Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

30.10.13

உடல் எடையை கட்டுப்படுத்தும் தக்காளி-(UDAL YEDAIYAI KATUPADUTHUM TOMATO )


தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளிப் பழத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம். தக்காளியைப் பொதுவாக, சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன் முழுப்பலனையும் பெற முடிகிறது. 

அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் பலம் தருகிறது. இன்னும் சொல்லப்போனால், உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு அது டானிக் போன்றது.
இதில் வைட்டமின் ஏ- சுமார் 91 மில்லி கிராம் உள்ளது. தவிர வைட்டமின் பி-1, பி-2, 17 மில்லி கிராமும், வைட்டமின் சி- 9 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் அடங்கி உள்ளன...

இவை தவிர, நமது உடலில் ரத்த உற்பத்திக்குப் பயன்படுவதோடு மட்டுமின்றி, ரத்தத்தைச் சுத்திகாரிப்பதற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும் இது பயன்படுகிறது. தக்காளியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் அனைத்தும் குறையாமல் நமக்குக் கிடைக்கும். குறிப்பாக இதை காலையிலும், மாலையிலும் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் வராது என்பதை விட, தோலைப் பளபளப்பாக வைத்திருக்கும் தன்மை இதற்கு உண்டு.

தக்காளியை சாப்பிடும் முன்பு சத்தம் செய்ய மறக்காதீர்கள். தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. தக்காளியைத் தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமலும் தடுக்கும். தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் செயல் பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது.

இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு, உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது. சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்கு உள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சாண்ட்விச்சுடன் கேரட் வழங்கப்பட்டது.
இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே சாப்பிட்டனர். தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுபாட்டுக்குள் வைக்கிறது என்று தெரிய வந்துள்ளது.

மாற்றுத்திறனாளிக்கு முதுகு பகுதி வழியாக ஓபன் ஹார்ட் சர்ஜரி.

இதயத்துக்கு போதிய ரத்தம் செல்ல முடியாமல் அடைப்பு இருந்தால், மாரடைப்பு ஏற்படும். ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டாலே உடனே இதயத்தில் எங்கு அடைப்பு உள்ளது என்று இதய நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியம் என்கிறார் முகப்பேரில் உள்ள பிரான்டியர் லைப்லைன் மருத்துவமனையின் முதன்மை இதய நிபுணர் டாக்டர் செரியன்.... 

மாரடைப்பு ஏற்பட்டால் இதயத்தில் செல்லக்கூடிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இருக்கும். மற்ற உறுப்பில் இருந்து இதயத்துக்கு செல்லும் நரம்பு பாதையில் அடைப்பு இருந்தால் அதை பைபாஸ் செய்து சீர் செய்யலாம். சில சமயம் இதயத்துக்குள் இருக்கும் நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு இருக்கும். இதற்கு ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

இவை நோயாளிகளின் உடல் நிலை பொருத்தே அமையும். சிலருக்கு நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருக்கும். அதை கட்டுப்பாட்டில் வைத்த பிறகே அறுவை சிகிச்சை செய்ய முடியும். ஆனால் இப்போது நூற்றில் எண்பது பேருக்கு இந்த பிரச்னை உள்ளது. ஆனால் நாங்கள் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவருக்கே இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம்.

அவர் கைகளையே கால்களாக பாவித்து நான்கு கால்களில் நடப்பவர். உடலின் மொத்த எடையும் கைகளில் தாங்கி குனிந்து நடப்பதால் அவரின் முதுகு தண்டு வளைந்து இருந்தது. விளைவு நெஞ்சு கூடு மற்றும் நுரையீரல் இருக்கும் நிலையிலும் மாற்றம். இதய அறுவை சிகிச்சை செய்யும் போது மார்பக பகுதியின் மையத்தில் தான் அறுவை சிகிச்சை செய்வோம்.

ஆனால் இவரின் தண்டு வடம் வளைந்து இருந்ததால், எல்லாருக்கும் செய்வது போல் செய்ய முடியாது. காரணம் நெஞ்சு சூட்டை விலக்கி அறுவை சிகிச்சை செய்வோம். விரிக்கப்பட்டு இருக்கும் நெஞ்சு எலும்பு காலப்போக்கில் ஒன்று சேர்ந்து விடும். இதற்கான சாத்தியம் இவருக்கு கிடையாது. அதை தவிர்க்க இவரின் இடது பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அதிலும் பல சிக்கல்கள் இருந்தன. முதுகு தண்டு வளைந்து இருந்ததால், இதயத்தை அடைய போதிய வசதி இல்லை. மேலும் இவரின் நுரையீரலும் பாதிப்படையாமல் கவனமாக செயல் பட வேண்டும். மிக சிரமத்தோடும் கவனமாகவும் ஒரு மாற்று திறனாளிக்கு முதுகு பகுதி மூலம் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது உலகிலேயே இதுவே முதல் முறை. இவ்வாறு டாக்டர் செரியன் கூறினார்

ஜிம்மில் எது என்ன ஏன்?-(JIM)


உடல் உறுதி - உறுதி!

‘‘எனக்கு இரண்டு மாதத்தில் கல்யாணம். ஓவர் வெயிட்டா இருக்கேன். உடனே வெயிட்டைக் குறைக்கணும்...’’ ‘‘டெலிவரிக்கு அப்புறம் உடம்பு பெருத்துடுச்சு. டிரெஸ் எல்லாம் டைட்டா இருக்கு. உடம்பைக் குறைக்கணும்...’’ ஒரு முடிவோடு ஜிம்முக்கு செல்பவர்களா நீங்கள்? ‘ஜிம்’ என்கிற உடற்பயிற்சிக் கூடத்தில் என்னென்ன உபகரணங்கள் இருக்கின்றன? உடலின் எந்தப் பகுதியைக் குறைக்க வேண்டும் அல்லது கூட்ட வேண்டும்? அதற்கு எந்த மெஷின் பொருத்தமாக இருக்கும்?

2. வயிற்றுச்சதை குறைய ஆப் க்ரன்ச்

அடி வயிற்றில் இருக்கும் சதையைக் குறைத்து, உங்களை ஸ்லிம்மாக காட்டும் இயந்திரம் இது! இரண்டு பக்கமும் இருக்கும் ஹேண்டில் பாரை கையில் இழுத்து முன்பக்கமாக குனிந்து நிமிர வேண்டும். பக்கத்தில் இருக்கும் போர்டில் 1ல் இருந்து 12 வரை எண்கள் இருக்கும். 1 ஈஸி. 12 ரொம்பக் கஷ்டம். அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப எண்களை வைத்து இந்தப் பயிற்சியைச் செய்யலாம். 5தான் நார்மல். இப்படி தொடர்ந்து தினமும் 20 நிமிடங்கள் வரை செய்தால் இலியானா இடையழகைப் பெறலாம். இதே போல் கிதீ தீமீஸீநீலீ என்ற இயந்திரமும் தொப்பையைக் குறைக்க உதவுகிறது.

3.கலோரிகளைக் குறைக்க ட்ரெட்மில்

ஒரே இடத்தில் இருந்தபடி நடக்க, ஓட உதவும் இயந்திரம் இது. இதன் உதவியால் உடலில் இருக்கும் தேவையற்ற கலோரிகளை குறைக்கலாம். நடக்கும் வேகத்தைக் குறைக்கவும் கூட்டவும் இதில் வசதி இருக்கிறது. ஜிம் செல்ல முடியாதவர்கள் தங்கள் வீடுகளிலேயே இதை வைத்திருப்பார்கள். இதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தெரிந்து பயிற்சி செய்வது நல்லது. 15 நிமிடங்களுக்கு மேல் இப்பயிற்சி செய்வது நல்லதல்ல. மூட்டுவலி வரும் அபாயம் உண்டு.

4.எக்ஸ்ட்ரா சதை குறைய பைக் ரீகம்பென்ட்

பைக் ஓட்டுவது மாதிரியான பயிற்சி, பெடல் போடுவது போல கால்களை சுழற்ற வேண்டும். அடிவயிறு, தொடைப்பகுதியில் உள்ள எக்ஸ்ட்ரா சதை குறையும். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சரியான சாய்ஸ். தினமும் 20 நிமிடங்கள் செய்தால் எடை குறையும். ஃப்ரெஷ்னெஸ் கிடைக்கும்.

5. முதுகு, தண்டுவட உறுதிக்கு ஹைப்பர் எக்ஸ்டென்ஷன்

இந்த இயந்திரத்தின் உதவியோடு முன்புறம் குனிந்து நிமிர்ந்து பயிற்சி செய்யலாம். முதுகுத் தசைப் பகுதிகளையும், தண்டுவடத்தையும் உறுதி செய்யும் எக்சர்சைஸ். எல்லா வயதினருக்கும் ஏற்றது. டூவீலர் ஓட்டும் பெண்கள், இதனைத் தொடர்ந்து செய்தால் முதுகு வலியில் இருந்து தப்பிக்கலாம்.

6. கலோரி மைனஸுக்கு எலிப்டிக்கல் ஃபிட்னஸ் க்ராஸ்

இருந்த இடத்தில்,நின்றபடி சைக்கிள் ஓட்டும் பயிற்சி. உடலின் மொத்த பாகங்களும் செயல்படுவதால் நல்ல எக்சர்சைஸ். கலோரியை குறைக்க
உதவுகிறது. எந்த வயதினருக்கும் ஏற்றது.

7.ஃபிட்னஸுக்கு ஸ்பின் சைக்கிள்

இருந்த இடத்தில் சைக்கிள் ரேஸ்! 10 நிமிடப் பயிற்சியில் 100 கலோரி வரை குறைக்கலாம். விளையாட்டு வீரர்களுக்கும் ஃபிட்னஸ் பிரியர்களுக்கும் சரியான சாய்ஸ்.


