Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

11.11.22

சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்கள்-(SOTTRUKATRALAI MARUTHUVA GUNANGAL)சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்கள்-(SOTTRUKATRALAI MARUTHUVA GUNANGAL)



பயன்கள் :    சோற்றுக் கற்றாழை மடல்களைப் பிளந்து நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை, சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும்.

  •    கற்றாழையைக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

  •    சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.

  •       சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

  •   கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.

  •  கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செய்து எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.

  • மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரைக் கிலோ தயாரித்து ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசணயைக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும்.
  • முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
  • ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி மருந்து’ கற்றாழைச் சாறுதான்.
  • இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
  • தோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மை போல் அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது. கற்றாழை கழியைத்(Gel) தலை முடியில் தடவி சீவினால் முடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.
  • பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது.
  • முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.
  • கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.
  • கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.
  • தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது.
  • நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் C மற்றும் B சத்துகளும், தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.

  • சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.
  • இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.

21.10.22

தைராய்டு பிரச்சனை குணமாக,-(Cure thyroid problem)


கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போதைய மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால், ஏராளமானோருக்கு தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது.

பொதுவாக தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடலின் மெட்டபாலிசம் மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் வரக்கூடும்.

அவை ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு ஆகும். இங்கு இந்த தைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.


ஹைப்பர் தைராய்டு:

ஹைப்பர் தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியில் அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கும் நிலையாகும்.


அறிகுறிகள்:

* அதிகமாக வியர்ப்பது

* தும்மல்

* எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது

* நினைவாற்றல் பிரச்சனை

* மோசமான குடலியக்கம்

* படபடப்பு

* மன அழுத்தம்

* எடை குறைவு

* மாதவிடாய் பிரச்சனைகள்

* அதிகப்படியான சோர்வு


ஹைப்போ தைராய்டு:

ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியின் மோசமான செயல்பாட்டால், போதிய அளவு தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கப்படாத நிலையாகும்.


அறிகுறிகள்:

* நகங்களில் வெடிப்பு

* மலச்சிக்கல்

* உடல் பருமன்

* தசைப் பிடிப்புகள்

* மோசமான மாதவிடாய் கால இரத்தப் போக்கு

* கழுத்தின் முன் பகுதியில் வீக்கம்

* மிகுதியான களைப்பு

* நினைவாற்றல் பிரச்சனை

* வறட்சியான சருமம் மற்றும் தலைமுடி

* மன இறுக்கம்

தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்க ஓர் அற்புத நாட்டு மருந்து உள்ளது. அதை ஒருவர் உட்கொண்டு வந்தால், தைராய்டு பிரச்சனையை விரைவில் சரிசெய்யலாம்.


தேவையான பொருட்கள்:

பச்சை வால்நட்ஸ் – 40

தேன் – 1 கிலோ


செய்முறை:

வால்நட்ஸ் காயை துண்டுகளாக்கி கண்ணாடி பாட்டிலில் போட்டு, அதில் தேன் ஊற்றி, 40 நாட்கள் ஊற வைக்க வேண்டும். முக்கியமாக இந்த பாட்டிலை பகலில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் வைத்து, அவ்வப்போது பாட்டிலைக் குலுக்க வேண்டும். 40 நாட்கள் கழித்து, அதில் உள்ள வால்நட்ஸ் காயை நீக்கிவிட வேண்டும்.


உட்கொள்ளும் முறை:

இந்த தேனை தினமும் காலை மற்றும் மாலையில் 2 ஸ்பூன் சாப்பிட்டு வர, தைராய்டு பிரச்சனை விரைவில் குணமாகும். இப்போது இதன் இதர நன்மைகளைக் காண்போம்.


நன்மை 1

இதில் வைட்டமின் சி, அயோடின் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், இரத்த சோகை இருப்பவர்கள் தினமும் உட்கொண்டு வந்தால், சீக்கிரம் இரத்த சோகை நீங்கும்.


நன்மை 2

பச்சை வால்நட்ஸை தேனில் ஊற வைத்து, அந்த தேனை தினமும் சாப்பிடும் போது கல்லீரல், வயிறு மற்றும் இரத்தம் சுத்தமாகும்.


நன்மை 3

அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள், இதை சாப்பிட்டால் பலவீனமாக இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.


நன்மை 4

மாதவிடாய் காலத்தில் அதிக பிரச்சனையை சந்திக்கும் பெண்கள், பச்சை வால்நட்ஸ் ஊற வைத்த தேனை சாப்பிட்டால், பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.


