Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

11.11.22

சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்கள்-(SOTTRUKATRALAI MARUTHUVA GUNANGAL)சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்கள்-(SOTTRUKATRALAI MARUTHUVA GUNANGAL)



பயன்கள் :    சோற்றுக் கற்றாழை மடல்களைப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும்.

  •    கற்றாழையைக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

  •    சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.

  •       சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

  •   கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.

  •  கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செய்து எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.

  • மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரைக் கிலோ தயாரித்து ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசணயைக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும்.
  • முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
  • ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி மருந்து’ கற்றாழைச் சாறுதான்.
  • இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
  • தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மை போல் அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத்(Gel) தலை முடியில் தடவி சீவினால் முடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.
  • பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது.
  • முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.
  • கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.
  • கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.
  • தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது.
  • நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் C மற்றும் B சத்துகளும், தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.

  • சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.
  • இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.

21.10.22

தைராய்டு பிரச்சனை குணமாக,-(Cure thyroid problem)


கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போதைய மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால், ஏராளமானோருக்கு தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது.

பொதுவாக தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடலின் மெட்டபாலிசம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் வரக்கூடும்.

அவை ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு ஆகும். இங்கு இந்த தைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.


ஹைப்பர் தைராய்டு:

ஹைப்பர் தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியில் அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கும் நிலையாகும்.


அறிகுறிகள்:

* அதிகமாக வியர்ப்பது

* தும்மல்

* எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது

* நினைவாற்றல் பிரச்சனை

* மோசமான குடலியக்கம்

* படபடப்பு

* மன அழுத்தம்

* எடை குறைவு

* மாதவிடாய் பிரச்சனைகள்

* அதிகப்படியான சோர்வு


ஹைப்போ தைராய்டு:

ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியின் மோசமான செயல்பாட்டால், போதிய அளவு தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கப்படாத நிலையாகும்.


அறிகுறிகள்:

* நகங்களில் வெடிப்பு

* மலச்சிக்கல்

* உடல் பருமன்

* தசைப் பிடிப்புகள்

* மோசமான மாதவிடாய் கால இரத்தப் போக்கு

* கழுத்தின் முன் பகுதியில் வீக்கம்

* மிகுதியான களைப்பு

* நினைவாற்றல் பிரச்சனை

* வறட்சியான சருமம் மற்றும் தலைமுடி

* மன இறுக்கம்

தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்க ஓர் அற்புத நாட்டு மருந்து உள்ளது. அதை ஒருவர் உட்கொண்டு வந்தால், தைராய்டு பிரச்சனையை விரைவில் சரிசெய்யலாம்.


தேவையான பொருட்கள்:

பச்சை வால்நட்ஸ் – 40

தேன் – 1 கிலோ


செய்முறை:

வால்நட்ஸ் காயை துண்டுகளாக்கி கண்ணாடி பாட்டிலில் போட்டு, அதில் தேன் ஊற்றி, 40 நாட்கள் ஊற வைக்க வேண்டும். முக்கியமாக இந்த பாட்டிலை பகலில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் வைத்து, அவ்வப்போது பாட்டிலைக் குலுக்க வேண்டும். 40 நாட்கள் கழித்து, அதில் உள்ள வால்நட்ஸ் காயை நீக்கிவிட வேண்டும்.


உட்கொள்ளும் முறை:

இந்த தேனை தினமும் காலை மற்றும் மாலையில் 2 ஸ்பூன் சாப்பிட்டு வர, தைராய்டு பிரச்சனை விரைவில் குணமாகும். இப்போது இதன் இதர நன்மைகளைக் காண்போம்.


நன்மை 1

இதில் வைட்டமின் சி, அயோடின் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், இரத்த சோகை இருப்பவர்கள் தினமும் உட்கொண்டு வந்தால், சீக்கிரம் இரத்த சோகை நீங்கும்.


நன்மை 2

பச்சை வால்நட்ஸை தேனில் ஊற வைத்து, அந்த தேனை தினமும் சாப்பிடும் போது கல்லீரல், வயிறு மற்றும் இரத்தம் சுத்தமாகும்.


நன்மை 3

அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள், இதை சாப்பிட்டால் பலவீனமாக இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.


நன்மை 4

மாதவிடாய் காலத்தில் அதிக பிரச்சனையை சந்திக்கும் பெண்கள், பச்சை வால்நட்ஸ் ஊற வைத்த தேனை சாப்பிட்டால், பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.


நன்மை 5

முக்கியமாக இந்த தேன் சுவாச பாதை மற்றும் மூச்சுக் குழாயில் உள்ள பிரச்சனைகளைப் போக்கி, அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

20.10.22

அடிக்கடி தலைவலி வருகிறதா.-(ADIKADI THALAI VAZHI VARUKIRATHA)


அடிக்கடி தலைவலி வருகிறதா.. தலைவலிக்கு இதோ ஒர செலவில்லாத நிவாரணி!

நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும் சுவாசிக்க / காற்றை வெளியிட உபயோகிக்கிறோம். வலது துவாரம் சூரியனையும், இடது துவாரம் சந்திரனையும் குறிக்கிறது. தலைவலி வரும் போது, வலது துவாரத்தை மூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக்கவும். ஐந்தே நிமிட நேரத்தில் தலைவலி காணாமல் போய் விடும்..

மிகவும் களைப்பாக இருக்கிறதா? இடது துவாரத்தை மூடி, வலது துவாரம் வழியாக சுவாசிக்கவும். சிறிது நேரத்தில் களைப்பு போய் விடும்

5.10.22

பசியின்மை குறைய‌

 பசியின்மை குறைய‌ 

கீழ்கண்ட மூலிகைகளை முறைப்படி வறுத்து சூரணம் செய்து சாப்பிட்டு வந்தால் உள்காய்ச்சல், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குறையும்.

