் வைத்துக் கொள்ள வே ண்டும். (எக்காரணம் கொண்டும் கடையில் விற்கும் ரெடிமேட் மிளகுத் தூளை பயன்படுத்த‍க் கூடாது)

அதன்பிறகு வெட்டிய கொய்யா துண்டுகளை எடுத்து, இந்த மிளகுத் தூளில் தொட்டு அதனை அப்ப‍டியே எடுத்து சாப்பிட வேண்டும். 

இதைப்போலவே சாப்பிட்டு வந்தால், 

சளி தொலைந்துபோகும். 

நுரையீரலில் சளி இருந்தாலும் அந்த‌ சளி வெளியேறும், 

இருமல்  பிரச்சனையில் இருந்தும் நல்ல தீர்வு கிடைக்கும் .

16.8.22

கெட்ட கொலஸ்ட்ரால்_(BAD CHILESTROL)

விரைவில் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

தேவையான_பொருட்கள்

விதை இல்லாத பேரிச்சம் பழம் – 3-4

இஞ்சி சாறு- 2 டீஸ்பூன்

பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்களை கரைத்துவிடும்.

இஞ்சியில் உள்ள மருத்துவ குணத்தால், கொலஸ்ட்ரால் அளவு வேகமாக குறையும். ஏனெனில் இதில் உள்ள குறிப்பிட்ட அமிலம் உடலில் தேங்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைத்துவிடும்.


செய்முறை

முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.


உட்கொள்ளும்முறை


தயாரித்து வைத்துள்ள கலவையை தினமும் இரவில் உணவு உட்கொண்ட பின் சாப்பிட வேண்டும். இப்படி 2 மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் முழுமையாக கரைந்துவிடும்.


இந்த இயற்கை மருந்தை தொடர்ந்து உட்கொண்டு, அதோடு சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை செய்து வந்தால், அதிகப்படியான கொஸ்ட்ரால் குறையும். முக்கியமாக இந்த மருந்தை உட்கொண்டு வரும் போது, உணவுகளில் எண்ணெய் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

13.8.22

புடலங்காய் மருத்துவ குணங்கள்_(PUDALANGAI MARUTHUVA GUNANGAL)

 

புடலங்காயை ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகிறோம். இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் சாப்பிட்டு இடைவெளி விட்டு ஒரு மண்டலம் வரை சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும்.

எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

அதிக உடல் சூட்டால் மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டால் அவர்கள் புடலங்கொடியின் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் அதே அளவு கொத்தமல்லி சேர்த்து 300மிலி தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுப்படும்.

இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும் 2 தேக்கரண்டிவீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயநோய்கள் அனைத்தும் நீங்கும்.

புடலையின் வேரை கைப்பிடி எடுத்து மைய அரைத்து சில துளிஅளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால் மலமிளகி வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.

புடலங்காயை பொறியல் செய்து சாப்பிட நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள் புடலங்காயை எந்த வகையிலாவது சேர்த்துவர அனைத்து வகையான சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும்.

கடும் காய்ச்சல் உள்ளவர்கள் வெட்டிய புடலங்காய் 250கிராம் எடுத்து 300மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி 200மிலி குடித்தால் ஒரே நாளில் காய்ச்சல் இயற்கையாக நீங்கும்....

அதிமதுரம் மருத்துவ குணங்கள் -(ATHIMATHURAM MARUTHUVA GUNANGAL)

ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன.. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும்..

மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.

செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்...

அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

கல்லடைப்பு நீங்க...
ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

இருமல் நீங்க...

அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...
அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்­ரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.

மஞ்சள் காமாலை நீங்க...

அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும்.

சுகப் பிரசவத்திற்கு...

அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

தொண்டைக் கட்டு இருமல் சளிக்கு...
அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.

பெண் மலடு நீங்க...

பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க...

அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.

சூடு தணிந்து சுறுசுறுப்பாக...
சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்­ர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

ரத்த வாந்தி நிற்க...
அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.

தாய்ப்பால் பெருக....
போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.

வரட்டு இருமல் நீங்க...

அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்­ர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.

இளநரை நீக்க...

அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.

நெஞ்சுச் சளி நீங்க....

அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்­ரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.

இருமல் நீங்க...

அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..

மஞ்சள்காமாலை தீர...

அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.

தாது விருத்திக்கு...
அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.

கருத்தரிக்க உதவும்...

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 100 கிராம் எடுத்து தண்­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

வழுக்கை நீங்கி முடி வளர ....

அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும்.

தலைவலிகள் நீக்க...

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.

தொண்டை கரகரப்பு நீங்க...

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த...

பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.

மூச்சுக்கலை - சுவாசத்தின் மகத்துவம்.-(MOOCHUKALAI SUVASATHIN MAGATHUVAM)

               நமது உடலையும், உயிரையும் பிணைத்திருப்பதும், அவற்றை வளர்த்தெடுப்பதும் சுவாசம் என்றால் அது மிகையில்லை. மனித உடலில் உற்பத்தியாகும் 60-80 விழுக்காடு கழிவுகள் சுவாசத்தின் வழியேதான் வெளியேறுகிறது என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திராத தகவல்.

            இந்த தகவலை நவீன அறிவியலும் உறுதி செய்கிறது. நமது முன்னோர்கள் அறிவியல் வளராத ஒரு காலகட்டத்தில் சுவாசத்தின் அருமை பெருமைகள் உணர்ந்து தெளிந்து அதனை நெறிப் படுத்தும் ஒரு கலையினை காலம் காலமாய் வளர்த்தெடுத்திருக்கின்றனர்என்பது நாம் அனைவரும் ஆச்சர்யமும், பெருமிதமும் கொள்ளக் கூடிய ஒன்று..


              பிறந்த கணத்தில் இருந்து கடைசி மூச்சு வரையிலும் தொடர்ச்சியான வினைகளினால் ஆனதே நம் வாழ்க்கை. வினைகளும், அதன் எதிர் வினைகளுமே ஒருவரின் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கின்றன. இதனை நல்வினை, தீய வினை என பொதுவில் பகுத்தாலும்..இவற்றை உருவாக்குவதும், அதில் உழல்வதும் நமது மனமே!, உடலுக்கு ஆற்றல் தர ரத்தம் ஓடுவதைப் போல, உள்ளத்துக்கு ஆற்றல் தருகிறவை எண்ணங்கள்..