நன்மை 5

முக்கியமாக இந்த தேன் சுவாச பாதை மற்றும் மூச்சுக் குழாயில் உள்ள பிரச்சனைகளைப் போக்கி, அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

20.10.22

அடிக்கடி தலைவலி வருகிறதா.-(ADIKADI THALAI VAZHI VARUKIRATHA)


அடிக்கடி தலைவலி வருகிறதா.. தலைவலிக்கு இதோ ஒர செலவில்லாத நிவாரணி!

நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும் சுவாசிக்க / காற்றை வெளியிட உபயோகிக்கிறோம். வலது துவாரம் சூரியனையும், இடது துவாரம் சந்திரனையும் குறிக்கிறது. தலைவலி வரும் போது, வலது துவாரத்தை மூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக்கவும். ஐந்தே நிமிட நேரத்தில் தலைவலி காணாமல் போய் விடும்..

மிகவும் களைப்பாக இருக்கிறதா? இடது துவாரத்தை மூடி, வலது துவாரம் வழியாக சுவாசிக்கவும். சிறிது நேரத்தில் களைப்பு போய் விடும்

5.10.22

பசியின்மை குறைய‌

 பசியின்மை குறைய‌ 

கீழ்கண்ட மூலிகைகளை முறைப்படி வறுத்து சூரணம் செய்து சாப்பிட்டு வந்தால் உள்காய்ச்சல், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குறையும்.

வால் மிளகு

வெள்ளை மிளகு

மிளகு


அறிகுறிகள்:

உள்காய்ச்சல்.

பசியின்மை.

ருசியின்மை.


தேவையான பொருள்கள்:


வெள்ளை மிளகு = 50 கிராம்

கடுகு = 25 கிராம்

வால் மிளகு = 100 கிராம்

சீரகம் = 25 கிராம்

மிளகு = 150 கிராம்

செய்முறை:


வெள்ளை மிளகையும், வால் மிளகையும் மண் பாத்திரத்தில் போட்டு சிறிது நெய்யை விட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.

கடுகை மண் பாத்திரத்தில் போட்டு தூய நீரை விட்டு கழுவி நிழலில் உலர்த்தி எடுத்து 50 மி.லி நெய்யை விட்டு வெடிக்க விட்டு எடுத்து கொள்ளவும்.

சீரகத்தை மண் பாத்திரத்தில் போட்டு இளஞ்சூடாக்கி கொள்ளவும். மிளகை மண் பாத்திரத்தில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

எல்லாவற்றையும் உரலில் போட்டு நன்கு இடித்து நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து நன்றாக பொடியாக்கி கொள்ளவும்.

உபயோகிக்கும் முறை:

இந்த சூரணத்தை தேவைக்கேற்ப எடுத்து சுடு சோற்றில் கலந்து சாப்பிட்டு வரவும். ஒரு நாளைக்கு ஒரு முறையாக 7 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் உள்காய்ச்சல், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குறையும்.


24.9.22

சுகர் உள்ளவர்களுக்கு உணவு அட்டவணை(Food chart for diabetic paitent)

 நீரிழிவு (சக்கரை) நோய் உள்ளவர்களுக்கு



சாப்பிடக் கூடாதவை


நுங்கு,சர்க்கரை, சாக்லெட், கரும்புஜஸ் கிரீம், பால்கட்டி (பன்னீர்),மாம்பழம், சீத்தாபழம், பலாப்பழம்,சப்போட்டா,வாழைப்பழம்,காம்பளான்,திரட்டுப்பால்,குளுகோஸ்,சேப்பங்கிழங்கு,உருளைக்கிழங்கு, சக்கரைவள்ளி கிழங்கு, உலர்ந்த திராட்சை,குளிர் பானங்கள்


அளவோடு சாப்பிடலாம்.


அரிசி,அவல்,ஓட்ஸ்,சோளம்,கேழ்வரகு,கோதுமை,பார்லி,அரிசிவேர்க்கடலை,பாதாம்பருப்பு,முந்திரிபருப்பு, மக்காச்சோளம்


அளவில்லாமல்_சாப்பிடலாம்.

கீரை,தக்காளி,காராமணி,வாழைத்தண்டு,வாழைப்பூ , பாகற்காய், சுரைக்காய்

பீர்க்கங்காய்,வெங்காயம்,கத்தரிக்காய், பூசணிக்காய்,அவரைக்காய், பப்பாளிக்காய்

கோவைக்காய்,வெள்ளரிக்காய்,வெண்டைக்காய்,முருங்கைக்காய்,கொத்தவரங்காய், சீமைகத்தரிக்காய்,முட்டைகோஸ், வெள்ளை முள்ளங்கி .....


x