Ad

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

Ads. Txt

google.com, pub-1816516972012885, DIRECT, f08c47fec0942fa0

13.11.13

கள்ளழகர் கோவில் - மதுரை -(KALLALAGAR TEMPLE MADURAI)



  
 
 திருவிழா:

சி்த்திரைத் திருவிழா - 10 நாட்கள் ஆடிப் பெருந்திருவிழா - 13 நாள் ‌ஐப்பசி தலை அருவி உற்சவம் - 3 நாள் இவை தவிர வைகுண்ட ஏகாதசிகிருஷ்ண ஜெயந்திதீபாவளிபொங்கல்தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர்வாரத்தின் சனி ஞாயிற்றுகிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும்.மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.




 தலபெருமை:

கருப்பண்ணசுவாமி : இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்பதினெட்டாம் படியான் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.  இவரை கும்பிட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்.

கோட்டை : விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி அதில் இருக்கும் தானியங்களைஅழகருக்கு காணிக்கையாக  ‌‌செலுத்துவார்கள்.

அழகர் ‌கோயில் தோசை : காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறதுஇது பழநி பஞ்சாமிர்தம்திருப்பதி லட்டு போன்று மிகவும் புகழும்சிறப்பும் உடையது.

நூபுர கங்கை : சிலம்பாறு - ராக்காயி அம்மன் கோயில் அம்மன் கால் சிலம்பிலிருந்து மலைக்குகைக்குள் வற்றாத ஜீவ நதியாக வந்து கொண்டிருக்கிறது.

பெருமாள் சப்தரிஷிகள்சப்த கன்னிகள்பிரம்மாவிக்னேஷ்வர்ஆகியோரால் ஆராதிக்கப்படுகிறார்.  6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற முக்கிய திவ்ய தேசம் .
சக்கரத்தாழ்வார் சப்த கன்னிகளால் ஆராதிக்கப்படுகின்றார்.

சிறப்பு தகவல்மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா தமிழகத்தின் மிக முக்கிய திருவிழா ஆகும்இதில் மீனாட்சிக்கு திருக்கல்யாணமும்அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும்  கண்டு வந்தால் வாழ்க்கை முழுவதும் இனிமையாக கழியும் என்பது நம்பிக்கை.

அழகர் ஆற்றில் இறங்குதல்மகாவிஷ்ணு இந்த உலகை அளக்க தனது திருவடியை தூக்கினார்அப்போது பிரம்மன்திருமாலின் தூக்கிய திருவடியை கழுவி பூஜை செய்தார்அப்படி கழுவிய போது மகாவிஷ்ணுவின் கால்சிலம்பு(நூபுரம்அசைந்து அதிலிருந்து நீர்த்துளி தெளித்து அழகர்மலை மீது விழுந்ததுகங்கையை விட புனிதமான இந்த தீர்த்தமேஇந்த தீர்த்தத்தில்அமர்ந்து தான் சுதபஸ் என்ற மகரிஷி பெருமாளை நினைத்து தியானத்தில்இருந்தார்அப்போது மகரிஷியை காண  துர்வாச முனிவர் வந்தார்பெருமாளின் நினைப்பில் இருந்ததால்துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லைகோபமடைந்த துர்வாசரோ, "மண்டூக பவஅதாவது "மண்டூகமான நீ மண்டூகமாகவே (தவளைபோஎன சாபமிட்டார்.

சாபம் பெற்ற சுதபஸ், ""துர்வாசரே பெருமாளின் நினைப்பில் இருந்ததால் தங்களை கவனிக்க வில்லைஎனக்கு சாப விமோசனம் தந்தருள வேண்டும்,'' என வேண்டினார்அதற்கு துர்வாசர்வேதவதி என்கிற வைகை ஆற்றில் தவம் செய்அழகர்கோவிலில் இருந்து பெருமாள் வருவார்அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்,'' என்றார்அழகர் கோவிலிலிருந்து பெருமாள்கிளம்பி மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூட்டிக்கொண்டு குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குகிறார்சித்ரா பவுர்ணமிக்குமறுநாள் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்குகாட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார்அழகர் கோவிலிலிருந்து மதுரை வந்துமீண்டும் கோவில் திரும்பி செல்லும் வரை அழகர் சுமார் 7 வாகனங்கள்மாறுகிறார்.