இந்த எண்ணங்களை இந்திய வேத மரபு சம்ஸ்காரங்கள் என்கிறது. இவற்றை அழிப்பதே ஞானத்தின் உயர்நிலை. இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை அகற்றி அதை வலுவேற்றுகிற சுவாசம், நமது எண்ணங்களையும் சீர்படுத்தி, தேவயற்றவைகளை அழித்து மனதை மேம்படுத்துகிறதென நம் முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். இதனை "துக்க நிவர்த்தி" என்கின்றனர்.

ஆச்சர்யமான தகவல்தானே..

                     அமைதியான மன நிலையில் நமது சுவாசம் எத்தகையதாய் இருக்கிறது, அதே நேரத்தில் துக்கம், பதட்டம், கொண்டாட்டம் போன்ற மன நிலைகளில் நமது சுவாசம் எத்தகையதாய் இருக்கிறது என்பதை இதுவரை கவனிக்கா விட்டாலும், இனி கவனித்துப் பாருங்கள்.

                   ஆம், சுவாசத்தின் துணை கொண்டு நமது எண்ணங்களையும் தூய்மை செய்திட முடியும் என்பதை நமது முன்னோர்கள் நிரூபித்திருக்கின்றனர். அத்தகைய வழி முறைகளை இந்த தொடரின் நெடுகே பகிர்ந்து கொள்கிறேன்.

11.8.22

சுகப்பிரசவம் ஏற்பட-(SUGAPRASAVAM YERPADA)


Image result for normal delivery images
பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகையில், உடல் வலி மறந்து உலகத்தின் அதிசிறந்த படைப்பாளியாக ஆகிவிட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய நெகிழ்வையும் ஒருசேர உணர இன்றைய காலகட்டத்தில் எத்தனை தாய்களால் முடிகிறது?



இயற்கையான சுகப்பிரசவம் நிகழ வாய்ப்பு இருக்கும் நிலையிலும்கூட அறுவைச் சிகிச்சை செய்யச் சொல்லும் வற்புறுத்தல்கள் மருத்துவர்கள், கர்ப்பிணிகள் என இரு தரப்பிலுமே மிகுதியாகிவிட்டன. சுகப்பிரசவம் நடப்பதில் பிரச்னை என்று வந்தால் மட்டுமே அறுவைச் சிகிச்சைக்குப் போக வேண்டும் என்கிற புரிதல் அனைத்து தாய்மார்களுக்கும் உருவாக வேண்டும்.

1 கருத்தரிப்பதற்கு முன் கலந்தாய்வு . . .

திருமணமாகி கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன் - மனைவி இருவரும் மருத்துவரிடம் ஒரு கலந்தாய்வுக்குச் செல்வது நல்லது. இந்தக் கலந்தாய்வில் பெண் மற்றும் அவரது கணவரின் குடும்பச் சூழல், குடும்ப வரலாறு ஆகியவற்றை மருத்துவர் தெரிந்துகொள்வதோடு, தம்பதியில் யாருக்கேனும் ஏதேனும் பரம்பரை நோயோ, பெண்ணுக்கு தைராய்டு, சர்க்கரை நோய், இதய நோய், ஹெபடைடிஸ் பி, ரத்த அழுத்தம், வலிப்பு நோய், ஹெச்.ஐ.வி. போன்ற நோய்களோ இருக்கின்றனவா என்பதையும் கண்டறிவார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பிரசவத்துக்கு ஒரு தம்பதி தயாராக இது உதவும்.

2 உணவை விரும்பு . . .

கருவுற்ற நாளில் இருந்து தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருக்கலாம். சிலருக்கு உடலில் நீர்ச் சத்து குறைந்து எடை குறையலாம். சுகப்பிரசவத்துக்கு தாயின் உடல்நிலை இன்றியமையாதது. அதேபோல், குழந்தையின் எடை 3 முதல் 3.5 கி.கி. வரை இருந்தால்தான் குழந்தையின் தலை வெளியே வர ஏதுவாக இருக்கும். இதனால், உணவு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம்.


3 எதைச் சாப்பிடலாம் . . .

முதல் மூன்று மாதங்களில் மசக்கை காரணமாக உணவை மனம் வெறுக்கும். இந்த நாட்களில்தான் உணவில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். திட உணவு எடுத்துக்கொள்ள முடியாத சூழலில் பழச்சாறு போன்ற திரவ உணவுகளையேனும் எடுத்துக்கொள்ள வேண்டும். இத்தகைய சமயங்களில்பெண்கள் உணவை வெறுத்தால், அதுவே ஊட்டச் சத்துக் குறைவை உருவாக்கி ரத்த சோகைக்கு வழிவகுத்து, குழந்தையின் ஆரோக்கியத்தையும் தாயின் உடல் - மன வலிமையையும் குறைத்துவிடும். ஆகவே, தொடக்கத்தில் இருந்தே நல்ல ஊட்டச் சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வது அவசியம். நீர்ச் சத்துக்கு இளநீர், வாந்தியை எதிர்கொள்ள மாதுளை, இரும்புச் சத்துக்குப் பேரீச்சை ஆகியவை இந்த நாட்களில் பேருதவி செய்யும். 4-வது மாதத்தில் இருந்து இரும்புச் சத்து மிக்க கீரை, காய்கள் மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், உடலில் இரும்புச் சத்தின் அளவு குறைந்தால் ஹீமோகுளோபினின் அளவும் குறையும். இந்த ஹீமோகுளோபின்தான் உடலின் பிற பாகங்களுக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்ல உதவுகிறது. இதன் அளவு குறையும்போது குழந்தைக்கும் தேவையான பிராண வாயு கிடைக்காமல் மூச்சுத் திணறல் ஏற்படும். இதனால் போதிய இரும்புச் சத்து உள்ள உணவுகளையோ, மாத்திரைகளையோ எடுத்துக்கொள்வது தேவையாகிறது. நார்ச் சத்துக்கள் நிரம்பியுள்ள காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால், மலச்சிக்கல் பிரச்னையை முறியடிக்க முடியும். கீரை, ஓட்ஸ், புதினா, உலர் திராட்சை, கொத்தமல்லி, பேரீச்சை போன்ற உணவுப் பொருட்களில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது. கொண்டைக்கடலை, ராஜ்மா, பயறு வகைகளில் கால்சியம், புரதச் சத்து அதிகம் இருக்கிறது. உருளை, கேரட், வேர்க்கடலை, பாதாம் பருப்பு வகைகளில் புரதம் இருக்கிறது. சர்க்கரைவள்ளிக்கிழங்கு, நூக்கோல் போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருக்கிறது. அன்றாட உணவில் இவற்றைச் சமச்சீரான விகிதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தது தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடித்தால், தாய்க்கு நல்லது. குறிப்பாக பனிக்குடத்துக்கு நல்லது!