வால் மிளகு

வெள்ளை மிளகு

மிளகு


அறிகுறிகள்:

உள்காய்ச்சல்.

பசியின்மை.

ருசியின்மை.


தேவையான பொருள்கள்:


வெள்ளை மிளகு = 50 கிராம்

கடுகு = 25 கிராம்

வால் மிளகு = 100 கிராம்

சீரகம் = 25 கிராம்

மிளகு = 150 கிராம்

செய்முறை:


வெள்ளை மிளகையும், வால் மிளகையும் மண் பாத்திரத்தில் போட்டு சிறிது நெய்யை விட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.

கடுகை மண் பாத்திரத்தில் போட்டு தூய நீரை விட்டு கழுவி நிழலில் உலர்த்தி எடுத்து 50 மி.லி நெய்யை விட்டு வெடிக்க விட்டு எடுத்து கொள்ளவும்.

சீரகத்தை மண் பாத்திரத்தில் போட்டு இளஞ்சூடாக்கி கொள்ளவும். மிளகை மண் பாத்திரத்தில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

எல்லாவற்றையும் உரலில் போட்டு நன்கு இடித்து நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து நன்றாக பொடியாக்கி கொள்ளவும்.

உபயோகிக்கும் முறை:

இந்த சூரணத்தை தேவைக்கேற்ப எடுத்து சுடு சோற்றில் கலந்து சாப்பிட்டு வரவும். ஒரு நாளைக்கு ஒரு முறையாக 7 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் உள்காய்ச்சல், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குறையும்.


24.9.22

சுகர் உள்ளவர்களுக்கு உணவு அட்டவணை(Food chart for diabetic paitent)

 நீரிழிவு (சக்கரை) நோய் உள்ளவர்களுக்கு



சாப்பிடக் கூடாதவை


நுங்கு,சர்க்கரை, சாக்லெட், கரும்புஜஸ் கிரீம், பால்கட்டி (பன்னீர்),மாம்பழம், சீத்தாபழம், பலாப்பழம்,சப்போட்டா,வாழைப்பழம்,காம்பளான்,திரட்டுப்பால்,குளுகோஸ்,சேப்பங்கிழங்கு,உருளைக்கிழங்கு, சக்கரைவள்ளி கிழங்கு, உலர்ந்த திராட்சை,குளிர் பானங்கள்


அளவோடு சாப்பிடலாம்.


அரிசி,அவல்,ஓட்ஸ்,சோளம்,கேழ்வரகு,கோதுமை,பார்லி,அரிசிவேர்க்கடலை,பாதாம்பருப்பு,முந்திரிபருப்பு, மக்காச்சோளம்


அளவில்லாமல்_சாப்பிடலாம்.

கீரை,தக்காளி,காராமணி,வாழைத்தண்டு,வாழைப்பூ , பாகற்காய், சுரைக்காய்

பீர்க்கங்காய்,வெங்காயம்,கத்தரிக்காய், பூசணிக்காய்,அவரைக்காய், பப்பாளிக்காய்

கோவைக்காய்,வெள்ளரிக்காய்,வெண்டைக்காய்,முருங்கைக்காய்,கொத்தவரங்காய், சீமைகத்தரிக்காய்,முட்டைகோஸ், வெள்ளை முள்ளங்கி .....


x

23.9.22

ஃபுளூ (இன்ஃபுளுவென்சா) அறிகுறிகள்-(SYMPTOMS OF FLU/INFLUENZA)

 Influenza இது ஒரு வகையான வைரஸ் கிருமி...corona  மாதிரி பயம் வேண்டாம்....

சதாரண காய்ச்சல் மற்றும் Influenza காய்ச்சல் வேறுபாடு 


சதாரண காய்ச்சல்:

இருமல், தும்மல், காய்ச்சல் மற்றும் சளி ஒழுகுதல் இருக்கும். இதற்கு சதாரண சளி, காய்ச்சல்  மருந்து கொடுத்தால் போதும்...

ஃபுளூ (இன்ஃபுளுவென்சா):

இந்த அறிகுறிகள் இருந்தால் அது Category1

102.4F அல்லது அதற்கு மேலே உள்ள திடீர் காய்ச்சல்.

தொண்டை வலி அல்லது கரகரப்பு.

பசியின்மை.

தலைவலி.

வறட்டு இருமல்.

வயிற்றுப்போக்கு.

குமட்டல்.

மூக்கடைப்பு. 

இந்த  அறிகுறிகள் இருந்தால் 5 வயதிற்கு  கீழ்  உள்ளவர்கள்  மற்றும் 65 வயதிற்கு  மேல் உள்ளவர்கள், சர்க்கரை, உடல் பருமன், இதயத்தில் problem உள்ளவர்கள்  உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்...இவ்வாறு இருந்தால் அது  category 2 ஃபுளூ (இன்ஃபுளுவென்சா).


Category 3 ஃபுளூ (இன்ஃபுளுவென்சா) உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல், இரத்த ஓட்டம் குறைபாடு மற்றும்  மற்ற உறுப்பு பாதிப்பு உள்ளவர்கள்  உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தகுந்த சிகிச்சை பெற்று கொள்ளலாம்..


22.9.22

இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம் - IDUPPU VALI NENGA IYARAKAI VAITHIYAM - BACK PAIN PROBLEM



இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்று சந்திக்கும் ஒரு பிரச்சனை இடுப்புவலி....

இடுப்பு வலி ஏற்டுவதற்கு என்ன காரணம்?

அதிகபட்ச நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு ஏற்படுகிறது. குறிப்பாக கணினியின் முன்பு அமர்ந்து வேலை செய்யும் இளைய தலைமுறைகள் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்புவயால் துடித்துப் போகின்றனர்...

காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே கணினியின் முன்பு அமர்ந்திருப்பதுதான்.

இதற்குத் தீர்வு என்ன?

அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம். சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை பயன்படுத்த வேண்டும். கணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்க வேண்டும்.

அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும், மேசையின் உயரத்திற்கு தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும். பணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

சரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும்.
தொடர்ச்சியாக கணினியின் முன்பு அமர்ந்து பணியாற்றுவதால் இடுப்புப்பகுதியில் சதைகள் அழுத்தப்பட்டு, முதுகுத் தண்டின் சவ்வில் தேய்மானம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். இதனால் தாங்க முடியாத இடுப்பு வலி ஏற்படும்.

தொடர்ச்சியாக இதே நிலை நீடித்தால், இறுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே வரும் முன் காப்பதே சிறந்த வழி. மேற்கொண்ட முறைகளை நடைமுறைப்படுத்த, விரைவில் இடுப்பு வலியிலிருந்து மீள முடியும்.

இடுப்பு வலியை குணமாக்கும் கொள்ளு...

கொள்ளு பல பிரச்னைகளைத் தீர்க்கும் ஒரு இயற்கை உணவுப் பொருள். கிராமங்களில் அதிகமாக இது கிடைக்கும்.

கொள்ளு ரசம் வைத்து குடிக்க இடுப்பு வலி பறந்து போகும். உடல் பருமனாக உள்ளவர்கள் கொள்ளை வாரம் மூன்று முறை சேர்க்க உடல் தசைகள் இறுகி, ஒரு ஆரோக்கியமான உடல் வாகை பெற முடியும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.

பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும் இடுப்பு வலியும் ஏற்படுவது இயற்கை. இந்த வலிகளைப் போக்க வெந்தயத்துடன் நூறு கிராம் அளவுக்கு வெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை கலந்து சாப்பிட வயிற்றுவலி, இடுப்பு வலி நீங்கும்.

வெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட இடுப்புவலி பெருமளவு குறைந்துவிடும்.

இளம்பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:

நீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன் மூலம் கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும். ஹைஹீல்ஸ் அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி ஏற்படும்.

மிளகை பொன் வறுவலாக வறுத்து அதில் எள் எண்ணையை கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும்.

தளுதாளி இலையுடன் பூண்டு, எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) சேர்த்து துவையல் செய்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும்.

20.9.22

முழங்கால் வலி போக இயற்கை மருத்துவம் -(HOME REMEDIES FOR KNEE PAIN)

 தேவையான_பொருட்கள


முருங்கைக் கீரை - ஒரு கைப்புடி அளவு,

மிளகு தூள் - சிறிதளவு,

மஞ்சள் தூள் - சிறிதளவு,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

சுத்தப்படுத்த‍ப்பட்ட‍ முருங்கைக் கீரை எடுத்து பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

மேலும் இதனுடன் சிறிதளவு மிளகு த்தூள், மஞ்சத்தூள் மற்றும் தேவையான அளவு உப்புசேர்த்து நன்றாக வேகவைத்து பாதி சூட்டில் சாப்பிடவேண்டும்.

 இவ்வாறு 15 நாட்கள் வரை தொடர்ச்சியாக சாப்பிட்டு வரவேண்டும்.

18.9.22

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படும் காயங்கள் விரைவில் ஆறிட-(SARKARAI NOI ULAVARGALUKU

100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 3-5 நாள் வெயிலில் வைக்கவும்.

நன்றாக சாரு எண்ணெயில் இறங்கிவிடும் .பிறகு ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி பூவை பிழிந்து எடுத்துவிடவும் .

இப்போது பாட்டிலில் எண்ணெய்யை பத்திரமாக வைத்துக்கொண்டு மேல் பூச்சாக உபயோகப்படுத்தவும் .

நாள்பட்ட பெரிய புண்ணையும் எந்நிலையில் ஆற்றிடும் தன்மை வாய்ந்தது.

இது கடுமையான விஷம் ,மிகவும் கவனமாக மேல் பூச்சாக மட்டும் உபயோகப்படுத்தவும் .குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

16.9.22

இரண்டு முட்டாள் ஆடுகள் -(TAMIL MORAL STORY FOR KIDS )

ஒரு காட்டு பகுதியில ஒரு வெள்ளை ஆடு நடந்து போய்கிட்டு இருந்துச்சு ,அப்ப அங்க ஒரு ஆறு குறுக்கிட்டுச்சுஅந்த ஆத்த எப்படி கடக்குறதுனு பாத்த ஆட்டுக்கு அங்க இருக்குற ஒரு பாலம் கண்ணுல பட்டுச்சு.

உடனே பாலத்து வழியா நடக்க ஆரம்பிச்சது ,அப்பத்தான் பத்தாது பலத்தோட அடுத்த முனை வழியா ஒரு கருப்பு ஆடு நடந்து வந்துகிட்டு இருந்துச்சு.

அந்த பாலம் ரொம்ப சின்னதா இருந்தது ஒரு நேரத்துல ஒரு ஆடு மட்டுமே அதுல நடக்க முடியுற அளவுக்கு சின்னதா பாலம் இருந்துச்சு.