மாசியில் தேனூர் மண்டபத்தில் நடந்த விழா:
மண்டூக மகரிஷிக்கு காட்சி கொடுப்பதற்காக அழகர் கோவிலிலிருந்து பெருமாள் தேனூர் மண்டபத்தில் சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் காட்சிதரும்சித்திரை திருவிழா ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்ததுஅதே போல் மீனாட்சி திருக்கல்யாணம் திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு வரை மாசிப்பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வந்தது.சைவத்திற்கு தனி விழாவைணவத்திற்கு தனிவிழா என்ற கொண்டாடப்பட்டு வந்ததுதிருமலை நாயக்கர் இரண்டு விழாவையும் ஒன்றாக்கிசைவவைணவ ஒற்றுமை திருவிழா ஆக்கி விட்டார்அழகர்கோவிலில் தான் லட்சுமிபெருமாளைக் கைப்பிடித்தாள்அன்றுமுதல் கல்யாண சுந்தரவல்லி என்னும் பெயர் பெற்றாள் அன்னைஇந்த திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக் கொண்டதுமக்கள் மனதை கொள்ளையிட்டதால் இவர் "கள்ளழகர்ஆனார்.

அழகரின் அபூர்வ வரலாறுஒரு காலத்தில் இந்த உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்ததுஏனெனில் யாரும் தவறு செய்வதே கிடையாதுஇருந்தும் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதற்காக துரத்தி வரும் போது அங்கு வந்த தர்மதேவன் அவனை ஒரே அடியில் வீழ்த்தினார்இந்த விஷயத்தை கேள்விப் பட்ட சிவன்உலகில் தர்மநியாயம் அழிந்து விடக்கூடாதுஅதை பாதுகாப்பது உன் பொறுப்புஎனவே அதற்குரியஉருவத்தை உனக்கு தருகிறேன் என கூறி தர்மதேவனுக்குபற்கள் வெளியே தெரியும் படி ஒரு கொடூரமான உருவத்தை வழங்கி விட்டார்இதைக்கண்ட உயிர்கள் நாம் தப்பு செய்தால் தர்மதேவன் அழித்து விடுவான் என்று பயம் கொண்டனநல்லது செய்யப்போய் நமது உருவம் இப்படி ஆகி விட்டதே என கவலை கொண்டான் தர்மதேவன்.  சரிநமது உருவம் தான் இப்படி ஆகி விட்டதுநாம் தினமும் எழுந்தவுடன் விழிக்கும் முகமாகவது மிகவும் அழகாக இருக்க வேண்டும் என இந்த அழகர்கோவில் மலையில் தவம் இருந்தான்இவனது தவத்திற்கு மகிழ்ந்த அழகின் தெய்வமான விஷ்ணுஇவனுக்கு காட்சி கொடுத்து ""வேண்டியதை கேள்'' என்று கூறினார்அதற்கு தர்மதேவன்நான் இந்த மலையில் தவம் செய்த போது காட்சி கொடுத்தீர்கள்.எனவே நீங்கள்  நிரந்தரமாக இங்கேயே எழுந்தருள வேண்டும்அத்துடன்தினமும் ஒரு முறையாவது உங்களுக்கு பூஜை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும் என்றான்தர்மதேவனின் வேண்டுகோளின் படி மகாவிஷ்ணு சுந்தரராஜப்பெருமாளாக இந்த மலையில் எழுந்தருளினார்சுந்தரம் என்றால் "அழகு'. எனவே அழகர் என்ற பெயரே நிலைத்து விட்டதுஅத்துடன் தர்மதேவனுக்கு காட்சி கொடுத்த மலை அழகர் மலை என்றானதுஇன்றும் கூட அழகர் கோவிலில் அர்த்தஜாம பூஜையை தர்மதேவனே செய்வதாக ஐதீகம்.

தல சிறப்புபெருமாளின் 108 திருப்பதிகளுள் ஸ்ரீரங்கம் முதலிடத்தையும்காஞ்சிபுரம் அடுத்த இடத்தையும் மூன்றாவது இடத்தை அழகர்கோவிலும் பெற்றுள்ளனஇத்தலத்தை பெரியாழ்வார்ஆண்டாள்நம்மாழ்வார்,பூதத்தாழ்வார்பேயாழ்வார்திருமங்கையாழ்வார்ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.  பீஷ்மரும்பஞ்சபாண்டவர்களும் இத்தல பெருமாளை தரிசித்து பலனடைந்துள்ளனர்.