4 குனி, வளை, நிமிர் . . .

சுகப்பிரசவத்திற்குப் பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுப்பது மிக மிக முக்கியமான ஒன்று. இது கையில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். சிறிய அளவுள்ள வளையல் பெரிய மணிக்கட்டு உள்ள கையில் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக்கொள்ளும். பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபடுவது நல்லது. அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும். மேலும், உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்ஃபின் என்கிற ஹார்மோன் சுரக்கும். இதனால், உடல் தசைகள் வலுப்பெற்று, குழந்தை சரியான நிலையில் இருக்கும். பெண்களின் பிறப்புறுப்பு நல்ல நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும். பிரசவமும் சுலபமாகும். தினமும் காலையில், முக்கால் மணி நேரம் மூச்சு இரைக்காதவாறு மெதுவாக நடக்கலாம்.

5 சபாஷ் சரியான எடை . . .

கர்ப்பமாக இருக்கும்போது பெண்களின் எடை 10 முதல் 12 கிலோ வரை கூடலாம். ஆனால், சில பெண்களுக்கு 15 கிலோவுக்கும் அதிகமாக எடை கூடும். இவர்களுக்கு இரட்டைக் குழந்தையாக இருக்கலாம் அல்லது குழந்தையின் எடை அதிகமாக இருக்கலாம். இவை இரண்டுமே இல்லை என்றால் உடலின் எந்தப் பகுதியிலோ நீர் கோத்திருக்கிறது என அர்த்தம். இதனால், கர்ப்பிணிகளின் கால் வீங்கிக் காணப்படும். பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் இருப்பது இயல்புதான். ஆனால், இந்த வீக்கம் கணுக்காலுக்குக் கீழே மட்டும் இருக்கும். அதுவும் நன்றாகத் தூங்கி எழுந்ததும் சரியாகிவிடும். அப்படி இல்லாமல் கணுக்காலைத் தாண்டியும் வீக்கம் இருந்தால் உப்பு அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். சிறுநீர்ப் பரிசோதனை மூலம் உப்பின் அளவைக் கண்டறிந்து, அதைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும். இத்துடன் ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் பேறுகாலத்தின்போது வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் குணப்படுத்த வேண்டியது அவசியம்.

6 படுக்கையும் உறக்கமும் . . .

கர்ப்பிணிகள் முதல் நான்கு மாதங்கள் மல்லாந்த நிலையில் படுக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு இடதுபுறமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்-சேய் இருவருக்கும் சாலச்சிறந்தது. இரவில் எட்டு மணி நேரத் தூக்கமும், பகலில் ஒரு மணி நேரத் தூக்கமும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியம். முதல் மூன்று மாதமும் கடைசி ஒரு மாதமும் தாம்பத்யத்தைத் தவிர்ப்பது நலம்.

7 ஒரே மருத்துவர் . . .

பொதுவாக முதல் 28 வாரங்களுக்கு மாதம் ஒரு முறையும் அதற்குப் பிறகு 28 முதல் 36 வாரங்கள் வரை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையும் 36-வது வாரம் முதல் பிரசவம் வரை வாரம் ஒரு முறையும் மருத்துவரிடம் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே ஒரே மருத்துவரை அணுகுவது நல்லது. நம் உடல்நிலையைப் பற்றிய அனைத்து விவரங்களும் தெளிவாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற சிகிச்சையை அளிக்க மருத்துவருக்கு எளிதாக இருக்கும்.

8 தவறாத மருந்துகள் . . .

தாய், சேய் இருவருக்கும் டெட்டனஸ் தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க நான்கு வார இடைவெளியில் இரண்டு தடவையாக ரண ஜன்னி ஊசி போடவேண்டும். ஃபோலிக் அமில மாத்திரைகளை திருமணமான முதலே பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில், இது கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு ஏற்படக் கூடிய சில பிறவிக் குறைபாடுகளைத் தடுக்கும். ரத்தசோகை பாதிப்பு உடையவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரை அல்லது ஊசி தேவைப்படலாம். தவிர, அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப தேவைப்படும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். இந்த மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்வது முக்கியம்.

9 கூடாது... கூடாது... கூடவே கூடாது . . .

வயிறு பெரிதாக பெரிதாக அதிக எடையைத் தூக்குவது, ஓடுவது, குடத்தை இடுப்பில் வைப்பது, நாற்காலியின் மீது ஏறுவது போன்ற கடுமையான செயல்களில் ஈடுபடவே கூடாது. தரையில் கால்களை நன்றாக ஊன்றி நடக்க வேண்டும். கால்களைத் தொங்கப் போட்டபடி உட்காரக் கூடாது. அடிக்கடி கால்களை நீட்டி, மடக்க வேண்டும். அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காரக் கூடாது. ஒரே மாதிரியான வேலைகளைத் தவிர்க்க வேண்டும். உடல் முழுவதுக்கும் அசைவு கொடுக்கக் கூடிய பல்வேறு வேலைகளில் ஈடுபட வேண்டும். இதனால் உடலில் தசைப்பிடிப்பு, கால்கள் மரத்துப்போதல் போன்றவை ஏற்படாமல் இருக்கும். ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இப்போதைய பெண்கள் பிரசவத்தின்போது காலை மடக்கவே மிகவும் கஷ்டப்படுகின்றனர். இந்திய டாய்லெட்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் கால்களை எளிதாக நீட்டி, மடக்க முடியும். நொறுக்குத் தீனிகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. தேவையற்ற பிரச்னைகளில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நலம். இது மனச் சங்கடங்களைத் தவிர்க்க உதவும்...

10 அகமே சுகம் . . .