உடனே இந்த வெள்ளை ஆடு சொல்லுச்சு “ஏ கறுப்பாடே நீ கொஞ்சம் நில்லு நான் பாலத்த தாண்டுனதுக்கு அப்புறமா நீ தாண்டுனு சொல்லுச்சு

இத கேட்ட கறுப்பாடு சொல்லுச்சு நான் தான் இந்த பாலத்த முதல்ல பாத்தேன் அதனால நீ நில்லு நான் கடந்துக்கிறேன்னு சொல்லுச்சு

இத கேட்ட வெள்ளாடு நான் தான் இந்த பாலத்துல முதல்ல நடக்க ஆரம்பிச்சேன் அதனால நான் தான் இந்த பாலத்துல முதல்ல நடந்து ஆத்த கடப்பேனு சொல்லுச்சு

ரெண்டு ஆடுகளும் இப்படி சண்டை போட்டுக்கிட்டே பாலத்தோட நடு பகுதிக்கு வந்துச்சுங்க

அப்ப ரெண்டு ஆடுகளும் ஒரே நேரத்துல பாலத்த கடக்க நினைச்சப்ப கால் நழுவி ரெண்டு ஆடுகளுமே ஆத்துக்குள்ள விழுந்துடுச்சுங்க

அப்பத்தான் ரெண்டு ஆடுகளும் நினச்சதுங்க நாம ஒருதராச்சும் விட்டு கொடுத்திருந்தா இன்னேரம் பாலத்த கடந்து நல்ல படியா இருந்திருக்கலாமேன்னு...

நீதி :- விட்டு கொடுக்கிறவர் கெட்டு போவதில்லை



14.9.22

வெள்ளரிக்காய் மருத்துவக் குணங்கள்-(VELARIKKAI MARUTHUVA GUNANGAL).


     வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும்.

 வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு.

இவற்றைவிட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல்இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.

              செரிமானம் தீவிரமாகும், பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேச ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

               புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு.

            மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.

          நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல.


        காய்கறிகளுள்ளே குறைவான சக்தி / கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும் கலோரி 18 தான்.

          விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்; ஆனால், மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்; பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர்.

 வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத்தனிச்சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப்பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.

வாதநோய்கள் குணமாகும்!

           இக்காய் பித்த நீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.

          அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை, வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமை மிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.

ஆந்திரர்களின் வெள்ளரிக்காய் பிரியம்!

              ஆந்திர உணவில் எப்போதும் வெள்ளரிக்காயும் பாசிப்பருப்பும் கலந்து தயாரிக்கப்படும் பச்சடி உண்டு. காரணம், ஆந்திர சமையலில் காரம் அதிகம். 100 கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது. அது உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தி இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வைக்கிறது. மீதி நான்கு சதவிகிதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ‘பி’ ஆகியவை அமைந்துள்ளன; வைட்டமின் ‘சி’யும் சிறிதளவு உண்டு.

  வெள்ளரிக்காய் சாறு /ஜுஸ் சாப்பிடுவதுண்டா?

               சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், வெள்ளரிக் காய்களை மிக்ஸி மூலம் சாறாக்கியும் அருந்தலாம்.
இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச்சாறு திகழ்கிறது.
             வெள்ளரியைச் சமைத்துச் சாப்பிடும்போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்துவிடுகின்றன. எனவே, வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

          வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச்சாறு அருந்தினால் குணம் தெரியும்.

காலரா- பேதி/வயிற்றோட்டம் குணமாகும்!
         பேதி நோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒரு மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்தவேண்டும்.
தோல் பளபளப்பாக…
       வறண்ட தோல், காய்ந்துவிட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் கிடக்கும் காலத்தில் தினமும் வெள்ளரிக்காய்ச்சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.
சிறந்த சத்துணவு இது?
          தினமும் மிகச் சிறந்த சத்துணவு போல் சாப்பிடத் தயிரில் வெள்ளரிக்காய்த் துண்டுகளை நறுக்கிப் போடவும். அத்துடன் காரட், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும போட்டு வைத்து மரக்கறி சாலட் போல் பரிமாறவேண்டும். அது இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சத்துணவு கிடைக்கச்செய்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்புச்சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கச் செய்யும்.
இரத்த அழுத்தம் குறையும்!
              இக்காயில் உள்ள சுண்ணாம்புச்சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.
            மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக் காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.


பருக்கள் மறைந்துவிடும்!
           முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூச வேண்டும். பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்க வேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும். பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.
உடல் எடை குறையும்!
              நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக்காய் என்றாலும் பெரிய வகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன்தான் அரைத்துச் சாறு அருந்த வேண்டும். இதனால் ஆண்மை பெருகும்.
முடி நன்கு வளர எளிய வழி:

             முடி வளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும். வெள்ளரியில் உள்ள உயர்தரமான சிலிகானும், கந்தகமும் முடிவளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட்சாறு, இரு தேக்கரண்டி பசலைக்கீரைச்சாறு, பச்சடிக்கீரைச்சாறு போன்றவற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.

               காரட் கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில்ன தோல் பகுதி அருகில்தான் தாது உபபுகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்துங்கள்.

                 மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியாவில் தோன்றிய வெள்ளரிக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர் குக்குமிஸ் ஸாடிவாஸ் என்பதாகும். இது மலைப்பகுதிகளில் நன்கு வளர்கிறது. இமய மலைப்பகுதியிலிருந்து வரும் சிக்கிம் வெள்ளரி 15 அங்குலம் நீளமும் 6 அங்குலம் கனமும் உள்ளது.

                   ஜமைகா நாட்டு வெள்ளரிக்காய் எலுமிச்சம் பழ அளவிலும், நிறத்திலும் இருக்கிறது. கிழக்கத்திய நாடுகளில் வாசனைக்காக வெள்ளரி அதிகம் பயிராக்குகின்றனர். குளிர் சாதனப்பெட்டியில் இரு வாரங்கள் வரை வைத்து வெள்ளரிக் காய்களை பயன்படுத்தலாம்.