8.வீகைகள், தோள்கள் வலுவாக

பைசெப்ஸ் கர்ல் கைகளை நீட்டி, மடக்கும் பயிற்சியை இந்த இயந்திரத்தில் செய்யலாம். எளிதாகச் செய்ய, கடினமாகச் செய்வதற்கு ஏற்ப ப்ரோக்ராமை மாற்றி வைத்துக் கொள்ளலாம். கைகளில் உள்ள சதைகளை குறைக்கும். தோள்களுக்கு பலம் தரும். சிக்கென்ற தோற்றம் தரும். தினமும் 15 நிமிடங்கள் செய்தால் போதும்.

10. தொடைச் சதை குறைய

லெக் எக்ஸ்டென்ஷன். லெக் கர்ல் காலை நீட்டி, இந்த இயந்திரத்தில் உள்ள நீளமான வெயிட்டுக்கு அடியில் கொடுத்து மேலே தூக்கிக் கீழே இறக்கும் பயிற்சி. தொடை, பின்புறம் பெரிதாக இருக்கிறது என கவலைப்படுபவர்களுக்கு இது வரப்பிரசாதம். சரியாகப் பயிற்சி செய்தால் நல்ல ரிசல்ட் உடனே கிடைக்கும். செய்வதற்கு எளிது என்பதால் எல்லா வயதினருக்கும் ஏற்றது.

11.அகண்ட தோளைக் குறைக்க ஷோல்டர் ப்ரெஸ் இயந்திரத்தின் மேலே இருக்கும் இரு கைப்பிடிகளையும் பிடித்து மேலும் கீழும் இழுக்கும் பயிற்சி. தோள்கள் அகலமாக இருக்கும் பெண்கள் இந்தப் பயிற்சியைச் செய்தால் குறையும். முதுகுக்கும், தோளுக்கும் பயிற்சி கிடைப்பதால் விரைவில் பலன் தெரியும்.

12. மார்பகத் தளர்ச்சி நீங்க

செஸ்ட் ப்ரெஸ் அமர்ந்த நிலையில், இருபக்கமும் இருக்கும் லீவரை முன்னும் பின்னும் இழுக்கும் பயிற்சி. மார்பகங்கள் தளர்ந்து போகாமல் இருக்கும். பாலூட்டும் தாய்மார்கள் இந்தப் பயிற்சியைச்செய்யலாம். தினமும் 20 நிமிடம் செய்தால் போதும்.

தூக்க மாத்திரைகளால் கேன்சர் வரும்-(THOOKA MATHIRAIYAL CANCER VARUM)


சம்பாதிக்க வேண்டும்’ என்கிற மன அழுத்தம் முதலில் நசுக்கித் தள்ளுவதென்னவோ நம் தூக்கத்தைத்தான். ‘‘தூக்கம் என்னங்க தூக்கம்... ஒரு தூக்க மாத்திரை போட்டா தன்னால வரப்போகுது’’ என்கிற வகையறாவா நீங்கள்? உங்களுக்கான மேட்டர்தான் இது... ‘‘தூக்க மாத்திரைகளே கேன்சருக்குக் காரணமாகி நிரந்தரத் தூக்கத்தில் கொண்டு போய் நிறுத்திவிடலாம்’’ என அதிர வைக்கிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு...

‘ஸ்லீப் டிஸார்டர்... அதாவது ‘தூக்கமின்மை நோய்’ங்கறது பெரிய சப்ஜெக்ட். இந்த பிரச்னைக்கு தீர்வு தர பிரிட்டன், அமெரிக்கா மாதிரி நாடுகள்ல ஸ்பெஷலிஸ்ட்கள் இருக்காங்க. ஆனா, இங்க அதை ஒரு நோயாவே பார்க்கறதில்ல. ஏதோ தலைவலி, காய்ச்சல் மாதிரி பொத்தாம்பொதுவா டாக்டர்கிட்ட மாத்திரையைக் கேட்டு எழுதி வாங்கிட்டுப் போயிடறாங்க. அதுதான் ஆபத்தாகுது!’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் கிருத்திகா.

‘‘நிம்மதியாகத் தூங்குவதற்காக போடற மாத்திரைகள் முதல்ல வாய் உலர்தல், தலை சுற்றல், வயிற்றுப்போக்குன்னு சின்னச்சின்ன பக்க விளைவுகளைத் தரலாம். ரெண்டு நாள்ல இதெல்லாம் சரியாயிடும். ஆனா, மாத்திரைகளையும் அந்த ரெண்டு நாளோட நிறுத்திக்கணும். அப்படியில்லாம மாசக்கணக்குல மாத்திரை எடுத்தோம்னா, நாளாக ஆக ரத்த அழுத்தம் குறைஞ்சு, மூச்சுத் திணறல் ஏற்பட்டு இதய பாதிப்பு வரைக்கும் ஏற்படலாம்.

இன்னொரு சீரியஸான பாதிப்பு, நாம அந்த மாத்திரைகளுக்கு அடிமையாகிடறது. ஒரு மாத்திரையில ஆரம்பிச்சு, அப்புறம் ரெண்டு, நாலுன்னு அதிகமாகி மாசக்கணக்குல டாக்டர் அட்வைஸ் இல்லாமலேயே நினைச்ச நேரத்துல போட வைக்கும். அது பெரிய ஆபத்து. ‘கேன்சர் எச்சரிக்கை’ இப்படி தொடர்ந்து மாத்திரை எடுத்துக்கிட்டு இருக்கவங்களுக்குத்தான். தூக்க மாத்திரைகள் போடற சிலர்கிட்ட நடந்த ஆய்வுல முதல்கட்டமா இப்படிச் சொல்லி யிருந்தாலும், இதை உறுதிப்படுத்த இன்னும் கொஞ்ச நாள் ஆகலாம். ஆனா, இன்னிக்கு இருக்குற இளைஞர்களுக்கு இந்த எச்சரிக்கை நல்ல பலனைத் தரும். ஏன்னா, முன்னாடியெல்லாம் வயசானவங்கதான் தூக்கம் வராம தவிச்சு, மாத்திரை வேணும்னு கேட்பாங்க. இப்ப முப்பது வயசுப் பொண்ணுங்களே ‘தூக்கம் வரல’ன்னு எங்ககிட்ட வர்றாங்க!’’ என்று அதிர்ச்சியைக் கூட்டினார் கிருத்திகா.

‘தூக்கம் வரவில்லை என்கிற சாதாரண பிரச்னை கேன்சரில் கொண்டு போய் விடுமா?’ - நித்ரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்லீப் சயின்ஸ் நிறுவனர் டாக்டர் ராமகிருஷ்ணனிடம் கேட்டோம்.
‘‘மருந்து, மாத்திரைகள் எல்லாத்துலயுமே சின்ன அளவுல பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்யும். இருமலுக்குக் குடிக்கிற சிரப்லயே தூக்கம் வர வைக்கிற மருந்து இருக்கத்தானே செய்யுது? தூக்க மாத்திரைகளைப் பொறுத்த வரைக்கும் டாக்டர்களோட பிரிஸ்கிரிப்ஷன் இல்லாம யாரும் வாங்கிட முடியாது. மெடிக்கல்ல நிச்சயமா டாக்டர் ரசீது இல்லாம குடுக்க மாட்டாங்க.

ஒரே நேரத்துல அதிகமான தூக்க மாத்திரைகளை எடுத்துக்கறப்ப அது உடல்ல பாதிப்பை உண்டாக்குது. அதுகூட உயிரைப் பறிக்கற அளவு போகாதுங்கிறதுதான் என்னோட கருத்து. தூக்க மாத்திரைகளால கேன்சர்ங்கிற தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படலை. அதனால யாரும் பீதியடையத் தேவையில்லை. அதே நேரம் மாத்திரைகள் எடுத்துக்கறப்ப பக்க விளைவுகளுக்குப் பயப்படறவங்க, உடம்புக்கு தேவையான தூக்கம் கிடைக்காதப்ப ஏற்படற விளைவுகளையும் பார்க்கணும். சரியான தூக்கம் இல்லாட்டி, மன அழுத்தத்தோட, கல்லீரல், சிறுநீரகம் கூட பாதிக்கப்படலாம்’’ என்றவர், ‘‘மாத்திரைகளைத் தாண்டி, சில சிகிச்சைகள், உடற்பயிற்சிகள் மூலமாவும் தூக்கமின்மை பிரச்னையில இருந்து விடுபட முடியும்’’ என்கிற ஆறுதல் தகவலும் தருகிறார்.

பொதுவாக மனிதனை சிறிய அளவிலான மயக்க நிலைக்குக் கொண்டு போவதற்கான மருந்துகளே தூக்க மாத்திரைகளில் இருக்கும். நரம்பு மண்டலத்தில் லேசான பாதிப்பை ஏற்படுத்தவல்ல அந்த மருந்துகள்... கேன்சருக்குப் பாதை அமைத்துக் கொடுப்பதை மருத்துவ உலகம் அனுமதிக்காது என்று நம்புவோம்!

என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?(Yennenna kaikariyai yepadi paarthu vaanga vendum)



1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்...

3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய்

4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்

5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.

6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).

7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்

8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்

9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்

10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்

11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது

13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்

15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்

16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்

18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்.


19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்

20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்

21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்

23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்

24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது

26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

27. மொச்சை :கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்

30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

31. பச்சை மிளகாய் :நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமா க இருக்கும்.

உடல் கெடாமல் இருக்க அடிக்கடி செய்ய வேண்டிய உடல் பயிற்சிகள்-(UDAL KEDAMAL IRUKA ADIKADI SEIYA VENDIYA YOGA)

அலுவலங்களில் அதிக நேரம் உற்காந்து வேலை பார்பவர்கள் உடல் கெடாமல் இருக்க அடிக்கடி செய்ய வேண்டிய உடல் பயிற்சிகள்..

29.10.13

சின்னமலையின் சிறப்பம்சம்..!(THE HIGHLIGHT OF CHINNAMALAI NEAR SAIDAPET ..!)