தாயின் உடல்நலன் எவ்வளவு முக்கியமோ மனநலனும் அவ்வளவு முக்கியம் சுகப்பிரசவத்துக்கு. இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவத்துக்கு மிகப் பெரிய எதிரி பெண்களுக்குப் பிரசவ வலி மீது உருவாகி இருக்கும் பயம். இந்தப் பயத்தை எதிர்கொள்வதற்கு தாயும் தன்னளவில் தயாராக வேண்டும்; குடும்ப உறுப்பினர்களும் தாயைத் தயாராக்க வேண்டும். 'இது ஒரு பிரச்னையே இல்லை; உனக்கு எதுவென்றாலும் உதவ நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்’ என்று ஒவ்வொரு கட்டத்திலும் தாய்க்கு நம்பிக்கை அளிக்க குடும்பத்தினர் தவறக் கூடாது. தாயின் மனநிலையை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். தாயும் நல்ல உணவைப் போலவே நல்ல இசை, நல்ல புத்தகங்கள் என மனதை இதமாக வைத்துக்கொள்ளும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். கூடுமானவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்த்தல் நலம். தியானம் மனதை ஒருமுகப்படுத்த உதவுவதோடு தேவையில்லாத பயம் - கவலைகளை நீக்கி பிரசவத்தைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள உதவும்.

9.8.22

காகத்திற்கு உணவிடுவது ஏன்- (KAGATHIRKU UNAVU KODUPATHU YEN)


நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும். காரணம், நம்முடைய முன்னோர்கள் காகத்தின் வடிவில் வருவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காகத்திற்கு தினசரி உணவிடுகின்றனர்..

காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பது நம்பிக்கை. சனீஸ்வர பகவானின் வாகனமாகையால், காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களிலிருந்து விடுபடலாம்.

இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம். இதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. காகத்தை “ஆகாயத்தோட்டி என்பர். இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும்

இல்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும் இந்த இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதின் அடிப்படையிலும் உணவிடும் பழக்கம் வந்தது. எப்படியிருப்பினும், ஜீவகாருண்யம் மிக்க புண்ணியச்செயல் இது.

புதினா மருத்துவ குணம்-(PUTHINAVIN MARUTHUVA GUNANGAL)



புதினா ஒரு மருத்துவ மூலிகை:
                        புதினா Mentha spicata ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள் விரும்பி வளர்க்கின்றனர்..

புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.

                 புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.


                 ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினாக் கீரை குணப்படுத்துகிறது.


           புதினாக் கீரையை வீட்டுத் தோட்டத்திலும், தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம். புதினாக் கீரை வாங்கும்போது இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை மண்ணில் ஊன்றி வைத்தால் அவை தளிர்த்துப் புதிய இலைகளைக் கொடுக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.


     புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது. புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும். புதினாக்கீரையைக் கொண்டு ஓர் அருமையான பற்பொடி தயார் செய்யலாம். இந்தப் பற்பொடியை உபயோகித்து வந்தால் பல்லீரல் வேக்காடு, பல்லீரலில் இரத்தம் வருதல், பல் சொத்தை, பல் அசைவு இவைகளைக் குணப்படுத்தும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க இந்தப் பற்பொடி நன்கு பயன்படும்.


              இந்தப் பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள்வரை பல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியினாலும் பீடிக்கப்பட மாட்டார். எவ்வளவு பற்பொடி தேவையோ அந்த அளவிற்கு புதினாக்கீரையைக் கொண்டு வந்து இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் பார்த்து, அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.


          சருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து, உத்தேசமாக அந்த இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும். தூளான பின் எடுத்து, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து, வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தினசரி உபயோகித்து வந்தால் பற்கள் முத்தைப்போல பிரகாசிக்கும். பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.


4.8.22

ஆரோக்கிய வாழ்விற்கான பயிற்சிகள்.- (AAROKIYA VALVIRKANA VALIGAL)



உடற்பயிற்சி:
  • உலகில் வாழும் மக்கள் அனைவரும் எப்போதும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
  • நோயின்றி வாழ்ந்தால்தான் வாழ்வை நன்கு சுவைக்க முடியும்.
  • நோய் தோன்றிய பின் நோயை குணமாக்க பல வழிகளில் முயல்வதை விட  வருமுன் காப்பதே சிறந்தது என்பதை உணர்ந்து நோய் தோன்றுவதற்கு முன் உடலை வலுவுள்ளதாக வைத்துக் கொண்டால் நோய் அணுகாது.
  • இதற்கு உடற்பயிற்சியே இன்றியமையாதது.
  • உடற்பயிற்சி செய்ய ஏற்ற காலம் அதிகாலை மற்றும் மாலை ஆகும். ஆனால் அதிகாலையில் உடற்பயிற்சி செய்வது சிறந்தது.

உடற்பயிற்சியின் வகைகள்:
  • உள்ளுறுப்புப் பயிற்சிகள்
  • வெளியுறுப்புப் பயிற்சிகள்

வெளியுறுப்புப் பயிற்சிகள்:
  • மேனாட்டு முறைகள் பெரும்பாலும் வெளியுறுப்புப் பயிற்சிகளே ஆகும்.
  • தண்டால், பஸ்கி ஆகிய பயிற்சிகள் வெளியுறுப்புப் பயிற்சிகள் ‌ஆகும்.
  • இப்பயிற்சியினால் உடலின் சதைப் பகுதிகள் நன்கு பருத்துக் காணப்படும்....

உள்ளுறுப்புப் பயிற்சிகள்:
  • நம் நாட்டில் ‌ஆதிகாலத்திலிருந்தே ”யோகாசனப் பயிற்சிகள்” என்று சொல்லப்படும் உள்ளுறுப்புப் பயிற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.
  • இப்பயிற்சிகளினால் உடலில் வீண் சதைப்பகுதிகள் வளராமல் காக்கப்படுகின்றன.
  • இதனால் உடல் அளவுடன் வளர்ந்து அழகாக தோற்றமளிக்கும்.
  • உடலின் உள்ளுறுப்புகளாகிய நுரையீரல், இருதயம், ஜீரண உறுப்புகள் ஆகியவை பலம் பெறுகின்றன.
  • உடலில் உள்ள எல்லாப் பாகங்களுக்கும் இரத்தம் சீராகப் பாய்கிறது....
  • இதனால் சுறுசுறுப்பும் தெளிவும் உண்டாகும். மூளைப் பலப்படும். ஞாபகசக்தி அதிகரிக்கும்.

