Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

29.9.21

நைல்நதி உருவாகும் ஏரி-(



எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அழகிய பாகிர் தார் நகரில் உள்ளது அந்த பிரம்மாண்ட ஏரி. 

‘தானா ஏரி’ என்று அழைக்கப்படும் அந்த ராட்சத ஏரியின் பரப்பளவு சுமார் 3,600 சதுர கிலோ மீட்டர்கள். 

இந்த ஏரிக்குள் 37 தீவுகள் உள்ளன. 

இவை அனைத்தையும் விட முக்கியமான விஷயம், இந்த பிரம்மாண்ட ஏரியில் இருந்துதான் உலகின் நீளமான நைல் நதி உற்பத்தியாகிறது.


தானா ஏரியில் உள்ள தீவுகளில் சரித்திர மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த தேவாலயங்களும், மடாலயங்களும் உள்ளன. 

பல்வேறு நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்த தேவாலயங்களில் உலகின் பல அரிய ஓவியங்கள் உள்ளன. 

அந்த காலத்தில் புற உலகத் தொடர்பே இல்லாமல் தனித்திருந்ததால் எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற நாட்டின் அரிய கலைப் பொக்கிஷங்களையும், மதச் சின்னங்களையும் இங்கு பாதுகாத்து வைத்தனர். 

அக்காலத்தில் எத்தியோப்பியாவை ஆண்ட ஐந்து சக்கரவர்த்திகளின் உடல்களின் மிச்சங்களும் இங்குள்ள டாகா இஸ்டஃபேனஸ் என்ற தீவில் வைக்கப்பட்டுள்ளது.


பறவை நேசர்களுக்கும் தானா ஏரி ஒரு சொர்க்க பூமியாகத் திகழ்கிறது. 

காரணம், இந்த ஏரியின் கரைப் பகுதிகளில் பல்வேறு இனப் பறவைகள் காணப்படுகின்றன. 

உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் இங்கு ஏராளமான பறவைகள் வருகின்றன. 

எனவே ஏரி முழுவதும் ஆங்காங்கே காணப்படும் இந்த பல வண்ணப் பறவைகளைப் பார்த்துக் கொண்டே படகில் பயணம் செய்யும் அற்புதமான அனுபவத்திற்காக ஆண்டுதோறும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.


உலகின் நீளமான நைல் நதி இந்த தானா ஏரியில் இருந்துதான் தனது பயணத்தைத் தொடங்குகிறது. 

இங்கு தொடங்கி சூடானின் பாலைவனங்கள் வழியாகப் பயணித்து எகிப்து வரை செல்கிறது. 

தானா ஏரியில் இருந்து பிரிந்த இடத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் நைல் நதி வேகம் பிடிக்கத் தொடங்குகிறது. 

அப்பகுதியில் 40 மீட்டர் அகலத்தில் 45 அடி உயரத்தில் இருந்து பெரும் ஓசையுடன் விழும் நைல் நதி

27.9.21

கீழாநெல்லியின் மருத்துவக் குணங்கள்-(KEELANELLIUN MARUTHUVA GUNANGAL)


நமது கால்களுக்குக் கீழ் வளர்ந்தாலும், நம் தலையைக் காக்கக்கூடிய மூலிகைகள் பல உண்டு. எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தானாகவே வளர்வதால், எண்ணற்ற மருத்துவக் குணங்களைக்கொண்ட அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை. சின்ன உடல்நல பாதிப்பு என்றால்கூட, மருத்துவர்களிடம் ஓடிச்செல்லும் பழக்கம்தான் நம்மிடம் உள்ளது. மிகப் பெரிய நோய்களைக்கூட வீட்டில் இருந்தபடியே எளிதாகச் சரிசெய்யக்கூடிய  மூலிகைகள்  உண்டு. அப்படி ஓர் அற்புதமான மூலிகைக் கீரைதான் 'கீழாநெல்லி'.

இதற்கு  கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. இது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. நீர்நிலைகள், வயல் வரப்புகள் மற்றும் பாழ் நிலங்களில் வளரக்கூடியது. இதனுடைய இலைகள், புளியமரத்தின் இலைகளைப் போலவே இரண்டு வரிசைகளில் சிறியதாகக் காணப்படும். இதன் இலைகளுக்குக் கீழே, பூக்களும் காய்களும் அழகாக வரிசைகட்டி நிற்கும்.