ஏசுபெருமானின் பனிரெண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையார் வாழ்ந்த இடம்தான் சைதாப்பேட்டை சின்னமலை. இயேசுவின் அருட்போதனைகளை பரப்புவதற்காக அவரது சீடர்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணமானார்கள். அந்த வகையில் இந்தியா நோக்கி பயணம் செய்தவர்தான் புனித தோமையார். இவர், கடல் வழி முழுமையாக கண்டுபிடிக்கப்படாத அந்த காலத்திலேயே கேரளா வழியாக சென்னைக்கு வந்து சேர்ந்திருக்கிறார். ஏசுபெருமான் கூறிய பிரசங்கங்களைத் தொகுத்து நமக்கு பைபிளாக வழங்கியது அந்த காலகட்டத்தில்தான். சைதாப்பேட்டை சின்னமலையில் தங்கியிருந்த போது அவர் அமர்ந்து ஜெபம் செய்த பாறை, அதில் அவர் செதுக்கிவைத்த சிலுவை, தாகம் எடுத்தபோது பாறையைப் பிளந்து அவரே உருவாக்கியதாக கூறப்படும் நீரூற்று போன்றவை சின்னமலையின் சிறப்பாக சொல்லப்படுகிறது. இதற்காகவே இதை காண்பதற்காக ஏராளமானோர் தினமும் இங்கு வந்து செல்கின்றனர்.

மேலும், மாட்டுக் கொட்டகையில் மரியன்னை ஏசுவை பெற்றெடுக்கும் காட்சி, ஏசுவிற்கு தண்டனை வழங்கும் பொருட்டு மன்னரின் முன்னிலையில் விசாரிக்கும் காட்சி, முள்முடி தரித்து சிரசில் குருதி ஒழுக சிலுவையை சுமந்து செல்லும் காட்சி, சிலுவையில் அறையும் காட்சி, இறுதியாக கல்லறையில் கிடத்தப்பட்டிருக்கும் காட்சி என பல்வேறு நிகழ்வுகளை நேரில் பார்ப்பது போன்ற வகையில் தத்ரூப சிலைகளாக இந்த பாறைகளின் மீது வடித்திருக்கிறார்கள். மேலும், இங்கு பச்சைப்பசேல் என படர்ந்திருக்கும் செடி, கொடி, மரங்களும் வாகன இரைச்சல் கேட்காத அமைதியான சூழலும் நாம் சென்னையில்தான் இருக்கிறோமா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இதை பார்ப்பதற்கென்றே தினமும் வந்து செல்கிறார்கள்.

பார்வை நேரம்: காலை 5 மணி முதல் மதியம் 1.30 மணி வரை, மதியம் 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை. கட்டணம் எதுவும் கிடையாது.

சைனஸ் பிரச்சனைக்கு என்ன தீர்வு-(SINUS PIRACHANAIKU ENNA THEERVU)

சைனஸ் பிரச்சினைக்கு வெவ்வேறு வகையான வைரஸ்கள் தான் காரணம். இந்த வைரஸ் தாக்குதல் காற்றின் வழியாகவே பெருமளவில் நம்மை தாக்குகிறது. இதற்கு அடுத்தபடியாக நமது தவறான உணவுப் பழக்கம், உணவு மூலமாகவும் வைரஸ் தொற்றி ஜலதோஷத்தை உண்டாக்கி விடுகிறது...

ஜலதோஷத்தின் ஆபத்தான இன்னொரு பக்கம்தான் சைனஸ். ஜலதோஷம் என்பது 3 நாளிலோ அல்லது அதிகபட்சம் 2 வாரத்திலோ குணமடைந்து விடக்கூடிய ஒன்று. அதன்பிறகும் ஜலதோஷம் குணமாகவில்லை என்றால் `சைனஸ்' கோளாறின் பிடியில் வசமாக சிக்கிக் கொண்டோம் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர். காது மூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவி ராமலிங்கம். அவர் மேலும் கூறியதாவது:-

ஜலதோஷத்தின் தொடர்ச்சியான அவதாரமாகத்தான் சைனஸ் திகழ்கிறது. ஜலதோஷத்தால் உருவாகும் சளி சைனஸ் அறைகளில் தங்கி கிருமிகலந்த சீழாகி மாறி விடுகிறது.

அறிகுறிகள்.....

சைனஸ் பிரச்சினையில் சிக்குபவர்களால் நன்றாக சுவாசிக்க முடியாது. சரியாக பேசவும் இயலாது. தலை பாரமாக இருக்கும். குனிந்தாலும், நிமிர்ந்தாலும் கூட `விண் விண்' என்று தெறிக்கிற மாதிரி தலை வலிக்கும். லேசாக இருமினாலும் வலி ஏற்படும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்ளும். வாசனை தெரியாது. ருசியை உணர முடியாது. மூக்கின் முக்கிய பாகங்களாக இருப்பது சைனஸ் அறைகள். வலது - இடது என்று மொத்தம் 4 ஜோடி சைனஸ் அறைகள் இருக்கின்றன.

நெற்றி பகுதியில் பிரன்டல் சைனஸ் அறைகளும் அதற்கு சற்று கீழே `எத்மாய்டு' சைனஸ் அறைகளும், மூக்குக்கு பின்னால் ஸ்பீனாய்டு சைனஸ் அறைகளும் இருக்கின்றன. முன்பக்கம் பிரதானமாக இருப்பது மேக்ஸிலரி சைனஸ் அறைகள். மூக்கின் அனைத்து செயல்களுக்கும் உறு துணையாக நிற்பது இந்த சைனஸ் அறைகள்தான். நாம் எழுப்பும் சத்தத்துக்கு சரியான ஒலி வடிவம் தருவதும் இந்த சைனஸ் அறைகளே.

கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் தேங்காய்த் துருவலைப் பயன்படுத்தலாமா? -(Coconut)

பிராண்டட் தயாரிப்புகளில், தயார் செய்த தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், பெயரில்லா பாக்கெட்டுகளை வாங்கும்போது அதன் தரத்துக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இது போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்தினால் வயிற்றுவலி வந்துவிடும். அது ஆரம்ப கால எச்சரிக்கை! வண்ணமூட்டப்பட்ட தேங்காய்த் துருவலை தவிர்த்து விடுங்கள். 
‘பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறதே, எளிதாக வேலையை முடித்துவிடலாமே’ என்று ஆசைப்பட்டு, ஆபத்தை விலை கொடுத்து வாங்காதீர்கள். வயிற்றுவலியில் ஆரம்பிக்கும் பிரச்னை செரிமானக் கோளாறு, வாந்தி, மயக்கம் வரை கொண்டு வந்துவிடும். ஃப்ரெஷ் தேங்காயை வாங்கிப் பயன்படுத்துவதே நல்லது.

வாழையடி வாழை! வாழைத்தண்டின் மருத்துவ குணங்கள்..!(VAALAITHANDU)



என்ன சத்துக்கள்?

அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது.

பலன்கள்

கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்.

ரத்த அழுத்தம் குறையும், சிறுநீரக் கல் கரைக்கும்.

அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம்.

இரண்டு ரெசிபி

1) வாழைத்தண்டு ஜூஸ்
வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

2) வாழைத்தண்டு மோர்
வாழைதண்டு- 6
தயிர்- 1 லிட்டர்
இஞ்சிச் சாறு- 1 ஸ்பூன்
எலுமிச்சை இலை - 5 அல்லது 6
பெருங்காயத்தூள்- சிறிது
உப்பு- தேவைக்கேற்ப

செய்முறை:

வாழை தண்டிலிருந்து நாரினை நீக்கவும்.

வாழைத் தண்டை துண்டு துண்டாக நறுக்கி சிறிதளவு மோரில் போட்டு மிக்சியில் அடித்து வடிகட்டி வைக்கவும். மீதமுள்ள தயிரைக் கடைந்து தாராளமாக நீர் ஊற்றி ஐஸ்போட்டோ அல்லது பிரிட்ஜில் வைத்தோ குளிரவைக்கவும்.இதில் வடி கட்டி வைத்துள்ள வாழை தண்டு சாற்றை கலக்கவும்.

இஞ்சிச்சாறு, உப்பு, பெருங்காயத்தூள்சேர்க்கவும்.

எலுமிச்சை இலையை கசக்கி மோரில் போடவும்.

வயிற்று உப்பிசம், வயிற்று கோளாறு நீங்கும். கிட்னி ஸ்டோன் உள்ளவர்களுக்கு வாழைத்தண்டு சிறந்த பலனை தரும். நீர் கடுப்பு நோய் உள்ளவர்களுக்கு உபாதைகளை நீக்கும். உடல் பருமனாக உள்ளவர்கள்தொடர்ந்து பருகி வர பருமன் குறையும்.

தயிர் தரும் சுக வாழ்வு..


* தயிரில் அதிகளவு ஊட்டச்சத்து, புரதம், கல்சியம் ஆகியன நிறைந்துள்ளன....

* தயிர் எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்ட புரதத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. பால் ஒரு மணி நேரத்தில் 12 சதவிகிதம் மட்டுமே ஜீரணமாகும். ஆனால் தயிர் ஒரு மணி நேரத்தில் 91 சதவிகிதம் ஜீரணமாகும்.

* தயிரில் நிறைந்துள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களால் உடலின் ஜீரணத்தன்மையும் அதிகரிக்கும்...

* உடலில் வைட்டமின் ‘பி’ உறுஞ்சுவதற்கு- கிறகிப்பதற்கு தயிரிலுள்ள ‘பாக்டீரியாக்கள்’ ஊக்குவிக்கும்.

* தலையில் தயிர் கொண்டு ‘மஸாஜ்’ செய்வதன் மூலம் பொடுகுத் தொல்லை நீங்குவதுடன் தூக்கமும் நன்கு வரும்.

* சர்க்கரை, இரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவை உள்ளவர்கள் கொழும்புச் சத்து உள்ள பாலில் தயாரிக்கப்பட்ட தயிரையோ அல்லது மோரையோ சாப்பிட்டுவர நோய்கள் நீங்கும்.

* குழந்தைகளுக்கு சர்க்கரை அல்லது தேன் கலந்து கொடுத்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

* தயிர் கொண்டு தோல்களுக்கு ‘மஸாஜ்’ செய்வதென்றால் தோல் நுண்ணிய பகுதிகளிலுள்ள அழுக்குகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.