13.9.22

மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி -(MOOTU VAZHI MARUTHUVAM)


மூட்டுக்களில் வீக்கம் ஏற்பட்டால் கடுமையான வலியை சந்திக்க நேரிடும். இப்படி மூட்டுக்களில் ஏற்படும் வலி ஆர்த்ரிடிஸ் அல்லது பலவீனமான எலும்பு அமைப்பிற்கு வழிவகுக்கும். மூட்டுக்களில் உள்ள வீக்கம் மற்றும் வலியைப் போக்க முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, அதற்கான இதர அறிகுறிகளையும் அறிவது தான்.


அதுவும் நடக்கும் போது மற்றும் நிற்கும் போது கடுமையான வலியை உணர்வது, மூட்டுக்கள் சிவந்து காணப்படுவது என்று இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றுங்கள். இதனால் ஒரே நாளில் மூட்டுக்களில் உள்ள வீக்கம் போய்விடும்.

METHOD 1

தேவையான பொருட்கள்:

முட்டையின் மஞ்சள் கரு - 1

உப்பு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு பௌலில் முட்டையின் மஞ்சள் கருவுடன், உப்பு சேர்த்து நன்கு கலந்து, வீக்கம் உள்ள முழங்காலில் தடவி, ஒட்டும் காகிதத்தை ஒட்டி, எலாஸ்டிக் பேண்டேஜ் கொண்டு கவர் செய்ய வேண்டும். ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும் மூட்டுகளில் உள்ள பேஸ்ட்டை மாற்ற வேண்டும். இப்படி தினமும் 5 முறை செய்து வந்தால், மூட்டுக்களில் உள்ள வீக்கம் மற்றும வலி குறைந்துவிடும்.

METHOD 2

தேவையான பொருட்கள்:

கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, வீக்கம் மற்றும் வலி உள்ள மூட்டுக்களில் தடவி, சுடுநீரில் நனைத்த துணியை மேலே போர்த்த வேண்டும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து, வலி மற்றும் வீக்கம் குறையும்.


METHOD 3

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் சீடர் வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்

வெதுவெதுப்பான நீர்- தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து, அந்நீரில் வீக்கமுள்ள மற்றும் வலியுள்ள மூட்டுக்களை 10 நிமிடம் ஊற வையுங்கள். இறுதியில் ஆலிவ் ஆயிலைக் கொண்டு தினமும் இரு வேளை மசாஜ் செய்யுங்கள்.

12.9.22

பல் வலிக்கு இயற்கை மருத்துவம்-(IYYARKAI MARUTHUVAM FOR TEETH PAIN)


பல் வலிக்கு இயற்கை  மருத்துவம்

இன்றும் பலரும் பல்வலியால் ( Pain Killer ) மாத்திரைகளை பயன்படுத்துவதை பார்த்திருப்போம். 

எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை (இலங்கை தமிழர்கள் சீனி என்று பயன்படுத்துவார்கள் )வைத்துவிட்டு, 18 மிளகு- ஐ நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும். 

காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கண்ணத்தின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும்.

 இதனை செய்து பத்தே நிமிடத்தில் பல் வலி இருந்த இடமே தெரியாமல் மறைந்து விடும். இது கை கண்ட மருந்து. பயன் பெறுங்கள். நண்பர்களிடமும் சொல்லி பயன் பெற வையுங்கள்.



8.9.22

மூச்சுப்பிடிப்பு குணமாக சில எளிய மருத்துவ குறிப்பு-(Some simple medical tips to cure shortness of breath)

மூச்சுப்பிடிப்பு குணமாக சில எளிய மருத்துவ  குறிப்பு

 1 : பெருங்காயம், சுக்கு, சூடம், சாம்பிராணி ஆகிய நான்கையும் சம அளவில் எடுத்துக்கொண்டு அதை வடித்த சூடான கஞ்சியில் போட்டு நன்கு கலக்க வேண்டும். அதன் பிறகு கஞ்சியை வலி இருக்கும் இடத்தில் ஒரு நாளைக்கு மூன்று வேலை வீதம் தடவி வந்தால் மூச்சுப்பிடிப்பு குணமாகும்.

2 : வாயு தொல்லையால் மூச்சு பிடிப்பு ஏற்பட்டால், கொத்தமல்லி, புதினா, பெருங்காயம், பனைவெல்லம் ஆகிய நான்கையும் நன்கு இடித்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும், வயிற்று வலி குறையும், வாயு தொல்லையால் மூச்சி பிடிப்பு ஏற்பட்ருந்தால் அதுவும் நீங்கும்.

3 : ஆஸ்துமா மற்றும் வீசிங் நோயால் மூச்சி பிடிப்பு ஏற்பட்டால் தினமும் காலையில் ஒரு கற்பூர வள்ளி இலையை நன்கு மென்று சாப்பிட வேண்டும். இதன் மூலம் நுரை ஈரல் நன்கு செயல்படும். 

4 : உடல்வலி உள்ளவர்கள் சாதம் வடித்த கஞ்சியில் அரை டீஸ்பூன் பசுநெய் விட்டு சிறிது பொடித்த சீரகம், ஒரு பல் நசுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம்,சிறிது கல் உப்பு  தினமும் குடித்தால் உடல் வலி காணாமல் போகும்.

7.9.22

குழந்தைக்கு வறட்டு இருமல் மருத்துவம் -(Dry cough treatment for children)

  •  3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 6 துளசி இலைகள் போட்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும். பிறகு இளஞ்சூடாக்கி குழந்தையின் கழுத்து, நெஞ்சுப் பகுதி, முதுகு, பாதம் ஆகிய இடங்களில் தடவலாம்.