கீழாநெல்லியின் இலைகளில் 'பில்லாந்தின்' என்னும் மூலப்பொருள் இருப்பதால், இதன் இலைகளில் கசப்புச்சுவை மிகுதியாக இருக்கும். பொட்டாசியம் சத்து அதிகமாகக் காணப்படும் தாவரங்களில் கீழாநெல்லியும் ஒன்று. இலைகளுக்குக் கீழே நெல்லிக்காயின் சிறிய வடிவமாக இதன் காய்கள் இருப்பதால்தான் இதை 'கீழாநெல்லி' என்று அழைக்கிறார்கள். இதேபோன்று இலைகளுக்கு மேலே காய் காணப்படும் மற்றொரு மூலிகைக்குப் பெயர் மேலாநெல்லி. இதுவும் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது என்கிறார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன். மேலும், கீழாநெல்லியை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்தும் விவரிக்கிறார்.

கீழாநெல்லியின் மருத்துவக் குணங்கள்:

மஞ்சள் காமாலை நோயைச் சரிசெய்யும். மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே.

இதற்கு சிறுநீரைப் பெருக்கும் சக்தி  உண்டு.

கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.

தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு.

இது கல்லீரல் சம்பந்தமான நோய்களைக்கூடச் சரிசெய்யும்.

சொறி, சிரங்கு போன்ற பிணிகளைப் போக்கும்

உடல்சூட்டால் உண்டான கட்டிகள், வீக்கங்கள் ஆகியவற்றைக்  கரைக்கும்.

ரத்தசோகையைச் சரிசெய்யும் .

கல்லீரல் பாதிப்புகளைத் தடுக்கும்.

மலட்டுத் தன்மையைப் போக்கும்.

சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி கீழாநெல்லிக்கு உண்டு.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.

கூந்தல் சம்பந்தமான பிரச்னைகளிலிருந்து நம்மை விடுவிக்கும்.

கீழாநெல்லியை எடுத்துக்கொள்ளும் முறை:

மஞ்சள் காமாலை

கீழாநெல்லி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான இலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மேலும் ஹெப்படைட்டிஸ் 'பி' மற்றும் 'சி' ஆல் உண்டாகும் கல்லீரல் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.

சர்க்கரை நோய்

உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களைத் தடுத்து டயாலிஸிஸ் செய்வதிலிருந்து நம்மைக் காக்கும்.

உடற்சூடு மற்றும் தொற்றுநோய்கள்

கீழாநெல்லியின் வேரை நன்றாக அரைத்து பசும்பாலுடன் கலந்து மூன்று வேளையும் குடித்துவந்தால், உடல் குளிர்ச்சி அடையும். தொற்று நோய்கள் நெருங்காது.

வயிற்றுப்புண்

1 டம்ளர் மோரில்,  கைப்பிடி அளவு அரைத்த கீழாநெல்லி இலையைக் கலந்து காலையில் குடித்துவர, வயிற்றுப்புண் மற்றும் வயிறு சம்பந்தமான அத்தனை பிரச்னைகளும் தீரும்.

தலைவலி

நல்லெண்ணெய் இரண்டு டீஸ்பூன், கீழாநெல்லி வேர், சீரகம் மற்றும் பசும்பால் ஆகியவற்றை நன்றாக அரைத்து வடிகட்டி அந்தச் சாற்றைக் குடித்தால் தலைவலி குணமடையும்.

சொறி, சிரங்கு

கீழாநெல்லி இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்து, குளித்து வந்தால் சொறி, சிரங்கு ஆகிய நோய்கள் சரியாகும்.

வெள்ளைப்படுதல்

கையளவு கீழாநெல்லி இலையை நன்றாக நசுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர், அதை மூன்று டம்ளர் நீரில் சேர்த்து ஒரு டம்ளர் நீராக வரும் அளவுக்குச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இதை காலை மாலை என இரு வேளைகளிலும் குடித்துவர வெள்ளைப்படுதல் நோய் குணமடையும்.

சீதமதி பித்த விடஞ் செவ்விழியி னோய்க் கூட்டம்
பூதமொடு பேயிரத்தப் போக்குகளும் -பூதலத்துட்
டாழ்வாய்ப் பணிந்தேகுந் தப்பாது நற்புலத்துக்
கீழ்வா யெனு நெல்லிக்கே!

என்று கீழாநெல்லியின் மகத்துவத்தை அகத்தியர் குணபாடம் விவரிக்கின்றது. இயற்கை, நோய்களைப் போக்கும் அதிஅற்புதமான மூலிகைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இயற்கை நமக்களித்த மூலிகைகளை நாம் சரியாகப் பயன்படுத்தி, நோய், நொடி இல்லாமல் வாழ்வோம்.

வறுத்த முட்டை மசாலா-(ROASTED EGG MASALA SEIMURAI IN TAMIL)


தேவையான பொருட்கள்:

எண்ணெய்
முழு மசாலா (இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய்)
பெருஞ்சீரகம் & சீரகம்
அரைத்த வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
அரைத்த தக்காளி - 4
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சீரகம் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
சுவைக்க உப்பு
தண்ணீர்
சர்க்கரை - 3/4 தேக்கரண்டி


முட்டைகளை வறுத்தெடுக்க:
எண்ணெய்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சுவைக்க உப்பு
வேகவைத்த முட்டை - 5

முறை:
1.  வாணலி  எடுத்து, சிறிது எண்ணெய், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் 1/2 தேக்கரண்டி உப்பு சேர்க்கவும்.