* ஒரு கரண்டி தேன், மசித்த பப்பாளி இவற்றுடன் இரண்டு கரண்டி தயிர் சேர்த்து முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெறும்.

* தயிருடன் தோடம்பழம் அல்லது எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் முகத்தில் தடவி வரலாம்.

* நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் தயிர் அதிக நன்மை பயக்கக் கூடியது.

* தூக்கமின்மையில்லாதோர் தயிரை உணவில் சேர்த்துக் கொண்டால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவர்.

இரவு நேரங்களில் நெஞ்செரிச்சல்-(IRAVU NERANGALIL NENJUERICHAL)


இரவு நேரங்களில் நெஞ்செரிச்சலாக இருக்கிறது. அடிக்கடி வாந்தி வருவது போன்று இருப்பதால் சரியாகத் தூங்க முடிவதில்லை. தினமும் இதே பிரச்னை..

இதற்கு ‘உணவுக்குழாய் அமில அரிப்பு’ என்று பெயர். நம் உடலின் இரைப்பைக்கும் உணவுக்குழாய்க்கும் இடையில் வால்வு ஒன்று இருக்கிறது. இந்த 
வால்வு பழுதுபட்டால் இந்தப் பிரச்னை வரும். இதனை ‘எதுக்களித்தல்’ என்றும் சொல்வதுண்டு.

இரவு நேரத்தில் வயிறு முட்ட சாப்பிடுவதும் இந்தப் பிரச்னையை உருவாக்கும். அதிகம் தண்ணீர் குடிப்பதும் ஒரு காரணம். பருமனாக இருப்பவர்களுக்கு இது வரலாம். இரவு முழுக்க இதே பிரச்னை நீடித்தால், காலையில் எழுந்திருப்பதே கஷ்டமாக இருக்கும்.

மந்தமான உணர்வையும் உருவாக்கும். தூங்கப் போவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக இரவு உணவை முடித்து விடுவது நல்லது. வயிறு முட்டச் சாப்பிடாமல் அளவாக சாப்பிடுவதும் இந்த பிரச்னையிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.

அதிக காரம், புளிப்பு, கொழுப்புத் தன்மையுள்ள உணவைத் தவிர்த்து விடுங்கள். பருமனை குறைக்க முயற்சி செய்யுங்கள். இரவு நேரங்களில் பொரித்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். தலைவலி, மூட்டுவலி மாத்திரை சாப்பிடுபவர்களையும் இந்த நோய் தாக்கும்.

மருத்துவர் ஆலோசனையுடன் மாத்திரை எடுத்துக்கொள்வதை சில நாட்கள் ஒதுக்கி வையுங்கள். பிரச்னை தொடர்ந்தால் என்டோஸ்கோபி சோதனை செய்து கொள்வது நல்லது.

வலிக்கும் மனதுக்கும் தொடர்புண்டா.-(COLLIGATE PAIN TO MIND?)

வலியில்லாத மனிதர்களைப் பார்க்கவே முடியாது. தலைவலி, முதுகு வலி, கை வலி, கால் வலி என ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வலி... இவர்களில் பெரும்பாலானோர் மருந்து, மாத்திரை என சிகிச்சைகளை மேற்கொண்டும் பலன் கிடைக்காமல் வலியைத் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கவில்லையே என்கிற வேதனை ஒரு பக்கம்...

சதா சர்வ காலமும், வலி வலி எனப் புலம்புவதைக் கேட்கும் வீட்டாரும் உறவினர்களும், இவர்களைக் கிட்டத்தட்ட மனநோயாளிகளாகவே பார்க்கிற அவலம் இன்னொரு பக்கம் என வலியுடன் போராடும் வாழ்க்கை கொடியது. தீராத, நாள்பட்ட வலி என்பது மன நோயின் அறிகுறியாக இருக்குமா? வலிகளுக்கும், மனதுக்கும் தொடர்புண்டா? விளக்கமாகப் பேசுகிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை நிபுணர் குமார்.

‘‘எந்த நோயுமே நீண்ட நாள்களாக சரியாகாமல் கஷ்டம் தந்தால், அது மன உளைச்சலை உண்டுபண்ணும். மற்றவர்களைப் போல இருக்க முடியவில்லையே என்கிற வேதனையுடன், எந்த சிகிச்சையில் வலி தீரும் என்கிற தேடலில் பணம் விரயமாகிற கவலையும் சேர்ந்து கொண்டு, அவர்களுக்கு ‘செகண்டரி டிப்ரஷன்’ என்பதை உருவாக்கலாம். நோயின் காரணம் வேறாக இருக்கும்.

ஆனால், அதன் விளைவாக மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தத்தின் பாதிப்பால் அவர்களது நடவடிக்கைகளில் காணப்படும் மாற்றங்களை வைத்து, குடும்ப உறுப்பினர்கள் மனநோயாளி மாதிரி சித்தரித்துப் புறக்கணிப்பது மிகவும் தவறு. நோய் குணப்படுத்தப்பட்டால், மன அழுத்தம் தானாக சரியாகி விடும்.

அடுத்தது, அதிக டென்ஷன், மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவற்றால் பாதிக்கப்படுவோருக்குப் பலவித உடல் உபாதைகள் வரும். ரொம்பவும் டென்ஷனாக இருந்தால் தலைவலியை உணர்கிறோம். சரியாகத் தூங்காவிட்டால் தலைவலியும் வயிற்றுவலியும் வருகிறது. எனவே, மன அழுத்தத்தினால் சில நோய்கள் - முக்கியமாக வலி நோய்களும் வரலாம். வலிக்கான காரணம் அறிந்து குணப்படுத்தாவிட்டால், நீண்ட நாள் வலியானது மன பாதிப்பை உண்டுபண்ணக்கூடும்.

வலியாலும், அது தரும் மன உளைச்சலாலும் அவதிப்படுவோர், முதலில் ஆரோக்கியமான மனநிலையில் இருக்கப் பழக வேண்டும். மருத்துவரின் அறிவுரையின் பேரில் மிதமான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதால், உடலில் சில ஹார்மோன் சுரப்பு நிகழ்ந்து, வலி குறையும். மன அழுத்தத்தை அலட்சியம் செய்தால், சாதாரண வலி கூட தீவிரமானதாகத்தான் தெரியும். எனவே சந்தோஷமான மனதே, வலிக்கான முதல் மருந்து!’’

டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு! உணவே மருந்து-(TEENAGE CHILDREN!)





பெற்றோர் சொல்வதே வேதம்... வீடுதான் உலகம் என்றிருந்த பிள்ளைகளுக்கு, டீன் ஏஜில் அடியெடுத்து வைத்ததும், காட்சிகளும் கனவுகளும் மாற ஆரம்பிக்கின்றன. உடலும் மனதும் புரியாத புதிர்களாகின்றன. அந்தரங்கம் பற்றிய ஆர்வம் தலை தூக்குகிறது. அழகைப் பற்றிய தேடல் அதிகமாகிறது. டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கிற ஆண், பெண் பிள்ளைகளின் சிந்தனை, செயல், புறத்தோற்றம், ஆரோக்கியம் என எல்லாவற்றையும் தீர்மானிப்பதில், அந்த வயதில் அவர்கள் உட்கொள்கிற உணவுகளுக்கே முதலிடம்! அது மட்டுமில்லை... வாழ்நாள் முழுக்க அவர்களது ஆரோக்கியத்தைப் பேணி காப்பதற்கான அஸ்திவாரமும், இதுவே!

குழந்தைத்தன்மை கொஞ்சூண்டு மிச்சமிருக்கிற டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு, அந்தப் பருவத்தின் தொடக்கத்தில் முதலில் கொடுக்க வேண்டியது கால்சியமும் இரும்புச் சத்தும் நிறைந்த உணவுகள்.

கீரையின் மூலம் கிடைக்கிற இரும்பும் கால்சியமும் இவர்களுக்கு மிகச்சிறந்த பலன்களைக் கொடுக்கும். மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, வெந்தயக்கீரைகள் அடிக்கடி சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவை. கீரையில் உள்ள குளோரோபில் சரும நிறத்தைக் கூட்டி, அழகைத் தரும். உடலில் கால்சியம் குறையும் போது, சோர்வு உண்டாகும். வியர்வை அதிகமாக வெளியேறினால் கூட, கால்சியம் வீணாவதாகவே அர்த்தம். அதை ஈடுகட்ட, பேரீச்சம்பழம், காய்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, சாத்துக்குடி போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளை வெயிலே படாமல், ஏசி-க்குள்ளேயே பொத்திப் பொத்தி வளர்க்கும் பெற்றோரும் உண்டு. டீன் ஏஜில் அதெல்லாம் சரிப்படாது. 13 வயதுக்குப் பிறகு வைட்டமின் டி என்கிற சத்து அவசியம் தேவை. எதிர்ப்புத் திறனுக்கு அதுதான் ஆதாரம். உடலில் கால்சியம் சேர்வதற்கும், வைட்டமின் டியின் பங்கு மகத்தானது.

என்னதான் உணவின் மூலம் கால்சியம் சேர்ந்தாலுமே, அதற்கு மூலமான வைட்டமின் டி ஆனது, சூரிய வெளிச்சத்திலிருந்து மட்டும்தான் கிடைக்கும். ‘வெயில்ல போனா கருத்துடுவே... உடம்புக்கு ஆகாது’ என்றெல்லாம் பிள்ளைகளை நிழலோட்டமாக வளர்க்காமல், பள்ளி உள்பட வெளியிடங்களுக்கு சைக்கிளில் செல்லப் பழக்குங்கள். வெயில் பட விளையாட அனுமதியுங்கள்.