  • பிள்ளைகள் தூங்கும் போது இளஞ்சூடான பாலில் மஞ்சள் தூள் இரண்டு சிட்டிகையும், மிளகுத்தூள் சிட்டிகையும் கலந்து அந்த சூட்டிலேயே பிள்ளைகளை குடிக்க வையுங்கள். தொடர்ந்து ஒருவாரம் வரை கொடுத்தாலே போதுமானது. நிச்சயம் நிவாரணம் கிடைக்கும்.

  • அதிமதுரம், கடுக்காய், மிளகு இந்த மூனையும் சம அளவு எடுத்து, இளம் வறுப்பா வறுத்து, பொடி செஞ்சு 2-4 கிராம் அளவு தேன்ல கலந்து சாப்பிட்டு வந்தா, சூட்டுனால வர்ற இருமல் குணமாகும். அதுமதுரத் துண்டு ஒன்னு எடுத்து வாயில போட்டு சுவைச்சு விழுங்கிட்டா கூட வறட்டு இருமல் குணமாகும்.

  • உலர்திராட்சையை வாங்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து, இரண்டு ஸ்பூன் தேன் கலந்து கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து கொடுத்து வந்தால், குழந்தையின் வறட்டு இருமல் பிரச்சனை சரியாகும்.

  • தேங்காயெண்ணெயுடன் கற்பூரம் கலந்து தேய்ப்பது ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் தான். ஆறுமாத குழந்தைக்கு இதை பயன்படுத்த வேண்டாம். கற்பூரம் குழந்தையின் சருமத்தை பாதிக்கும். அதற்கு மாற்றாக தேங்காயெண்ணெயை சூடாக்கி அதில் துளசி இலைகளை நறுக்கி சேர்க்கவும்.

  • தினமும் இரண்டு வேளையும் குழந்தையின் மார்பு, முதுகு, தொண்டை, இடுப்பின் இரண்டு பக்கவாட்டு பகுதிகள் கால்களில் தடவவும். குழந்தையின் நெஞ்சுபகுதியில் இருக்கும் சளியை கரைக்க செய்யும். பாதிப்பில்லாத பாட்டி வைத்தியம். தேங்காயெண்ணெயுடன் துளசிக்கு மாற்றாக பூண்டை நசுக்கியும் காய்ச்சி ஆறவைத்து தடவுவதன் மூலம் இருமல் சற்று மட்டுப்படும்.


கை குழந்தைகளுக்கு வீட்டு வைத்தியம் -(Home Remedies for Hand Babies)


கை குழந்தைகளுக்கு வீட்டு வைத்தியம் 

சில குழந்தைகளுக்கு வாயில் மாவு மாதிரி வெள்ளை படிஞ்சிருக்கும். அதை நீக்க, மாசிக்காயை சந்தனக்கல்ல உரசி,  உரசிய விழுதை குழந்தையோட நாக்குல தடவினால் பிரச்னை சரியாகிடும்.


சின்னக் குழந்தைகள் வாந்தி பண்ணினால், வசம்பை சுட்டு பொடி செய்து ஒரு ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து, நாக்குல தடவினால் உடனே குணம்  கிடைக்கும். 


சூடு காரணமா குழந்தைக்கு மலம் தண்ணியா போகுதா  கவலைப்பட வேண்டாம். ஜாதிக்காயை கல்லில் உரைச்சு தாய்ப்பால்ல கலந்து குடுத்து பாருங்க, உடனே குணம் கிடைக்கும். மூன்று வேளையும்  இப்படிக் கொடுத்து வந்தால் மழுவதும் குணமாகிடும். 

ஜாதிக்காயை ரெண்டு உரைக்கு மேல உரைக்கக் கூடாது.  

கைக்குழந்தைகளுக்கு மாந்தம், உப்புசம் வராமல் தடுக்கும் உரை மருந்து

ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு, கடுக்காய், சுக்கு எல்லாம் தலா ஒண்ணு எடுத்து வேகவைத்து, அதை எடுத்து வெயிலில் சுக்கா காய வைக்கவேண்டும்.  

குழந்தையை தலைக்கு குளிப்பாட்டுகிறபோது இந்த மருந்துப் பொருட்களை சுத்தமான சந்தனக்கல்ல ஒரு உரை (அதிகம் கூடாது) உரைச்சு, ரெண்டு  டேபிள்ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து புகட்டணும்.

கைக்குழந்தைக சளித் தொல்லையால குழந்தை அவதிப்பட்டா, கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய்யில், 2  பல் பூண்டைப் போட்டுக் காய்ச்சி, கசக்கி, அந்தச் சாறை தாய்ப்பால்ல கலந்து, ரெண்டு டேபிள்ஸ்பூன் கொடுத்தா சளி அனைத்தும் மலத்தில்  வெளியாகிவிடும்.

ஆறு மாசக் குழந்தைகளுக்கு பத்து நாளுக்கு ஒருமுறை, ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் எல்லாத்தையும் அரைச்சு, வெந்நீரில்  கலந்து, ஒரு பாலாடை அளவு குடிக்க வைத்தால் குழந்தையின் வயிற்றில் வாயு சேராமல் இருக்கும். 


பிறந்த குழந்தைகளுக்கு தலையில  நல்லெண்ணெய் தேய்க்கக் கூடாது. தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி தேய்க்கணும். குழந்தையின் தலையிலும், உடம்பிலும் மேனி பட்டு போல இருக்கும். 

ஐந்து மாதக் குழந்தை வயிறு வலியால் அழுதால் கடுக்காயை சந்தனம் மாதிரி உரசி குழந்தையோட வயித்துல பூசி விடவேண்டும்.. 


ஒரு  வெத்தலையை விளக்குல காட்டி சூடுபடுத்தி, இளஞ்சூட்டுல குழந்தையோட தொப்புள்ல போடலாம்.. இரண்டு நிமிடங்களில் குழந்தையின் வயிற்று  வலி நீங்கி குழந்தை சிரிக்கும். 