2. வேகவைத்த முட்டைகளை சிறு துண்டுகலாக்கவும்.

3. வாணலியில் முட்டைகளை போட்டு மசாலா முட்டையுல் முழுவதுமாக இறங்க அவற்றை 2 நிமிடங்கள் சிம்மில் வைக்கவும்.


4. அதே வாணலியில், சிறிது எண்ணெய் சேர்க்கவும்.

5. அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்க்கவும் - இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம் மற்றும் சீரகம்.

6. 3 அரைத்த வெங்காயம், 2 துண்டுகளை பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

7. வெங்காயம் பழுப்பு நிறமாக மாறியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலக்கவும்.

8. 4 அரைத்த தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

9. மசாலா தூள் - 2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி சீரக தூள், 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா, உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

10. சிறிது தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிக்கும் வரை மசாலாவை சமைக்கவும்.

11. சுவைகளை சமப்படுத்த 3/4 தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கவும்.

12. மசாலாவில் வறுத்த முட்டைகளை மெதுவாக சேர்த்து கலக்கவும்.

மிகவும் சுவையான மற்றும் எளிதான வறுத்த முட்டை மசாலா தயார்!

25.9.21

செட்டிநாடு காளான் மசாலா-(CHETTINAD MUSHROOM MASALA SEIMURAI IN TAMIL)






தேவையான பொருட்கள்

காளான் - 200 கிராம்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கம்மின் விதைகள் - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு
கொத்துமல்லி தழை

மசாலா விழுது அரைக்க

எண்ணெய்
கொத்தமல்லி விதை - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 4
பூண்டு
இஞ்சி
துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள்

செய்முறை

1. செட்டிநாடு காளான் மசாலா செய்ய ஒரு மசாலா விழுது அரைக்க வேண்டும், அதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் மல்லி விதை, சீரகம், சோம்பு, மிளகு, காய்ந்த சிவப்பு மிளகாய், பூண்டு பற்கள், இஞ்சி சேர்த்து நன்கு வறுக்கவும்.

2. துருவிய தேங்காயை இந்த கலவையில் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

3. இந்த வறுத்த கலவையை மிக்ஸியில் சேர்த்து இதனுடன் ஒரு துண்டு ஊறவைத்த புளி மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

4. காளான் மசாலா செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் கடுகு, சீரகம், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

5. வெங்காயம் பொன்னிறமானவுடன் இதில் பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

6. இந்த வதக்கியவற்றில் நறுக்கிய காளான் மற்றும் அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்கு கலக்கிய பின்பு கடாயை மூடி பத்து நிமிடத்திற்கு மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

7. சுவையான செட்டிநாடு காளான் மசாலா தயார்,.....

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் தவசு முருங்கை-(AASTHUMAAVAI KATTUPADUTHUM THAVASU MURUNGAI)




    தவசு முருங்கைச் செடி முழுவதுமே மருத்துவப் பலன்களைக்கொண்டது எனினும், இதன் இலைகள் சற்று சிறப்பு வாய்ந்தவை. இதன் இலைச்சாற்றை அருந்திவந்தால் இரைப்பு (ஆஸ்துமா), இருமல், ஜலதோஷம் குணமாகும்.


 குழந்தைகளுக்கு மழைக் காலத்தில் சளிப் பிடித்துக்கொள்ளும். இந்த சமயங்களில் தவசு முருங்கை இலைச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குழந்தைக்குக் கொடுக்கலாம்.

           இதன் இலைச்சாற்றை இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை என ஒரு வாரம் வரை பருகிவந்தால், இரைப்பு நோயின் தீவிரம் குறையும்.

       முழுச் செடியையும் நிழலில் உலர்த்தி, நன்றாகப் பொடித்துக்கொள்ள வேண்டும். எவ்வளவு பொடி இருக்கிறதோ அதே அளவுக்குச் சர்க்கரையும் சேர்த்து, நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். இப்போது, அரை தேக்கரண்டி தவசு முருங்கை மற்றும் சர்க்கரை கலந்த பொடியுடன், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து, நன்றாகக் குழைத்து காலை, மாலை என ஏழு நாட்களுக்கு சாப்பிட்டுவந்தால் சளி, இருமல் தொந்தரவுகள் நீங்கும்.