ஆஸ்தான நடிகை, நடிகரைப் பார்த்து, அவர்களைப் போலவே கட்டுக்கோப்பான உடல்வாகுக்கு ஆசைப்படுவதை இன்று டீன் ஏஜ் ஆண், பெண்களிடம் அதிகம் பார்க்கிறோம். 13 வயதுப் பெண் குழந்தைக்குக்கூட, எடையைக் குறைக்க வேண்டிய கட்டாயம்! அதற்காக டயட் என்கிற பெயரில் பட்டினி! ஆண் பிள்ளைகளுக்கோ 6 பேக், 8 பேக் மோகத்தில் அதே கட்டாயம்! இது மிகவும் தவறு. உடலுக்குத் தேவையான சத்துகளைக் கொடுக்காமல், எடையைக் குறைக்கிற நோக்கத்தில், தவறான உணவுப் பழக்கங்களை மேற்கொள்வது உடலை பலவீனப்படுத்தி, வளர்ச்சியை பாதிக்குமே தவிர, வேறொன்றும் செய்யாது.

எல்லாவற்றிலும் நாகரிகத்தை விரும்பும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு உணவிலும் அதே ஆர்வம். பீட்சாவும் பர்கரும் சாப்பிடுவதுதான் அவர்களை நாகரிகமானவர்களாகக் காட்டு வதாக நினைப்பு. அந்த மாதிரி உணவுகள் அழகு, ஆரோக்கியம் என இரண்டுக்குமே எதிரிகள். மிளகு, சீரகம், வெந்தயம், பூண்டு சேர்த்த உணவுகள் தினமுமே எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை. மிளகு, நரம்புகளைப் பலப்படுத்தி, நினைவாற்றலுக்கு உதவும். சீரகம், உடலைக் குளிர வைத்து, முகப்பருவை விரட்டும். வெந்தயம், கடுகு, இஞ்சி, எள், கருஞ்சீரகம், பப்பாளி, அன்னாசி போன்றவை பூப்படைந்த பெண்களுக்கு அவசியமானவை. டீன் ஏஜில் இருந்தே எடுத்துக்கொள்ளப் பழகினால், பின்னாளில் கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் வராது. தைராய்டோ, முறையற்ற மாதவிடாயோ பாதிக்காது. பெண் குழந்தைகளுக்கு அடிக்கடி பசலைக்கீரை, பாகற்காய், வாழைப்பூ சேர்த்த உணவுகளைக் கொடுத்து வந்தால், இன்று விஸ்வரூபமெடுத்து பயமுறுத்தும் பிசிஓடி பிரச்னை பக்கத்தில் கூட நிற்காது. டீன் ஏஜ் பெண்களுக்கு மாதத்தில் 5 நாள்கள் நெல்லிக்காய் சாறும், ஆண் பிள்ளைகளுக்கு ஆப்பிள், அத்திப் பழங்களையும் கொடுத்தால், வயதுக்கேற்ற வாளிப்புடனும் வனப்புடனும் திகழ்வார்கள். ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். நோயில்லாத வாழ்க்கையை இங்கிருந்தே தொடங்குவோமே!

பசலைக் கீரை கடைசல்
என்னென்ன தேவை?

பசலைக்கீரை - 1 கட்டு, குடமிளகாய் - 1, பயத்தம் பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, தக்காளி - 2, வெங்காயம் - 1, பூண்டு - 10 பல், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

தவறான உணவு பழக்கத்தாலும் மூட்டு வலி வரும் வாய்ப்பு.-(MOOTU VAZHI)

மூட்டுகளில் தேய்மானம் அடைவதால் ஏற்படுவது மூட்டு வாதம். பொதுவாக மூட்டு வாதம் எனப்பட்டாலும், இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இந்த நோய் பெரும்பாலும் வயதானவர்களையே தாக்குகிறது. தற்கால உணவு பழக்க வழக்கங்கள் உடலில் பலவீனத்தை ஏற்படுத்துகின்றன. அதிலும் பாஸ்ட் புட் கலாசாரம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. பெயரில்தான் பாஸ்ட் இருக்கிறதே தவிர, இதை உண்பதால் உடலில் சுறுசுறுப்பு குறைந்து விடுகிறது என்பது என்னவோ நிஜம்தான். அதுபோல் தற்போதைய வேலை முறைகளும், உடல் உழைப்புக்கு அவசியமே இல்லாத அளவுக்கு உள்ளது.

இன்றைய அவசர யுக மக்களிடம் அதிகாலை எழுதல், உடற்பயிற்சி போன்ற பழக்கங்கள் இல்லவே இல்லை. எளிதான சிறு சிறு உடற்பயிற்சிகள் கூட உடலை வலுப்படுத்தும். இதை யாரும் உணர்வதே இல்லை. இதனால் இளைஞர்கள், இளம் பெண்களுக்கு கூட எலும்புகள் பலவீனமாகி மூட்டுதேய்மானம் அடைந்து பாதிக்கப்படுகின்றனர். வளரும் குழந்தைகள் உணவுப்பழக்கம் பற்றி பெற்றோரும் கண்டுகொள்வதில்லை....

இத்தாலிய உணவுகளான பீட்சா, பாஸ்டா போன்றவற்றை பெற்றோரே வாங்கி கொடுக்கின்றனர். இதனால், இயற்கை சார்ந்த உடல் நலத்தை மேம்படுத்தும் உணவு பற்றிய உணர்வே குழந்தைகளிடம் இருப்பதில்லை. மேலும், இவ்வாறு மேலை நாட்டு உணவுகளை சாப்பிடுவது தங்களது அந்தஸ்தை அதிகப்படுத்தும் என்ற தவறான கண்ணோட்டம் உள்ளதும் இதற்கு காரணம். படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் உடல் நலத்தை பேணுவதற்கும் கொடுக்கப்பட வேண்டும்.

மூட்டு வாதத்துக்கு சிகிச்சை என்ன?

மூட்டுவாதத்துக்கு தற்போது நவீன சிகிச்சை முறைகள் வந்து விட்டன. நோயாளி எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். இதற்கு பிசியோதெரபி, மூட்டு பொருத்துதல், மெழுகு ஒத்தடம் கொடுத்தல், வலி நிவாரணி மருந்துகள், நோய் எதிர்ப்பு மாற்று மருந்துகள், அறுவை சிகிச்சை என பல்வேறு வகைகளில் சிகிச்சை அளிக்கலாம்.மூட்டு வாத சிகிச்சையின் போது உணவு கட்டுப்பாடு பெரிய அளவில் இல்லை. பொதுவாக மீன் எண்ணெய் மூட்டு அழற்சியை போக்க உதவுகிறது.

ஆனால், கீல் வாதத்தை பொறுத்தவரை உணவு கட்டுப்பாடு அவசியமானது. மாமிசம், சிப்பி, நத்தை வகைகள் கீல்வாதத்துக்கு எதிராக அமைந்துவிடும். மேலும் ஆல்கஹால் போன்ற யூரிக் அமிலத்தை அதிகமாக்குபவை, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். குளூட்டன் ஒவ்வாமை உடையவர்கள் கோதுமை, பார்லி, கம்பு போன்ற தானியங்களை உட்கொண்டால் மூட்டுவலி அதிகமாக வாய்ப்பு உள்ளது.

மூட்டுவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கென உள்ள நிபுணர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்து கொள்வதோடு, பரிந்துரைப்படி உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். உணவு கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் நோய் வேதனையில் இருந்து நாம் மீள முடியும்.

விளாம்பழம்- ( VIZHAMPALAM)




விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

சர்க்கரை நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம்-(BEST FOOD CORN SUGAR PATIENT).


நகரமயமாக்கல் சூழலில் மேற்கத்திய கலாச்சர தாக்குதலால் சத்து மிகுந்த உணவு பொருட்கள் பயன்பாடு குறைந்தது. ஆனால் இப்போது உணவு பொருட்கள் மூலம் பெருகி வரும் நோய்களால் பண்டைய உணவு பொருட்களுக்கு ஏங்கி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. சமீபகாலமாக கம்பு, ராகி போன்ற தமிழர்களின் பண்டைய சிறு தானியங்களை வாங்கி வைத்து பயன்படுத்துவது நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது...

சிறுதானியங்களில் பல வகைகள் இருந்தாலும் சோளம் முதன்மையான உணவு பொருளாக கருதப்படுகிறது. சோள உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சோளம் பயிரிடப்படுகிறது. சோளத்தில் ரொட்டி, கஞ்சி, கூழ், சாதம் போன்றவை மட்டும் தயாரிக்கப்பட்டு வந்த நிலை மாறி தற்போது, இட்லி, தோசை, ஊத்தாப்பம், பணியாரம், ரொட்டி, பரோட்டா, அப்பம், அடை, உப்புமா, கேசரி, வடகம், முறுக்கு, பிஸ்கட், சோள பொரி லட்டு, சேமியா, கொழுக்கட்டை மிக்ஸ், பணியார மிக்ஸ், சமோசா மிக்ஸ் உள்ளிட்ட பல உணவு வகைகள் சோளத்தில் தயாரித்து பயன்படுத்தலாம்.

தற்போது சோள தானியங்களுக்கு நகர்ப்புறங்களில் அதிக கிராக்கி ஏற்பட்டு வருகிறது. மழை வளம் குறைந்து வரும் சூழலில், குறைந்த நீர் தேவையுள்ள சோளப்பயிர்களை விவசாயிகள் உற்பத்தி செய்வது மூலம் நல்ல லாபத்தையும் ஈட்ட முடியும். சோளத்தில் அதிகளவு மாவுசத்து, நார்சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது. குலூட்டான் எனும் வேதிப்பொருள் சோளத்தில் இல்லாத காரணத்தால் கோதுமை ஒவ்வாமை உள்ளவர்களும் சோளத்தை சாப்பிடலாம்.

கோதுமையில் உள்ள புரோட்டீனை விட சோளத்தில் உள்ள புரோட்டீன் சிறப்பு வாய்ந்தது. பட்டை தீட்டப்படாத சோளத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இது மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகவும் உள்ளது. சர்க்கரையைக் குறைக்கும் தன்மை கொண்டதால் இன்சுலின் சாரா சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.

இட்லி, தோசை, ஊத்தாப்பம், பணியாரம், ரொட்டி, பரோட்டா, அப்பம், அடை, உப்புமா, கேசரி, வடகம், முறுக்கு, பிஸ்கட், சோள பொரி லட்டு, சேமியா, கொழுக்கட்டை மிக்ஸ், பணியார மிக்ஸ், சமோசா மிக்ஸ் உள்ளிட்ட பல உணவு வகைகள் சோளத்தில் தயாரித்து பயன்படுத்தலாம்.