6.9.22

கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்-(KEELA NELLI MARUTHUVA PAYANGAL)

 கீழாநெல்லியின் மருத்துவக் குணங்கள்


1.கீழாநெல்லியின் இலைகளில் ‘பில்லாந்தின்’ என்னும் மூலப்பொருள் இருப்பதால், இதன் இலைகளில் கசப்புச்சுவை மிகுதியாக இருக்கும். பொட்டாசியம் சத்து அதிகமாகக் காணப்படும் தாவரங்களில் கீழாநெல்லியும் ஒன்று.

மஞ்சள் காமாலை நோயைச் சரிசெய்யும். மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லியே.

கீழாநெல்லி உடன் ஆட்டு பால் சேர்த்து குடித்தால் மஞ்சள் காமாலை குணமாகும். 

2.இதற்கு சிறுநீரைப் பெருக்கும் சக்தி உண்டு.


3.கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.

4.தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு.

5.கீழாநெல்லி கல்லீரல் சம்பந்தமான நோய்களைக்கூடச் சரிசெய்யும்.

6.சொறி, சிரங்கு போன்ற பிணிகளைப் போக்கும்

ஜீரணம் ஆக எளிய மருத்துவம் - Acidity - Jeeranam aga Eliya Maruthuvavm



ஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இய‌ற்கை வைத்தியம்:-

நம்மில் பல பேர் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆகாமல் அஜீரண கோளாறுகளால் கஷ்டப்படுவதை அறிந்திருக்கிறோம் . இதற்காகவே பல மருந்துகளை மருந்து கம்பனிகள் தயாரித்தும் வருகின்றன . ஆனால் இந்த மாதிரியான அஜீரண கோளாறுகள் கீழ்க்கண்ட எளிய மருத்துவத்தை பயன்படுத்தினால் நீங்கி நல்ல பலன் கிடைப்பதை பார்க்கலாம் .

விசேஷ நாட்களில் பலகாரம் சாப்பிடுவதால் உண்டாகும் அஜீரணம் , பசியின்மை , வயிறு உப்பி காணப்படுதல் , உடல் வலி , அசதி முதலியவைகளுக்கு வீட்டிலேயே தயாரிக்கும் சுக்கு தண்ணீர் சிறந்தது . 2 பெரிய சுக்கு , 2 ஏலக்காய் இவற்றை நசுக்கி கொண்டு ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து , 2 டம்ளர் நீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து , முக்கால் தம்ளராக சுண்டியவுடன் கருப்பட்டி ( பனை வெல்லம் ) அல்லது சாதாரண வெல்லத்துடன் கலந்து குடித்து வந்தால் அணைத்து அஜீரண கோளாறுகளும் நீங்கி உடம்பு கலகலப்பாக இருக்கும் . 

ஓமம் - 200 கிராம் , சீரகம் - 100 கிராம் , மிளகு - 100 கிராம் , கருஞ்சீரகம் - 100 கிராம் , பூண்டு - 50 கிராம் , கறிவேப்பிலை - 100 கிராம் , தோல் நீக்கிய சுக்கு - 200 கிராம் ஆகியவற்றை லேசாக நல்லெண்ணையில் வரித்து பொடி செய்து தினசரி பகல் உணவில் 2 ஸ்பூன் 1 பிடி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வர செரிமானம் நல்ல நிலையில் ஆகி வயிற்று கோளாறு இன்றி சுகமாக இருக்கலாம் . 

தினசரி 4 பேரீச்சம் பழம் சாப்பிடுபவர்களுக்கு வயிற்று கடுப்பு , அஜீரண பேதி , மலசிக்கல் போன்ற வயிற்று கோளாறுகள் வருவதில்லை . 

சுக்கு பொடியுடன் சுடு நீரை சேர்த்து குடித்தாலும் அஜீரணத்தில் இருந்து நல்ல சுகம் கிடைக்கும் .

முகம் பளபளப்புடன் திகழ இயற்கை மருத்துவம்..-(MUGAM PALAPALAPUDAN THIGALA IYARKAI MARUTHUVAM)

தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.

     தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ் செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்...

     ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ் செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும்.
      
     நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றhக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.

         கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.

    சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.

         பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.

*சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும்.

வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் *ஆலிவ் ஆயிலைப்* பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

*பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம்,* அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிருதுவாகும்.



முடி வளர சித்த மருத்துவம்-(MUDI VALARA SIDDHA MARUTHUVAM)




வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்....

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்

5.9.22

Home Remedies for Constipation

 Home Remedies for Constipation

1. Eat home made bread made out of one part of wheat and two parts of black gram powder along with husk. This ensures effective cleansing of bowel.

2. Boil 10-12 dry, seedless grapes in milk. Drink the milk and chew the grapes after dinner. This is an effective home remedy for constipation.

3. Eat mangoes in plenty. Mango relieves constipation.

4. Take dates soaked in milk along with the milk. This prevents constipation.

5. Eat a guava early morning in empty stomach. This is an effective constipation cure.

6. Drink half cup cabbage juice 2 times daily. This helps to get rid of constipation.

7. Drink a glass full of carrot juice mixed with spinach juice and get freedom from constipation.

8. Drink a mixture of half cup olive oil and half cup orange juice daily. This cures constipation.

9. Take 3-4 teaspoons of castor oil regularly to put an end to constipation.

10. Drink a glass of hot water by mixing in to it, lime juice and a pinch of salt. This provides relief from constipation.