         தவசு முருங்கை இலைகளை இடித்து, வதக்கி அடிபட்ட காயம், வீக்கம் ஆகியவற்றின் மீது பற்று போட்டால், அவை விரைவில் குணமாகும்.

       தவசு முருங்கையின் இலைகள் மிகுந்த கசப்புச் சுவை கொண்டவை என்பதால், எப்போதும் தேன் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

       தவசு முருங்கையின் இலைச்சாற்றை 15-30 மி.லி எடுத்து அருந்திவந்தால், பெண்களுக்குப் பிரசவத்துக்குப் பின் கர்ப்பப்பையில் ஏற்படும் அழுக்குகள் நீங்கும்.

மாலைக்கண் நோயை தடுத்து, ஆஸ்துமாவை குணப்படுத்தும் பலாப்பழம்-(MAZHAI KANN AND ASTHUMA VQI GUNA PADUTHUM PAZHAPAZHAM)


       முக்கனிகளுள் ஒன்றான பலாப்பழம் பல மருத்துவகுணங்கள் கொண்டவை. பலாப்பழத்தை தினமும் சப்பிட்டு வந்தால், கண் பார்வையை சரிசெய்து, புற்று நோய், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவை வராமல் பாதுகாக்கும்.

பலாப்பழம் தினமும் சப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

புரதச்சத்து நிறைந்தது:

பலாப்பழத்தில் புரதச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டு வாருங்கள். மேலும் இது பருப்பு வகைகளுக்கு சிறந்த மாற்றாக விளங்கும். இதனால் பருப்புக்களின் மூலம் ஏற்படும் வாய்வுத் தொல்லையைத் தவிர்க்கலாம்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:

            பலாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்வதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் காய்ச்சல், சளி போன்றவை தாக்காமல் தடுக்கலாம்.

மலச்சிக்கலை போக்கும்:

          பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, முகம் பொலிவோடு இருக்கும். மேலும் இதில் உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.

புற்றுநோயைத் தடுக்கும்:

              பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், பைட்டோ நியூட்ரியன்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டு ஆகிய அமில சத்துக்கள் உள்ளன. இவை புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும்.

இரத்த அழுத்தத்தை குறைக்கும்:

            பலாப்பழத்தில் பொட்டாசிய சத்து அதிகம் இருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரிக்கும். இதனால் உடலில் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.

கண் பார்வையை மேம்படுத்தும்:

      பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அவை பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுப்பதோடு, கண்களில் புரை ஏற்படுவதையும் தடுக்கும். முக்கியமாக பலாப்பழத்தில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம் உள்ளது.

ஆஸ்துமாவை குணமாக்கும்:

                   ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள், பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். மேலும், இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், மாலைக்கண் நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

23.9.21

சத்துமாவு கஞ்சி தரும் உடலுக்கு ஆரோக்கியம் -(UDALUKKU AAROKIYAM THARUM SATHTHU MAAVU KANJI)

தேவையான பொருட்கள்

கம்பு - 100 கிராம், 

ராகி - 100 கிராம், 

கோதுமை - 100 கிராம், 

பச்சரிசி - 100 கிராம், 

உளுந்து - 100 கிராம், 

பாசிப்பயறு - 100 கிராம், 

கொள்ளு - 100 கிராம், 

வேர்க்கடலை - 100 கிராம், 

முந்திரி - 100 கிராம், 

பாதாம் - 100 கிராம், 

ஏலக்காய் - 100 கிராம், 

ஜவ்வரிசி - 100 கிராம், 

மக்காச் சோளம் - 100 கிராம், 

கொண்டக்கடலை - 100 கிராம், 

பொட்டுக்கடலை - 100 கிராம்.


மாவு தயாரிக்கும் முறை:

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக ஒரு வாணலியில் நன்கு வறுக்கவும். 

வறுத்தவுடன் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்சியில் (அ) மாவு அரைக்கும் இடத்தில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும்.

 மாவு ஆறிய உடன் மாவு சலிப்பானில் நன்கு சலித்து கொள்ளவும்.


சத்துமாவு கஞ்சி செய்முறை

சத்துமாவு - 2 ஸ்பூன்

பால் - 2 டம்ளர்

தண்ணீர் - 2 டம்ளர்

சர்க்கரை - தேவைக்கு 


ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சத்துமாவையும் சேர்த்து கட்டி படாமல் நன்கு கரைக்கவும்.

 கரைத்த இந்த கலவையை அடுப்பில் வைத்து கட்டியாகாமல் நன்கு கலக்கவும். சிறிது நேரத்தில் பாலை ஊற்றி நன்கு கலக்கி அதனுடன் சர்க்கரையையும் சேர்த்து கலக்கி இறக்கவும். 

அவ்வளவு தான் சுவையான, ஆரோக்கியமான சத்துமாவு கஞ்சி தயார்.