தினமும் இரண்டு வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு வராது-(DHINAMUM 2 VELAI PAL THEITHAL MARADAIPPU VARATHU)






காலை, மாலை இரு வேளையும் பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதயத்தில் ரத்தம் உறையும் நோய் ‘த்ராம்போசிஸ்’ எனப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்யும் நிறுவனம் லண்டனில் உள்ளது. மாரடைப்பு, ஸ்டிரோக் வருவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அதில் தெரியவந்த தகவல் பற்றி இதய சிகிச்சை நிபுணர் விஜய் காக்கர் கூறியதாவது:

உடலில் தேவையற்ற கொழுப்பு, லிப்பிட் பொருட்கள் அதிகமானால் ரத்தக்குழாயில் அவை படிகின்றன. ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பை ஏற்படுத்துகின்றன என்று பல காலமாக கூறப்பட்டு வருகிறது. கொழுப்பு, லிப்பிட் மட்டுமல்ல.. வைரஸ் கிருமிகள் மற்றும் நோய்த் தொற்றுகளால்கூட மாரடைப்பு ஏற்படும். பெரும்பாலும் கிருமித் தொற்று பல்லில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.

வாய் வழியாக வயிற்றுக்குள் போய்விடும் உணவுப் பொருட்கள் செரிக்கப்பட்டு சக்தியாகவும் சத்துகளாகவும் மாறுகின்றன. பல்லில் படியும் உணவுத் துகள்கள் கிருமிகளாக மாறுகின்றன. ஒழுங்காக பல் தேய்க்காவிட்டால் இவை உள்ளே சென்று படிப்படியாக மாரடைப்பு உள்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். தினமும் 2 வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு, ஸ்டிரோக் வரும் வாய்ப்பு 60 முதல் 70 சதவீதம் வரை குறையும். இதயம் பலமாக இருக்கும்.இவ்வாறு இதய நிபுணர் விஜய் கூறினார்.

சூடாக காப்பி, டீ குடிப்பவரா? -(COFFEE,TEA)






சூடாக குடிப்பவர் என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்!

“மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது’ என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.”

இந்த ஆய்வு முடிவை, சர்வதேச நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

காபி, டீ மற்றும் சில வகை பானங்களை சூடாக சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர்.

சிலர் தான், நன்றாக சூடு ஆறிய பின் குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இது ஒரு வகையில் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிகிறது.

தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ் நாட்டில் தான் காபி குடிக்கும் பழக்கம் பரவலாக உள்ளது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எடுத்துக்கொண்டால், எவருமே டீ குடிப்பதை தான் விரும்புகின்றனர்.

காலையிலும் டீ குடித்தால் தான் பத்திரிகை யையே படிக்க தோன்றும் சிலருக்கு; இன்னும் சிலருக்கு படுக்கையிலேயே டீ வந்தாக வேண்டும். “பெட் டீ’ குடித்தபின் தான் திருப்பள்ளியெழுச்சி நடக்கும். அந்த அளவுக்கு டீ மோகம் உள்ளது.

“காலையில் எழுந்தாலும் சரி, மற்ற நேரங்களிலும், சூடா ஒரு டீ குடித்தால் போதும்… உடல் இன்ஜினுக்கு பெட்ரோல் போட்ட மாதிரி; அப்புறம் தான் வேலையே ஓடும்’ என்று பலர் குறிப்பிடுவதை கேட்டிருப்பீர்கள்.

ஆபீசில் வேலை செய்வோரும், தொழிற் சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களும் மணிக்கொரு தரம் டீ குடித்தால் தான் சோர்வு நீங்கியது போல உணர்வர்; தம்மாத்தூண்டு டம்ளரில் கொடுத்தாலும், அதை குடித்தால் தான் சுறுசுறுப்பே வரும்.

அதிக சூடாக டீ குடிப்பதால் ஏற்படும் உடல் கோளாறு பற்றி கடந்த சில ஆண்டாக மேற்கொண்டு வந்த ஆய்வில் இந்திய நிபுணர்கள் ஆபத்தான சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர்.

ஆய்வு முடிவுகளில் அவர்கள் கூறியிருக்கும் சில தகவல்கள்:

* வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது; குறிப்பிட்ட அளவில் தான் சூட்டை அது தாங்கும். அதிகமானால், அதன் சுவர் அரிக்கத் துவங்கி விடும்.

* அதிகமான சூட்டுடன் டீ குடித்தால் , உணவுக்குழாய் சுவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன; அதன் சுவர்கள் அரிக்கப்பட்டு, திசுக்கள் பலவீனம் அடைகின்றன.

* இதனால், சுவர்ப்பகுதியில் உணவுக்குழாய் கேன்சர் கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளது. மற்றவர்களை விட, சில பழக்க வழக்கங்களை கடைபிடிப்பவர்களுக்கு கேன்சர் ஆபத்து அதிகம்.

* பான் பராக், புகையிலை போன்றவற்றை சுவைப்பவர்களுக்கு 1.1 மடங்கு கேன்சர் வாய்ப்பு அதிகம்.

* பீடி குடிப்போருக்கு 1.8 மடங்கு கேன்சர் ஆபத்து உள்ளது.

* சிகரெட் பிடிப்போருக்கு இரண்டு மடங்கு கேன்சர் அபாயம் உள்ளது.

* மது குடிப்போருக்கு கேன்சர் அபாயம் 1.8 மடங்கு.

* அதிக சூட்டுடன் டீ குடிப்போருக்கு, கேன்சர் வரும் வாய்ப்பு இவர்களை விட, நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.

* வெயில் பருவத்தை விட குளிர்காலத்தில், குளிர் பிரதேசத்தில் உள்ளவர்கள் சூடாக டீ குடித்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம்.

* சூடான பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு ஓரளவு பாதிப்பு வாய்ப்பு குறைவு தான்.

இவ்வாறு ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனை நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இவர்களின் ஆய்வு முடிவுகளை சர்வதேச நிபுணர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

டாடா நிபுணர்கள்,தங்கள் ஆய்வுக்கு காஷ்மீரில் 1,500 பேரிடம் சர்வே எடுத்துள்ளனர். அவர்களில் அதிக சூடாக டீ குடிப்போருக்கு கேன்சர் ஆபத்து உள்ளதை உறுதி செய்தனர்.

ஆண்டுக்கு, இப்படிப்பட்டவர்களில் சராசரியாக 800 பேருக்கு கேன்சர் வருவதும் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் சர்வதேச கேன்சர் ஆராய்ச்சி இதழ், “இன்டர்நேஷனல் கேன்சர் எபிடமாலஜி’யில் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

அது சரி, நீங்கள் அதிக சூடாக டீ குடிப்பவரா? அப்படீன்னா, இனி குடிக்க மாட்டீங்கல்ல.

வாய்புண் தொல்லைக்கு வீட்டிலேயே மருந்திருக்கு-(VAAIPUN)



நெல்லி இலைகளை அவித்த நீரீனால் அடிக்கடி வாய் கொப்பளித்துவர வாய்ப்புண்கள் ஆறிவிடும். நெல்லிச் சாறையும், தேனையும் சமமாகக் கலந்து, மூச்சுத் திணறல், நீண்ட கால விக்கல் நோய் முதலியவற்றிற்குக் கொடுத்து வரலாம். சில மருத்துவர்ள் இதோடு திப்பிலி சூரணத்தையும் சேர்த்துக் கொடுப்பார்கள். 

வாய்ப்புண் போக, மணத்தக்காளி இலைகளை நிறைவாய் போட்டு மென்று, சற்று நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கவும். இவ்வாறு முற்றின தேங்காயையும் உபயோகிக்கலாம்.

வாயில் வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும். வாய்ப்புண் அதிகமாகி விட்டால் காரத்தை அடியோடு நிறுத்த வேண்டும். மாசிக் காயை உடைத்து அதன் தோலை மாத்திரம் வாயில் போட்டு அப்படியே அடக்கிக் கொள்ளுங்கள். ஊறிவரும் நீரை விழுங்குங்கள். வாய்ப்புண் சரியாகிவிடும்.

வாயில் புண் இருந்தால், அகத்திக்கீரையைச் சமைத்துப் சாப்பிடவும். வாய்ப்புண்ணும் நாக்குப் புண்ணும் குணமாகும். புண் அதிகமாக இருந்தால், புண் மீது பசு வெண்ணையைத் தடவுங்கள். குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால், மாசிக்காயை பாலில் கரைத்து தேனில் குழைத்து நாக்கில் தடவ குணமாகும்.

தீராத வாய்ப்புண்ணிற்கு கடுக்காயை உடைத்து ஒரு துண்டை வாயில் அடக்கி வைத்திருக்கவும். சாறு தொண்டையில் போகப்போக உடனடியாக குணம் கிடைக்கும். பச்சரிசி, பயத்தம்பருபபு 1 ஸ்பூன் வெந்தயம், முழு பூண்டு 1 உரித்துப்போட்டு குக்காரில் வைத்து வெந்தவுடன், அத்துடன் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறி வாய்ப்புண்ணும் நீங்கும். மணத்தக்காளிக் கீரையையும், அகத்திக் கீரையையும் பொரியலாகச் செய்து, தேங்காய்ப் பருப்பு சேர்த்து சாப்பிட்டால், வாய்புண் இரண்டே நாட்களில் குணமாகும்.

இதயத்திற்கும் பல்லுக்கும் சம்பந்தம் உண்டா.?-(HEART AND TEETH)




இதயத்திற்கும் பல்லுக்கும் சம்பந்தம் உண்டா?

கோவை கே.ஜி மருத்துவமனை இருதய நோய் நிபுணர் டாக்டர் சி.பாலசுப்ரமணியம், தினகரன் வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்:

மாரடைப்பை வெல்ல முடியுமா?

