Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

21.10.22

தைராய்டு பிரச்சனை குணமாக,-(Cure thyroid problem)


கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போதைய மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால், ஏராளமானோருக்கு தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது.

பொதுவாக தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடலின் மெட்டபாலிசம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் வரக்கூடும்.

அவை ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு ஆகும். இங்கு இந்த தைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.


ஹைப்பர் தைராய்டு:

ஹைப்பர் தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியில் அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கும் நிலையாகும்.


அறிகுறிகள்:

* அதிகமாக வியர்ப்பது

* தும்மல்

* எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது

* நினைவாற்றல் பிரச்சனை

* மோசமான குடலியக்கம்

* படபடப்பு

* மன அழுத்தம்

* எடை குறைவு

* மாதவிடாய் பிரச்சனைகள்

* அதிகப்படியான சோர்வு


ஹைப்போ தைராய்டு:

ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியின் மோசமான செயல்பாட்டால், போதிய அளவு தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கப்படாத நிலையாகும்.


அறிகுறிகள்:

* நகங்களில் வெடிப்பு

* மலச்சிக்கல்

* உடல் பருமன்

* தசைப் பிடிப்புகள்

* மோசமான மாதவிடாய் கால இரத்தப் போக்கு

* கழுத்தின் முன் பகுதியில் வீக்கம்

* மிகுதியான களைப்பு

* நினைவாற்றல் பிரச்சனை

* வறட்சியான சருமம் மற்றும் தலைமுடி

* மன இறுக்கம்

தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்க ஓர் அற்புத நாட்டு மருந்து உள்ளது. அதை ஒருவர் உட்கொண்டு வந்தால், தைராய்டு பிரச்சனையை விரைவில் சரிசெய்யலாம்.


தேவையான பொருட்கள்:

பச்சை வால்நட்ஸ் – 40

தேன் – 1 கிலோ


செய்முறை:

வால்நட்ஸ் காயை துண்டுகளாக்கி கண்ணாடி பாட்டிலில் போட்டு, அதில் தேன் ஊற்றி, 40 நாட்கள் ஊற வைக்க வேண்டும். முக்கியமாக இந்த பாட்டிலை பகலில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் வைத்து, அவ்வப்போது பாட்டிலைக் குலுக்க வேண்டும். 40 நாட்கள் கழித்து, அதில் உள்ள வால்நட்ஸ் காயை நீக்கிவிட வேண்டும்.


உட்கொள்ளும் முறை:

இந்த தேனை தினமும் காலை மற்றும் மாலையில் 2 ஸ்பூன் சாப்பிட்டு வர, தைராய்டு பிரச்சனை விரைவில் குணமாகும். இப்போது இதன் இதர நன்மைகளைக் காண்போம்.


நன்மை 1

இதில் வைட்டமின் சி, அயோடின் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், இரத்த சோகை இருப்பவர்கள் தினமும் உட்கொண்டு வந்தால், சீக்கிரம் இரத்த சோகை நீங்கும்.


நன்மை 2

பச்சை வால்நட்ஸை தேனில் ஊற வைத்து, அந்த தேனை தினமும் சாப்பிடும் போது கல்லீரல், வயிறு மற்றும் இரத்தம் சுத்தமாகும்.


நன்மை 3

அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள், இதை சாப்பிட்டால் பலவீனமாக இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.


நன்மை 4

மாதவிடாய் காலத்தில் அதிக பிரச்சனையை சந்திக்கும் பெண்கள், பச்சை வால்நட்ஸ் ஊற வைத்த தேனை சாப்பிட்டால், பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.


நன்மை 5

முக்கியமாக இந்த தேன் சுவாச பாதை மற்றும் மூச்சுக் குழாயில் உள்ள பிரச்சனைகளைப் போக்கி, அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

20.10.22

அடிக்கடி தலைவலி வருகிறதா.-(ADIKADI THALAI VAZHI VARUKIRATHA)


அடிக்கடி தலைவலி வருகிறதா.. தலைவலிக்கு இதோ ஒர செலவில்லாத நிவாரணி!

நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும் சுவாசிக்க / காற்றை வெளியிட உபயோகிக்கிறோம். வலது துவாரம் சூரியனையும், இடது துவாரம் சந்திரனையும் குறிக்கிறது. தலைவலி வரும் போது, வலது துவாரத்தை மூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக்கவும். ஐந்தே நிமிட நேரத்தில் தலைவலி காணாமல் போய் விடும்..

மிகவும் களைப்பாக இருக்கிறதா? இடது துவாரத்தை மூடி, வலது துவாரம் வழியாக சுவாசிக்கவும். சிறிது நேரத்தில் களைப்பு போய் விடும்

5.10.22

பசியின்மை குறைய‌

 பசியின்மை குறைய‌ 

கீழ்கண்ட மூலிகைகளை முறைப்படி வறுத்து சூரணம் செய்து சாப்பிட்டு வந்தால் உள்காய்ச்சல், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குறையும்.

வால் மிளகு

வெள்ளை மிளகு

மிளகு


அறிகுறிகள்:

உள்காய்ச்சல்.

பசியின்மை.

ருசியின்மை.


தேவையான பொருள்கள்:


வெள்ளை மிளகு = 50 கிராம்

கடுகு = 25 கிராம்

வால் மிளகு = 100 கிராம்

சீரகம் = 25 கிராம்

மிளகு = 150 கிராம்

செய்முறை:


வெள்ளை மிளகையும், வால் மிளகையும் மண் பாத்திரத்தில் போட்டு சிறிது நெய்யை விட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.

கடுகை மண் பாத்திரத்தில் போட்டு தூய நீரை விட்டு கழுவி நிழலில் உலர்த்தி எடுத்து 50 மி.லி நெய்யை விட்டு வெடிக்க விட்டு எடுத்து கொள்ளவும்.

சீரகத்தை மண் பாத்திரத்தில் போட்டு இளஞ்சூடாக்கி கொள்ளவும். மிளகை மண் பாத்திரத்தில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

எல்லாவற்றையும் உரலில் போட்டு நன்கு இடித்து நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து நன்றாக பொடியாக்கி கொள்ளவும்.

உபயோகிக்கும் முறை:

இந்த சூரணத்தை தேவைக்கேற்ப எடுத்து சுடு சோற்றில் கலந்து சாப்பிட்டு வரவும். ஒரு நாளைக்கு ஒரு முறையாக 7 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் உள்காய்ச்சல், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குறையும்.