யோகாசனப் பயிற்சிகளைத் தொடங்கும் முன் கவனிக்க வேண்டியவை:
  • உணவு அருந்தி குறைந்தது ஆறு மணி நேரம் ஆகி இருக்க வேண்டும்.
  • காலைக் கடன்களை முடித்த பின்னரே பயிற்சியைத் தொடங்க வேண்டும்.
  • பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது எந்த நேரத்திலும் வாயினால் சுவாசம் விடக்கூடாது. மூக்கினால் மட்டுமே சுவாசிக்க வேண்டும்.
  • காற்றோட்டமான இடத்திலேயே பயிற்சி செய்ய வேண்டும்.
  • உடலில் காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற உடல் நலக்குறைவின் போது பயிற்சியை தடை செய்ய வேண்டும்.
  • ஆனால் குறிப்பிட்ட நோயைப் போக்குவதற்கு அந்நோய் இருக்கும் போதே செய்யலாம்

பத்மாசனம்:
  • இவ்வாசனம் ஜீரண சக்தியைப் பெருக்கி நல்ல பசியை உண்டாக்குகிறது.
  • தேக ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிறது.
  • கீழ்வாயுப் பிடிப்பைக் குணமாக்குகிறது. வாதபித்தங்களை சமநிலையில் வைக்கிறது.
  • நரம்புகளைத் தூய்மை செய்து வலுப்படுத்துகின்றது.
செய்யும் முறை:
  • முதலில் சமதளத்தில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.
  • இரு கால்களையும் முன்புறத்தில் நன்றாக நீட்டி வலதுக் காலை மடக்கி இரு கைகளால் தூக்கி இடது தொடையின் மீதும் இடதுக்காலை மடக்கி வலது தொடையின் மீதும் வைக்க வேண்டும்.
  • உடல் நன்கு நிமிர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.
  • இரண்டு கைகளையும் முறையே இரண்டு முழங்கால்களின் மீதும் வைக்க வேண்டும்.
  • முழங்கால்களும், தொடைகளும் பூமியில் நன்கு பொருந்தியிருக்க வேண்டும்.
  • இதுவே பத்மாசனம் ஆகும்.

புஜங்காசனம்:
  • முதுகெலும்பின் ‌ஆரோக்கியமே உடலாரோக்கியம் ஆகும்.
  • அவை நம் விருப்பப்படி வளையக் கூடியதாயும், இளமையாயும் இருக்க வேண்டும்.
  • அதற்கு இன்றியமையாதது புஜங்காசனமே ஆகும்.
  • இவை தொப்பை விழுவதைத் தடுக்கிறது.
  • நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் சக்தியை ரத்த அணுக்களுக்குக் கொடுக்கிறது.
செய்யும் முறை:
  • கால்களை நன்றாக நீட்டிக்கொண்டு குப்புறப்படுக்க வேண்டும்.
  • இரண்டு கைகளையும் தோள்பட்டை அருகிலும், உள்ளங்கை தரையிலும்  படும்படி வைக்க வேண்டும்.
  • மெதுவாக தலையை தூக்க வேண்டும். அதன்பிறகு கைகளை தரையில் நன்றாக ஊன்றிக்கொண்டு உடலின் மேற்புறத்தை தூக்க வேண்டும். தொப்புளுக்கு மேலுள்ள பாகங்கள் மட்டுமே நன்கு உயர்த்தப்பட வேண்டும்.
  • முதுகெலும்பைப் பின்புறம் நன்கு வளைக்க வேண்டும்.
  • இந்நிலை பாம்பு படமெடுத்தது போல் தோற்றமளிக்கும்.
  • இந்நிலையில் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் இருந்து மீண்டும் முன் நிலைக்கு வர வேண்டும்.

சலபாசனம்:
  • இப்பயிற்சி மலச்சிக்லைக் குணப்படுத்த உதவுகிறது.வயிற்றின் உள்ளுறுப்புகள் அதிக வலுப்பெறுகின்றன.
  • முதுகுத் தண்டு, நுரையீரல்ஆகியன பலம் பெறுகின்றன.
செய்யும் முறை:
  • முதலில் சமதளத்தில் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும்.
  • உள்ளங்கை மேல்நோக்கி இருக்குமாறு கைகளைப் பக்கவாட்டில் உடலோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • முகவாயைப் பூமியில் பதித்துக் கால்களை முதுகுப்புறம் தூக்க வேண்டும்.
  • உடல் விறைப்பாக இருக்க வேண்டும். இப்பயிற்சி செய்யும்போது முழங்கால்கள் மடங்கக்கூடாது.
  • தொப்புளுக்குக் கீழுள்ள பகுதிகளை மட்டும் எவ்வளவு உயரம் தூக்க முடியுமோ அவ்வளவு உயரம் தூக்க வேண்டும்.
  • சிறிது நேரம் அந்நிலையிலேயே வைக்க வேண்டும். ஆனால் களைப்படையும் வரைத் தூக்க வேண்டாம்.
  • இந்நிலை வெட்டுக்கிளித் தன் பின்புறத்தைத் தூக்கிக் கொண்டிருப்பது போல் காணப்படும்.
  • இதனால்தான் இப்பயிற்சிக்கு சலபாசனம் என்ற பெயர் வந்தது.

தனுராசனம்:
  • இப்பயிற்சி புஜங்காசனம், சலபாசனங்களின் தொடர்ச்சியே ஆகும்.இவ்விரண்டு பயிற்சிகளினால் உண்டாகும் பலனை தனுராசனம் பயிற்சிக் கொடுக்கிறது.
  • அதிகக் கொழுப்பை நீக்கி பருமனைக் குறைப்பது இதன் முக்கியத்துவம் ஆகும்.
  • கீழ்வாயு நோய் போன்ற பல நோய்களை நீக்கி நல்ல பசி உண்டாக்கி உடலை ஆரோக்கிய நிலையில் வைக்க உதவுகிறது.
செய்யும் முறை:
  • சமதளத்தில் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும்.
  • கால்களைப் பின்புறமாக மேலே தூக்க வேண்டும்.
  • கணுக்கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
  • கால்களைப் பின்னோக்கி ஒரே சீராக உதைத்து இழுக்க வேண்டும்.
  • இப்போது உடலின் முன்பகுதி பூமியிலிருந்து மேலெழும்.
  • உடலின் பாரம் முழுவதையும் வயிற்றுப் பகுதியே தாங்கும்.
  • இந்நிலையில் சிறிது நேரம் இருந்த பிறகு மெதுவாக தளர்த்தி ஓய்வெடுக்க வேண்டும்.
  • இவ்வமைப்பு வில்போலக் காணப்படும்.இதனால்தான் இப்பயிற்சிக்கு தனுராசனம் என்ற பெயர் வந்தது.