மாரடைப்பு என்றும் மணி அடித்துக்கொண்டு வராது. இந்நோய் பலரது உயிரையும் பறித்துள்ள விநோத நோய். தள்ளிவைப்பு, அசட்டை ஆகியவை மாரடைப்பைவிட கொடிய நோய். முழு உடல் பரிசோதனையின்போது மாரடைப்பு அறிகுறி தெரியவந்தால், மாரடைப்பை நாம் வென்றுவிடலாம்.

நடக்கும்போது அதிகம் மூச்சு வாங்குவது எதனால்...?

ஹார்ட் அட்டாக் என்பது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது. இருதய தசைகளின் செயல்பாடு குறைவதால் இருதயத்திலிருந்து வெளியேறும் ரத்தத்தின் அளவு குறைந்து, சரியாக ரத்தம் வெளியேறாத நிலையில் ஏற்படும் பாதிப்பே ஹார்ட் ஃபெயிலியர். சம தளத்தில் நடக்கும்போது மூச்சு வாங்கினால் ஹார்ட் ஃபெயிலியர் உள்ளது என்று அர்த்தம். உடனடியாக இருதய நோய் நிபுணரை சந்திப்பது நல்லது.

அதிக கோபம் ஆபத்தை விளைவிக்குமா?
அதிக கோபம் வரும்போது அதிகளவு ரத்தத்தை இருதயம் பம்ப் செய்ய வேண்டியிருக்கிறது. கோபப்படுவதால் மனம் மட்டுமின்றி உடலும் கெட்டுப்போகிறது. கோபத்தால் பணம், பதவி, மரியாதை எல்லாமே போய்விடும். உச்சக்கட்டமாக உயிரும் போய்விடும்.

சாதாரண நெஞ்சு வலிக்கு முதலுதவி மட்டும் போதுமா?
நெஞ்சு வலி ஏற்பட்டால் உடனே வீட்டுக்கு அருகில் உள்ள டாக்டரை பார்த்து உடனடி சிகிச்சை எடுப்பது நல்லது. அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் தரமான இருதய நோய் நிபுணரை சந்தித்து சிகிச்சை பெறவேண்டும். நாளை பார்க்கலாம்... காலையில் செல்லலாம்... என தள்ளிப்போடக்கூடாது. இது காலனை வரவழைக்கும். மாரடைப்பு யாருக்காகவும், எதற்காகவும் காத்திருக்காது.

இதயநோய் ஏற்பட பற்களும் ஒரு காரணம் என்கிறார்களே. எப்படி?

பற்களில் பாக்டீரியாவின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதை கண்டுகொள்ளாமல் விடுகிறவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு உள்ளது. வயிற்றில் குடல் புண்ணை உருவாக்கும் ஹெலிக்கோ பேக்டர் பைலோரே என்ற நுண்ணுயிரி மாரடைப்பை உருவாக்குகிறது என தற்போது தெரியவந்துள்ளது.

உணவில் பயன்படுத்த உகந்த எண்ணெய் எது?
கொழுப்பு வியாதிக்கு முக்கிய காரணமாக இருப்பது சாப்பாட்டில் நாம் பயன்படுத்தும் எண்ணெய்தான். உணவில் நாம் பயன்படுத்தும் மூன்று விதமான எண்ணெயில் கரையும் கொழுப்பு, கரையாத கொழுப்பு என இருவித கொழுப்பு உருவாகிறது. தாவர வகைகளில் இருந்து தயாரிக்கும் எண்ணெய் சிறந்தது. விலங்குகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் உகந்தது அல்ல.

அத்லெடிக் ஹார்ட் என்றால் என்ன?

விளையாட்டு வீரர்களுக்கு இருதயத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதுதான், அத்லெடிக் ஹார்ட் என்று சொல்லப்படுகிறது.

உணவில் வெள்ளை பொருட்களை தவிர்க்க வேண்டும் என்கிறார்களே, அது என்ன?

சர்க்கரை, உப்பு, மாவு என்ற மூன்று வெள்ளை பொருட்கள்தான் பல்வேறு நோய்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கின்றன. அந்த வெள்ளை விஷயங்களை ஒதுக்கிவிட வேண்டும். இந்த வெள்ளை பொருட்களை ஒதுக்கிவிட்டு, மனதை எப்போதும் வெள்ளையாய் வைத்திருக்க வேண்டும். தினம் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். நோய் நம்மை அண்டாது.

இதயத்திற்கும் பல்லுக்கும் சம்பந்தம் உண்டா? மாரடைப்புக்கு கொழுப்பு தான் காரணம் என்கிறார்களே?

மாரடைப்புக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனித மனம் ஏ, பி என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஏ பிரிவை சேர்ந்தவர்கள் சுறு சுறுப்புடன் எப்போதும் டென்ஷன் உடனேயே இருப்பார்கள். இலக்கை நிர்ணயித்து அதை அடைவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவார்கள். இந்த மனம் பெற்றவருக்கு அதிகளவில் மாரடைப்பு ஏற்படுகிறது.

உஷார்...துவைக்காத ஜீன்ஸ்...அரிப்பு ஏற்படும்-(THUVAIGATHA JEANS)


ஒரு வாரம் ஜீன்ஸ் பேண்ட்டை துவைக்காமல் போடுபவர்களா நீங்கள்...உங்களை விட ஒரு அழுக்கு மனிதர் இருக்க முடியாது. உங்களுக்கு அரிப்பு நோய் வருவதை யாராலும் தடுக்க முடியாது. கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தோல்நோய் துறை தலைவர் டாக்டர் ராமசாமி மருத்துவம் பகுதிக்காக பகிர்ந்து கொண்டது:

இப்போதைய இளைஞர்களை அதிகம் பாதிக்கும் விஷயம் தோல் நோய். பயன்படுத்தும் உடைகள், உணவு கலாச்சாரம் போன்றவை நமது உடலில் உள்ள தோல் பகுதியை பாதிக்கும் முக்கிய அம்சங்கள். குறிப்பாக நண்பர்களுக்கிடையே உடைகள் மாற்றி அணிந்து கொள்வதை பூரிப்பான விஷயமாக கருதுகின்றனர். ஆனால் உண்மையில்லை. உடை விஷயத்தில் நண்பனிடமிருந்து விலகியிருப்பது தான் உங்களுக்கு நல்லது. ஒரே உடையை பலர் மாற்றி, மாற்றி அணிவது அனைவருக்கும் தோல் நோயை உண்டாக்கும்.

கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களிடம் உடை மாற்றி அணியும் போக்கு அதிகமாக உள்ளது. அதேபோல் உள்ளாடைகளை எக்காரணம் கொண்டும் ஈரம் காயாமல் அணியக்கூடாது. குளித்த பின் உடம்பை நன்கு துடைக்கவேண்டும். ஈரத்துடன் துணிகளை உடுத்தக்கூடாது. அதேபோல் ஒருவர் அணிந்த உடையை மற்றவர்கள் அணியக்கூடாது. இவ்வாறு செய்தால் தோலில் படர்தாமரை நோய் ஏற்பட்டு அரிப்பு ஏற்படும். குறிப்பாக கால் இடுக்குகளில் அரிப்பு ஏற்பட்டு உள்ளாடைகள் சீல் வடிய ஆரம்பித்து விடும்.

இதனால் காயம் ஏற்பட்டு அந்த பகுதியே கருப்பாக மாறிவிடும். ஜீன்ஸ் பேண்ட் அணிபவர்களாக இருந்தாலும் அதை ஒரு நாள் மட்டுமே பயன்படுத்தவேண்டும். படர்தாமரை என்னும் தோல் அரிப்பு நோய் ஏற்பட்டால் 21 நாட்களுக்கு தொடர் சிகிச்சை எடுத்தால் குணமாகி விடும்.

சொரியாசிஸ்:

தோல் வளர்ச்சி காரணமாக செதில் படை( சொரியாஸ்சஸ்) உண்டாகிறது. இந்த நோய் பரவாது. தலையில் வெள்ளையாக மீன் செதில் போல் சிறியதாக காணப்படும். முழங்கால், முழங்கைகளில் கூட வரும். இதனால் மூட்டு வலி வரலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மது அருந்துதல் கூடாது. புகை பிடித்தல் கூடாது. மன அழுத்தம் இருக்க கூடாது. இவைகள் இருந்தால் நோய் அதிகமாகும். இந்த நோயை எளிதில் குணப்படுத்த முடியாது. மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

வெண் குஷ்டம்:

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தோலில் வெள்ளை தழும்பு போல் காணப்படும். இது தொற்று நோய் கிடையாது. ஒருவருக்கு வந்தால் அடுத்தவருக்கு பரவாது. இந்த நோயை குணப்படுத்த அரசு மருத்துவமனையில் போதிய கருவிகள் உள்ளன. போட்டோ தெரபி ஒளிக்கதிர் மூலம் இதனை குணப்படுத்தி விடலாம்.

பார்த்தீனிய அலர்ஜி:

விவசாய நிலங்களில் பார்த்தீனிய செடிகள் அதிகமாக வளர்கின்றன. இந்த செடியில் உள்ள பூக்கள் காற்றில் பறந்து நமது உடம்பில் பட்டாலே சிலருக்கு அலர்ஜி ஏற்படும். பார்த்தீனிய அலர்ஜிக்கு ஏற்கனவே உள்ளானவர்கள் முழுக்கை சட்டை அணிந்து காட்டு பகுதிகளுக்கு செல்வது தான் நல்லது. பார்த்தீனிய அலர்ஜி ஏற்பட்டாலும் மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.

உடல் இளைக்க 9 முறை சாப்பிடுங்க. -(UDAL ILLAIKA 9 MURAI SAPIDUNGA)


லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் உடல்பருமனை குறைப்பதற்கான வழிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இங்கிலாந்து, ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு செய்யப்பட்டனர். 

இவர்களுக்கு ஒரே கலோரி அளவுள்ள உணவு 6 முதல் 9 முறை கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

3 வேளையை 2 வேளையாக குறைப்பதாக கூறி அதிகமாக சாப்பிடுவது ஆபத்து. கொஞ்சம் கொஞ்சமாக 9 முறை சாப்பிடுவதால் ரத்தக்கொதிப்பு, கொழுப்பு கட்டுப்படும். உடல் எடையும் சீராகும்.