11. Drinking the water stored in copper vessel overnight, cleans bowel thoroughly.

குறட்டை தொல்லையில் இருந்து விடுபட சில டிப்ஸ-(Some tips to get rid of snoring problem)

குறட்டை தொல்லையில் இருந்து விடுபட சில டிப்ஸ

  1. உடல் எடை : உடற்பருமன் உள்ளவர்கள் குறட்டை விட அதிக வாய்ப்புண்டு. தொண்டை பகுதியில் கொழுப்புத் திசு மற்றும் நலிவான தசை இருந்தால் குறட்டை ஏற்படும். எனவே உடல் எடை குறைப்பது அவசியமாகும்.
  2. மது அருந்தக்கூடாது: தொண்டை தசைகளை லேசாக்கி குறட்டை ஏற்பட காரணமாக அமைவதால் மது அருந்துவதை தவிர்க்கவும்.
  3. பக்கவாட்டில் படுக்கவும்: நேராக படுத்தால் குறட்டை ஏற்பட அதிக வாய்ப்புண்டு. எனவே, பக்கவாட்டில் படுக்கவும்.
  4. பால் :பால் மற்றும் பால் பொருட்கள் தொண்டை மற்றும் நாசியில் வீக்கம் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகும். பால் குடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க தேவையில்லை. இருப்பினும், தூங்கும் முன் பால் அருந்த வேண்டாம்.
  5. பழங்கள்: உணவில் மெலடோனின் அதிகம் எடுத்துக் கொண்டால் ஆழ்ந்த உறக்கம் பெறலாம். எனவே, மெலடோனின் அதிகம் உள்ள வாழைப்பழம், அன்னாசிப் பழம், கமலாப்பழம் ஆகியவை சாப்பிடலாம்.
  6. தலை உயர்த்தி படுக்கவும்: தலையணைகள் கொண்டு தலையை உயர்த்தி வைத்து தூங்கவும். தலையை உயர்த்தி வைத்து தூங்கினால் சீராக சுவாசிக்கலாம்.
  7. தேன், இஞ்சி தேனீர்: எச்சில் சுரக்க செய்வதால் இஞ்சி தொண்டைக்கு இதமளிக்கும். தினமும் 2 முறை தேன், இஞ்சி தேநீர் அருந்தினால் குறட்டை தொல்லை குறையும்.
  8. தூக்க மாத்திரை: அதிகமாக தூங்கினால் குறைட்டை ஏற்படும். எனவே, தூக்க மாத்திரைகளை தவிர்க்கவும்.
  9. தண்ணீர்: உடலில் நீர் பற்றாக்குறையால் சளி உண்டாகிறது. இதனால் கூட குறட்டை ஏற்படலாம். ஆண்கள் நாளொன்றுக்கு 3.7 லிட்டர், பெண்கள் 2.7 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.

4.9.22

தரமான கருப்பட்டியை கண்டறிவது எப்படி -(How to identify quality jiggery)

தரமான கருப்பட்டியை கண்டறிவது எப்படி 

1.தரமான கருப்பட்டி நறுமணத்துடன் கூடிய இனிப்பு சுவை நிறைந்திருக்கும்.

தரமற்ற கருப்பட்டியில் மணமற்று சர்க்கரையின் இனிப்பு சுவையை மட்டுமே உணர முடியும்.

2.தரமான கருப்பட்டியின் உட்பகுதியில் கருப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும். 

தரமற்ற கருப்பட்டி உட்புறமும் பளபளப்பாக இருக்கும்.

3.தரமான கருப்பட்டி பழமையானாலும் கடினத் தன்மை மாறாமல் இருக்கும்.

தரமற்ற கருப்பட்டி சில வாரங்களில் கடினத்தன்மை இழந்து இளக ஆரம்பித்துவிடும்.

4.தரமான கருப்பட்டி நீரில் கரைய நேரம் எடுத்துக் கொள்ளும்.

 தரமற்ற கருப்பட்டி சிறிது நேரத்தில் தண்ணீரில் கரைந்துவிடும்.

5.பதநீருடன் சுண்ணாம்பு சேர்த்து காய்ச்சுவதால் தரமான கருப்பட்டியில் நாட்கள் செல்ல செல்ல மேல்புறம் புள்ளிப் புள்ளியாக மாறும்.

6.தரமற்ற கருப்பட்டியில் புள்ளி வராது.கருப்பட்டியின் மேற்பரப்பு பளபளப்புடன் மைதாமாவு போல, தொட்டால் கையில் ஒட்டும்.

தரமான கருப்பட்டி பளபளப்புடன் இருக்காது.

herbal remedies to dissolve kidney stones

 Herbal remedies to dissolve kidney stones fast are available to get rid of the stone from the body. This is safe and a natural way to dissolve kidney stones fast into tiny particles. Some of the herbal remedies are as follows:


1. Basil Juice: Basil juice taken with honey daily is very beneficial in this condition.

2. Diuretic Tea: Diuretics like dandelion and corn silk can be used to make tea which should be had everyday to dissolve kidney stones fast.

3. Cranberry: Cranberry juice is an effective remedy to dissolve kidney stone fast.

4. Berry Juniper: This herb is effective in dissolving the stones.

5. Ginger: Ginger is not only helpful for dissolving the kidney stones but also for cleansing your kidney. Include ginger in your diet.

6. Apple Cider Vinegar: Taking few spoons of apple cider vinegar can help dissolve the stone in kidney fast and pass it off in urine.

7. Marshmallow Root: Marshmallow root is helpful in this condition.

8. Bergenia Ligulata: This herb is effective in breaking down the stones and dissolving it.

9. Tribulus terrestris: This is used for kidney disorders and also aids in dissolving and removing the stones. 

10. Coriandrum Sativum: This helps to crush the stones thereby dissolving it and making it easy to remove from the system.

3.9.22

தொப்பை குறைய எளிய பயிற்சி-(THOPPAIYAI KURAIKA YELIYA PAUIRCHI)


இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.

அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம். 

செய்முறை:

முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.

அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும்.