பஸ்சிமோத்தாசனம்:
  • இப்பயிற்சி வயிற்றுப் பகுதியில் உள்ள சதைப் பகுதிகளை நன்கு சுருக்கி இரைப்பைக்கு நல்லப் பயிற்சி அளிக்கிறது.
  • இரைப்பை நீரை அதிகப்படுத்துகிறது. அஜீரணத்தைப் போக்கி பசியை உண்டாக்குகிறது.
  • மூத்திரக் காய்கள், நுரையீரல், பித்தப்பை ஆகியவைகளை நன்கு வேலை செய்யத் தூண்டுகிறது.
  • நீரழிவு, மூலம் முதலிய நோய்களை குணப்படுத்துகிறது.
  • நல்லத் தூக்கத்தை அளித்துக் கெட்டக் கனவுகள் வராமல் தடுக்கிறது.
  • தொடை, கால்கள் இவற்றின் பின்புற சதைகளுக்கு வலுவூட்டுகின்றன.
செய்யும் முறை:
  • முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்.
  • தொடைகள், கால்கள் ஆகியவை பூமியில் நன்கு பொருந்தி இருக்க வேண்டும்.
  • கைகளை தலைக்கு பின்புறம் நன்றாக நீட்ட வேண்டும். கைகள் காதுகளுடன் ஒட்டியது போல் இருக்க வேண்டும்.
  • அவ்வாறே உடலின் மேல்பாகத்தை மெதுவாக உயர்த்த வேண்டும்.
  • உட்காரும் நிலை வந்தவுடன் மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும்.
  • இடுப்பு, முதுகு, கழுத்து, தலை ஆகியவை செங்குத்தாக இருக்க வேண்டும்.
  • அப்படியே முன்புறம் வளைய வேண்டும். கைகள் கால்களின் விரல்களை தொடும் வரை வளைய வேண்டும்.
  • முகம் முழங்கால்களில் இடிக்கும் வரை வளைவது நல்லது.
  • இந்நிலையில் சில நிமிடம் இருந்த பின் மெதுவாக முன் இருந்த நிலையை அடைய  வேண்டும்.
  • இப்பயிற்சியை மூன்று அல்லது நான்கு முறைகள் செய்ய வேண்டும்.

மயூராசனம்:
  • இப்பயிற்சி மிகவும் சிறந்தது. எத்தகைய வயிற்றுக் கோளாறுகளையும் நீக்க வல்லது.
  • இவை வயிற்றுப் பகுதியில் உள்ள சதைப் பகுதிகளை இறுக்கி ஜீரண உறுப்புகளுக்கு அதிக ரத்தம் கிடைக்கும் படி செய்கிறது.
  • நுரையீரல், பித்தப்பை, இரைப்பை, மூத்திரக் காய்கள் ஆகியவைகளை நன்கு வேலைசெய்யத் தூண்டுகிறது.
செய்யும் முறை:
  • முதலில் முழங்காலில் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
  • முழங்கையிலிருந்து இரு கைகளும் சேர்ந்திருக்கும் படி செங்குத்தாக நிறுத்த வேண்டும்.
  • விரல்கள் கால் பக்கம் நோக்கி இருக்கும் படி உள்ளங்கையை பூமியில் அழுத்த வேண்டும்.
  • மெதுவாக வயிற்றுப் பகுதியை முழங்கைகளின் மேல் தாங்கிக் கொள்ள வேண்டும்.
  • கால்களை உயர்த்தி நீட்ட  வேண்டும். இப்போது உடல் முழுவதும் முழங்கைகளின் மேல் நிற்கும். தலை முதல் கால் வரை பூமிக்கு இணையாக ஒரே கிடைமட்டமாக இருக்க வேண்டும்.
  • இந்நிலையில் ஐந்து நிமிடங்கள் இருக்க வேண்டும். இதுவே மயூராசனம் ஆகும்.

பாத ஹஸ்தாசனம்:
  • இப்பயிற்சியால் பஸ்சிமோத்தாசனத்தால் ஏற்படும் பலன்கள் யாவும் உண்டாகும்.
  • முதுகுத்தண்டு நன்கு நீண்டு வளையும் தன்மை பெற்று இளமையாகத் தோற்றமளிக்கிறது.
  • இதைத் தொடர்ந்து செய்து வந்தால் உயரம் அதிகமாகும். உடல் கனம் குறையும்.
செய்யும் முறை:
  • முதலில் நிமிர்ந்து நிற்க வேண்டும். இரு கைகளையும் தலைக்கு மேல் ஒட்டியிருக்கும் படி நன்கு நீட்ட வேண்டும்.
  • இருகால்களையும் சேர்த்து வைக்க வேண்டும். அப்படியே முன்புறம் மெதுவாகக் குனிய வேண்டும்.
  • கைகள் காதுகளை ஒட்டியே இருக்க வேண்டும்.
  • மெதுவாகக் கால் விரல்களைத் தொட வேண்டும். இப்பயிற்சி செய்யும் போது முழங்கால் மடங்கக் கூடாது.
  • இந்நிலையில் ஐந்து முதல் பத்து நிமிடம் இருக்க வேண்டும். இதுவே பாதஹஸ்தாசனம் ஆகும்.