உண்ணும் உணவு ஊட்டச்சத்துள்ளதாக இருக்க வேண்டும், குறைவாக, போதிய இடைவெளி விட்டு சாப்பிடவேண்டும். இயற்கை உணவுகளை அதிகரித்து கொழுப்பு உணவை தவிர்ப்பது நல்லது. உடற்பயிற்சியும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உணவே மருந்து.-(UNNAVEY MARUNTHU).


எல்.கே.ஜி. தொடங்கி எல்லாவற்றிலும் எங்கேயும் எப்போதும் ‘நம்பர் 1’. எல்லா பெற்றோருக்கும் தம் பிள்ளைகள் இப்படி இருக்கவே ஆசை..

பெற்றோரை ஆட்டிப் படைக்கிற இந்த நம்பர் ஒன் மேனியாவுக்கு எத்தனை ‘நண்பன்’ படம் எடுத்தாலும் விடிவே கிடையாது. எந்தக் குழந்தையும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். அந்த உருவாக்கத்தில் அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா என உறவுகளுக்கு எத்தனை முக்கியத்துவம் உண்டோ, அதைவிட அதிக முக்கியத்துவம் உணவுக்கும் உண்டு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? மனிதர்களின் உணர்வுகளுக்கும், அவர்களது உணவுகளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறார் பிரபல சித்த மருத்துவரும் உணவியல் நிபுணருமான அருண் சின்னையா.

இந்தத் தொடரில் பேசப்போகிற விஷயங்கள் உணவுக்கும் உணர்வுக்குமான உறவைத் தெரிய வைப்பது மட்டுமின்றி, ஃபாஸ்ட் ஃபுட் மோகத்தில் மூழ்கிப் போயிருக்கும் உங்களைத் தெளியவும் வைக்கப் போகிறது.

என்ன... சாப்பிடப் போகலாமா?

மாமியார்-மருமகள் சண்டை, நடுத்தர வயதில் வருகிற காரணமில்லாத கோப தாபம், சதாசர்வ காலமும் தூக்கம், அடுத்தவர் மீது அனாவசிய பொறாமை, வன்மம்... இப்படி மனிதர்களை ஆட்டிப் படைக்கிற பல உணர்வுகளும் அவர்கள் எடுத்துக்கொள்கிற உணவுகளின் பிரதிபலிப்புகளே என்றால் நம்புவீர்களா?

ஆமாம்.... அதுதான் உண்மை!

சாத்வீக உணவு, ராட்சச உணவு, தாமச உணவு என உணவு மூன்று வகை. புரிகிறபடி சொல்வதானால் மென்மையான உணவு, வன்மையான உணவு மற்றும் சோம்பல் உணவு. கீரை, காய்கறிகள், பழங்கள் எல்லாம் மென்மை உணவு வகையறா... எண்ணெய் பதார்த்தங்கள், அசைவம், கிழங்குகள் எல்லாம் வன்மை உணவுகள். தயிர் சாதம், தக்காளி சாதம், புளி சாதம் போன்றவையெல்லாம் சோம்பலைத் தரும் உணவுகள். இந்த அடிப்படை புரியாமல் பெரும்பாலான அம்மாக்களும் செய்கிற தவறுகள் என்ன தெரியுமா?

காலை உணவுக்கு இன்ஸ்டன்ட்டாக ஒரு நூடுல்ஸ் அல்லது ரெடிமேட் உணவுகள்... மதியத்துக்கு வெரைட்டி ரைஸ் என்கிற பெயரில் அவர்களுக்குச் சுலபமான தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் அல்லது தயிர்சாதம். தொட்டுக்கொள்ள வாழைக்காய் அல்லது ஒரு கிழங்கு வறுவல்... மாலை வீடு திரும்பும் பிள்ளைகளுக்கு எண்ணெயில் பொரித்த, வறுத்த நொறுக்குத்தீனிகள், பாக்கெட் உணவுகள்... இரவுக்கு சாதம் அல்லது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என மாவுப்பொருள் அதிகமான பலகாரங்கள்... போதாத குறைக்கு வாரம் முழுக்க விட்டுப்போன ஆகாத உணவுகளை, விடுமுறை நாள்களில் வெளியில் சாப்பிட்டால்தான் திருப்தி.

உங்களுக்குப் பிடித்ததையோ, சமைக்கச் சுலபமானதையோ பிள்ளைகளுக்குக் கொடுத்து வளர்க்காதீர்கள். சுவை அடிப்படையில் உணவு கொடுப்பதைத் தவிர்த்து, வயது அடிப்படையில், உணர்வுகளின் அடிப்படையில் கொடுப்பதே சிறந்தது.

அந்த வகையில் வளரும் பிள்ளைகளுக்கு சாத்வீக உணவே சிறந்தது. உதாரணத்துக்கு உலகில் எல்லாருக்கும் பிடித்த உருளைக் கிழங்கையே எடுத்துக் கொள்வோமே...

பச்சை உருளைக்கிழங்கில் உள்ள நீர்ச்சத்தானது, மினரல் வாட்டரை விட சுத்தமானது. அதே கிழங்கை வேக வைத்தால், அதில் மாவுச்சத்து அதிகமாகிறது. எண்ணெயில் பொரித்தால் கார்பன் அதிகமாகிறது. கார்பன் அதிகமாகிறபோது, பிராண சக்தி குறைந்து, அதன் விளைவாக எதிர்ப்புச் சக்தி குறையும். உடலுக்குள் புதுசு புதுசாக நோய்கள் உற்பத்தியாகின்றன. அதனால் எதை, யாருக்கு, எப்போது, எப்படிக் கொடுக்க வேண்டும் என்கிற மனக்கணக்கு அம்மாக்களுக்கு அவசியம்.

சாப்பாட்டு விஷயத்தில் பெற்றோர், பிள்ளைகளுக்கு முன்மாதிரிகளாக இருக்க வேண்டும். தினமும் இரண்டு, மூன்று வித காய்கறிகள், கீரைகள், பருப்புக் கலந்த உணவு, கொண்டைக்கடலை, பழங்கள் எல்லாம் மெனுவில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சூப் குடிப்பதை தினசரி வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

மதிய உணவுக்குப் பிறகு உங்கள் பிள்ளைகள் வகுப்பறையில் தூங்குவதாகக் கேள்விப்படுகிறீர்களா? தயிர்சாதம், தக்காளி சாதம், புளி சாதங்களுக்கு விடை கொடுத்துவிட்டு, கீரை சாதம், கொத்தமல்லி சாதம், புதினா சாதம் என மாற்றிப் பாருங்கள்.

கோபப்படுகிற, ஆக்ரோஷமான பிள்ளைகளுக்கு அசைவம் கொடுப்பதை நிறுத்திவிட்டு, காய்கறி, பழங்களைப் பழக்குங்கள். வன்முறை நடத்தை மாறுவதோடு, அவர்களது நுட்ப உணர்வுகளும் மேம்படும். நினைவாற்றல் பெருகும். வாரம் ஒரு நாள், ஒரு வேளைக்காவது வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுவதை குடும்ப வழக்கமாக்கிப் பாருங்கள். மருத்துவரின் முகவரியே மறந்து போகுமளவுக்கு ஆரோக்கியமாக இருக்கலாம்.

சர்க்கரை நோய்--(SUGAR)




சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்.

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:..

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

ஆயிரம் வருடங்கள் பழமையான சிவன்கோவில் கண்டுபிடிப்பு.!-(SCIENCE).



சோழர் காலத்துக்கு உரிய சைவ ஆலயம் ஒன்றின் சிதைவுகள் அகழ்வு ஆராய்ச்சி நிபுணர்களால் இந்தோனேசியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆலயம் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது என அறியப்படுகிறது.

சிவபெருமான், விநாயகர் ஆகியோரின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலயத்தை ஒத்த ஆலயங்கள் இதற்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கவில்லை.

இதனால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என நிபுணர்கள் விளக்கம் தருகின்றார்கள்.

மாமல்லபுரம்-(MAMALAPURAM)


மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான்உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது..

எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே. இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது. படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ), அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது. இந்த சங்க கால கட்டிடம் சுனாமியால் அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது.

பின்னர் அதுவும் ஒரு சுனாமியால் அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது. "சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது.கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள், மிகுந்த பூரிப்போடு இருக்கும்.

யாளி - ஒரு புரியாத புதிர் ! -(Yaali oru puriyatha pudhir)


தென்னிந்தியக் கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணம். சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கப்பெற்றுள்ளது. சிங்கத்தின் தலை கொண்டதை " சிம்ம யாளி " என்றும், ஆட்டுத்தலை கொண்டதை " மகர யாளி " என்றும், யானை முகத்தை "யானை யாளி " என்றும் அழைக்கிறார்கள்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சச உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள். பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது. அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள். அப்படியானால் இவை போருக்கு பயன்படுதப்பட்டிருக்குமா?

இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாளிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை "யாளி வரிசை " என்றே அழைக்கிறோம். ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில் கூட இந்த யாளிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது. உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது. மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாளியின் சிலையும், அந்த யாளி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட யாளி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன. உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை. குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாளி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம். அது தான் யாளி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் அவலநிலை.

யாளிக்கு எத்தனை கோவில்களில், எத்தனை விதமான சிலைகள் உள்ளன? யாளியில் எத்தனை வகைகள் உள்ளன? பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா? யாளி உருவம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது? நமது சிறிய கோவில்களிலும் யாளியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா? யாளியைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன? யாளி என்ற உயிரினம் கற்பனையா? இல்லை அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா? யாளி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகமா? வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன? குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழ் சமூகத்தில் இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப்போகிறார்? பதவிக்கு அடித்துக்கொள்ளும் தமிழக அரசியலில் இவற்றின் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா அல்லது கடைசி வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இவை மண்ணோடு மண்ணாகிவிடுமா?

எதற்குமே பதில் இல்லை !!!!