ஹலாசனம்:
  • இப்பயிற்சியால் முதுகுப்புறத்தில் உள்ள சதைப் பகுதிகள் நன்கு இழுத்து விரிக்கப்படுகிறது.
  • இச்சதைகளே முதுகுத் தண்டை ஆரோக்கிய நிலையில் வைக்க உதவுகிறது.
  • தேக ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது இதன் முக்கியத்துவம் ஆகும்.
  • மேலும் நுரையீரல், கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்களையும் போக்க வல்லது.
செய்யும் முறை:
  • முதலில் நன்றாக மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்.
  • தொடைகளுக்கு அருகில் உள்ளங்கைகளை பூமியில் தொட்டுக்கொண்டிருக்கும் படி வைக்க வேண்டும்.
  • கால்களை வளைக்காமல் மேலே தூக்க வேண்டும்.
  • கை பூமியிலேயே பதிந்திருக்க வேண்டும்.
  • இடுப்பையும், முதுகையும்  மேலே தூக்க வேண்டும்.
  • கைகளை எடுக்காமல் கால்களைத் தலையின் பின்புறமாகக் கீழ்நோக்கி நகர்த்த வேண்டும்.
  • கால் விரல்கள் தலையின் பின்புறத்தில் தரையில் படும்வரை கீழே நிறுத்த வேண்டும்.
  • முழங்கால் வளையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கால்களும், தொடைகளும் ஒரே நேர்க்கோட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • இந்நிலையில் சில நிமிடங்கள் இருந்த பிறகு மீண்டும் மெதுவாக முன் நிலைக்கு வர வேண்டும்.
  • இப்பயிற்சியின் முடிவுநிலை கலப்பைப் போல் காட்சியளிக்கும்.
  • இதனால்தான் இப்பயிற்சிக்கு கலாசனம் என்ற பெயர் வந்தது.

சிராஸாசனம்:
  • தலை கீழாகவும் கால் மேலாகவும் நிற்கும் நிலையே சிரஸாசனம் ஆகும்.
  • இப்பயிற்சியால் ஏற்படும் பலன்கள் அதிகம்.
  • தலைகீழாக நிற்பதால் மூளைக்கு அதிக இரத்தம் செலுத்தப்படுகிறது.
  • மூளை, கண், காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் நீக்கப்படுகின்றன.
  • நரம்பு மண்டலம் முழுவதும் நன்கு தூண்டப்படுகிறது.
  • இப்பயிற்சி களைப்படைந்த நரம்புகளை மீண்டும் வலுவடையச் செய்கிறது.
  • உடலில் உள்ள பல நோய்களை நீக்குகிறது. இரத்தத்தை சுத்தம் செய்கிறது. நுரையீரல், மண்ணீரல், சிறுநீர் உறுப்புகள் ஆகியவற்றில் தொற்றும் நோய்களை குணப்படுத்துகிறது.
  • மேலும் ஆரம்ப காது கேளாத தன்மை, நீரழிவு, மூலம், ‌பயோரியா, மலச்சிக்கல் முதலியவற்றைப் போக்குகிறது. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.
  • பெண்களும் இதைச் சுலபமாக செய்யலாம். ஆனால் பெண்கள் மாதவிடாய் காலத்திலும், கருவுற்றிருக்கும் போதும் இப்பயிற்சியை மேற்கொள்ளக் கூடாது.
  • இப்பயிற்சி செய்வதால் மலட்டுத்தன்மை நீங்கும். ஞாபகசக்தி அதிகமாகும்.
செய்யும் முறை:
  • தலையின் நடுப்பகுதியை பூமியில் நன்கு பதியுமாறு வைக்க வேண்டும்.
  • இரண்டு கைகளையும் சேர்த்து தலையின் பின்புறம் வைக்க வேண்டும்.
  • கால்கள் மடிந்து இருக்க வேண்டும். முழங்கால்கள் பூமியில் தொட்டுக்கொண்டிருக்கலாம்.
  • மெதுவாக முதுகுத் தண்டை நிமிர்த்த வேண்டும்.ஓரளவு நேராக நிமிர்ந்த பின் மடங்கிய கால்களை நீட்ட வேண்டும்.
  • இப்பயிற்சியை மெதுவாக செய்ய வேண்டும். வேகமாகச் செய்தால் முழுப்பலனும் கிடைக்காது.
  • செங்குத்தாக நிற்கப் பழக வேண்டும். தொடக்கத்தில் இந்நிலையில் அரை நிமிடம் இருந்தால் போதும்.
  • ஆனால் நன்கு பழகிய பிறகு ஐந்து நிமிடங்கள் நிற்க வேண்டும்.

சர்வாங்காசனம்:
  • உடலின் எல்லா உறுப்புகளையுமே  தூண்டிப் பலப்படுத்தும் ஆசனம் என்பது இப்பெயரின் பொருள்.
  • ஆகவே ஆசனங்களில் இவை முக்கியமானது ஆகும். இப்பயிற்சி தைராய்டு சுரப்பிகளுக்கு அதிக இரத்தம் செல்லுமாறு செய்கிறது. அவைகளை தூண்டி உடலை நன்னிலையில் வைக்கிறது.
  • சிலர் தம் தீய பழக்கங்களினால் இளமையை இழக்கின்றார்கள். அவர்கள் இப்பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டால் இழந்த இளமையைத் திரும்பப் பெறலாம்.
  • மலச்சிக்கல், அபெண்டிஸிடீஸ், குடல் சம்பந்தமான வாத பித்த ரோகங்கள் முதலியவைகளைப் போக்கி, ஜீரண சக்தியை பெருக்கி உடலை நன்னிலையில் வைக்கிறது.
  • குஷ்ட நோய்க்கு அருமருந்து சர்வாங்காசனம் ஆகும்.
  • இப்பயிற்சி செய்யும்போது பாலைத் தவிர வேறு எதுவும் அருந்தக்கூடாது.
  • தைராய்டு சுரப்பிகள் அதிக தைராய்டு ரசத்தைச் சுரந்து நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
  • உடனே குணமாக வேண்டுமென்றால் காலையிலும் மாலையிலும் சூரிய ஒளி ஆனது தன் உடல் முழுவதும் படுமாறு செய்ய வேண்டும்.
செய்யும் முறை:
  • முதலில் நன்கு மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும்.
  • மெதுவாக கால்களை மேலே தூக்க வேண்டும். இரண்டு கால்களும் ஒட்டியே இருக்க வேண்டும்.
  • உடலின் மேல் பாகத்தை முறையே உயர்த்த வேண்டும். முழங்கைகளைக் கீழே நன்கு ஊன்றியப்படி முதுகுப்புறத்தில் கைகளைக் கொடுத்து உடலை நன்கு தாங்கிக்கொள்ள வேண்டும்.
  • கழுத்தின் பின்புறம், தலையின் பின்புறம், தோள்கள் ஆகியவை பூமியில் நன்கு பொருந்தியிருக்க வேண்டும். முகவாயை மார்பில் நன்கு அழுத்தி மார்போடு நன்குபொருந்தும்படி செய்ய வேண்டும்.
  • உடலின் மேல்பாகம், இடுப்பு, கால்கள்ஆகியவை செங்குத்தாக இருக்க வேண்டும்.
  • இந்நிலையில் சில நிமிடங்கள் இருந்த பிறகு மெதுவாக உடலை கீழே இறக்க வேண்டும்.
  • ஒரே சமயத்தில் அதிக நேரம் நிற்க முடியாவிட்டால் இரண்டு அல்லது மூன்று முறைகள் செய்யலாம்.

மத்ஸ்யாசனம்:
  • இப்பயிற்சி வயிற்றுச் சதைகளுக்கும், வயிற்றின் உட்புற உறுப்புகளுக்கும் சிறந்ததாகும்.
  • இப்பயிற்சி மூளையைத் தெளிவுப்படுத்தி தூண்டும்.
  • இப்பயிற்சியால் தைராய்டு சுரப்பிகள், பாரா தைராய்டு சுரப்பிகள் ஆகியவை தேவையான அளவு நல்ல இரத்தத்தைப் பெற்று  வேலையை சரியாக செய்கின்றது.
செய்யும் முறை:
  • முதலில் பத்மாசனத்தில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.
  • அவ்வாறே பின்புறம் சாய்ந்து படுத்துக்கொள்ள வேண்டும்.
  • பத்மாசனம் என்பது பூமியில் எப்போதும் பொருந்தியிருக்க வேண்டும். கால்களை மேலே தூக்கக்கூடாது.
  • பிறகு கைகளை பூமியில் அழுத்திக்கொண்டு உடலின் மேல்பாகத்தையும், தலையையும் தூக்க வேண்டும்.
  • தலையின் நடுப்பகுதியை தரையில் வைத்து உடலின் மேல்பாகத்தையும், கழுத்தையும் வெளி்ப்புறமாக நன்கு வளைக்க வேண்டும்.
  • கைகளால் கால் விரல்களைப் பிடிக்க வேண்டும். இதுவே மத்ஸ்யாசனம் ஆகும்.


திரிகோணாசனம்:
  • இப்பயிற்சியால் முதுகுத்தண்டும் அதனோடு சம்பந்தமான நரம்புகளும் தூண்டப்பட்டு வலுவடைகின்றன.
  • நல்ல பசியைத் தூண்டுகிறது. மலச்சிக்கலைத் தீர்க்கிறது. உடல் லேசாகிறது.
  • கால்களுக்கு பலமும், வளர்ச்சியும் உண்டாகின்றன.
  • இடுப்புப் பகுதி சுருங்கி வலிமையும், அழகும் பெறுகிறது. உடலும், முதுகும் நன்கு வளையும் தன்மைப் பெற்று எப்போதும் இளமையுடன் தோற்றமளிக்கிறது.
செய்யும் முறை:
  • முதலில் நிமிர்ந்து நிற்க வேண்டும்.
  • அதன் பிறகு இரு கைகளையும் இரு பக்கத்திலும் நீட்ட வேண்டும்.
  • கைகளும் தோள்களும் ஒரே நேராக இருக்க வேண்டும். அப்படியே இடப்புறம் வளைய வேண்டும்.
  • இடு்ப்பு இடப்புறம் நன்கு வளைய வேண்டும்.இடக்கை இடக்கால் விரல்களைத் தொடும் வரை மெதுவாக இடப்புறம் வளைய வேண்டும்.
  • அதன்பின் மெதுவாக முன் நிலையை அடைய வேண்டும்.
  • அதைப்போல் வலப்பக்கத்திலும் இப்பயிற்சியை செய்ய வேண்டும்.
  • நான்கு, ஐந்து முறைகள் இப்பயிற்சியை செய்ய வேண்டும். இதுவே திரிகோணாசனம் ஆகும்.

சவாசனம்:
  • எவ்வளவு களைப்பாய் இருந்தாலும் இவ்வாசனத்தை ஐந்து நிமிடம்  செய்தால் போதும் களைப்பு நீங்கி விடும்.
  • இப்பயிற்சி செய்வதால்  புத்துணர்ச்சயும், அதிக வலிமையும் உண்டாகும்.
  • இவை தளர்ந்த நரம்புகளை சீர்படுத்தி சுறுசுறுப்படையச் செய்யும்.
செய்யும் முறை:
  • முதலில் சமதளத்தில் மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும்.
  • கால்கள் நேராகவும் கைகள் பக்கவாட்டிலும் இருக்க வேண்டும்.
  • உடற்சதைகளை தளர்த்தி ஒரே சீராக மூச்சை விட வேண்டும்.
  • கண்களை மூடி கடவுளையே தியானம் செய்ய வேண்டும்.
  • கால்விரல்களில் இருந்து கால்கள், தொடைகள், இடுப்பு, மேல்பாகங்கள், கைகள், கழுத்து முதலிய ஒவ்வொரு உறுப்புகளையும் முறையாக தளர்த்த வேண்டும்.
  • இப்பயிற்சி செய்வதால் முழு அமைதியும், உடல் பாரம் குறைந்தது போலவும் தோன்றும்.
  • இதுவே சவாசனம் எனப்படும்.
பெரும்பாலும் நாம் பார்த்த பயிற்சிகள் யாவும் “உள்ளுறுப்புப் பயிற்சிகளே” ஆகும். உள்ளுறுப்புப் பயிற்சிகள் செய்வதால் உடலின் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தி உள்ளுறுப்புகளை ஆரோக்கிய நிலையில் வைக்கிறது. வெளியுறுப்புப் பயிற்சிகள் வெளிப்பாகத்தை நன்னிலையில் வைக்கிறது. உள்ளுறுப்புப் பயிற்சிகளையும், வெளியுறுப்புப் பயிற்சிகளையும் ஒரே நேரத்தில் செய்யக்கூடாது. ஆனால் ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம். இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வது எத்தகைய பலனையும் பெறாமல் உடலைக் கெடுத்துக் கொள்வதாகும். எனவே ஆரோக்கிய வாழ்விற்கான பயிற்சிகளை மேற்கொண்டு உலகில் நோயின்றி வாழ்வோம். வாழ்வில் வளம் பெறுவோம்.