கள்ளழகர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டதுஅழகர்கோவில் மூலவர் பரமசாமிஸ்ரீதேவிபூதேவியுடன் அருள்பாலிக்கிறார்மகாவிஷ்ணுவின் திருக்கோலங்களிலேயே அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப்பெருமாள் தான் பெயருக் கேற்றாற் போல் மிகவும் அழகாக இருப்பார்தர்மதேவனுக்கு காட்சி தர பெருமாள் வந்ததால் வைகுண்டத்தில் பெருமாளை காணாமல் மகாலட்சுமி பெருமாளைத்தேடி இங்கு வந்துவிட்டாள்.மகாவிஷ்ணுவை விட மிக அழகான லட்சுமியைக்கண்ட தர்மதேவன்மகாலட்சுமியும் பெருமாளுக்கு அருகில் இங்கேயே தங்க வேண்டும் என அடம் பிடித்தார்.   இவனது வேண்டுகோளின் படி மகாலட்சுமி பெருமாளை கைப்பிடித்துஅவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் இங்கு வீற்றிருக்கிறாள்இப்படி அழகான இருவரது திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக்கொண்டதுமக்கள் மனதை கொள்ளை கொண்டதால்அழகர் "கள்ளழகர்ஆனார்இதனாலேயே இந்த பெருமாளை நம்மாழ்வார், "வஞ்சக்கள்வன் மாமாயன்என்கிறார்.

வைகை தோன்றியது எப்படிமீனாட்சி சுந்தரேஸ்வரர்  திருமண விருந்து சிறப்பாக நடந்து கொண்டிருந்ததுதங்கள் வீட்டு விருந்தைப் பற்றி பெருமையுடன் சிவனிடம் பெண் வீட்டார் பேசினர்.  ""தங்களுடன் வந்துள்ள  அனைவரும் உடனடியாக சாப்பிடச்சொல்லுங்கள்இங்கே உணவுவகை கொட்டிக் கிடக்கிறதுசாப்பிடாமல் இருந்தால் வீணாக அல்லவா போய் விடும்?'' என்றனர்சிவன் அவர்களிடம், ""இப்போது யாருமே பசியில்லை என்கிறார்கள்இதோஎனது கணங்களில் ஒருவனான இந்த குண்டோதரனுக்கு முதலில் விருந்து வையுங்கள்மற்றவர்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்,'' என்றார்.  விருந்தை மருந்தைப் போல ஒரே வாயில் போட்டு மென்று விட்டான் குண்டோதரன்பெண் வீட்டார்திகைத்தனர்.""மற்றவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம்இந்த குண்டோதரன் இப்போது தின்றது போதாதென்று இன்னும் கேட்கிறானே,'' என வெட்கி நின்ற அவர்கள் அந்த இறைவனையே சரணடைந்தனர்திருமண வீட்டில் பெருமை பேசக்கூடாது என்பது இதனால் தான்அரண்மனைவாசிகளாயினும் அகந்தை கூடாது என்பது இச்சம்பவம் தரும் தத்துவம்சிவன் அன்னபூரணியை அழைத்தார்அவள் கொடுத்த உணவை சாப்பிட்டு விட்டு ஆறுகுளம்குட்டைவாய்க்கால்ஏரி இவைகளில் உள்ள தண்ணீர் எல்லாம் குடித்து முடித்தான் குண்டோதரன்அப்படியும் தாகம் தீராததால் ஈசனிடம் வந்து முறையிட்டான்ஈசன் தன் சடை முடியிலிருந்த கங்கையிடம், "" மதுரை நகருக்கு உடனே தண்ணீர் தேவைப்படுகிறதுஉடனே அங்கு பாய்ந்தோடு,'' என கட்டளையிட்டார்குண்டோதரனிடம்நீர் வரும் திசைநோக்கி கை வைஅந்த நீரை குடித்து உன் தாகத்தை தீர்த்து கொள்,'' என்றார்.  இதுவே "வைகைஆனது.  கங்கை பாய்ந்ததால் வைகையில் நீர் பெருக்கெடுத்து ஓடியதுஎனவே அது புண்ணிய நதியாக மாறியதுஇப்படி கங்கையையும் வைகையையும் இணைக்கும் திட்டத்தை சிவன் அன்றே உருவாக்கி வைத்திருக்கிறார்இந்த நதி காற்றை விட வேகமாக வந்ததால்  "வேகவதிஎனப்பட்டதுவைகையை பாழடித்து விட்ட நாம்,  அழகரையே வாய்க்கால்  கட்டி இறக்கி விட்டிருக்கும் நாம்அவரிடம் பாவங்களுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டுமழை பொழிய வேண்டுவோம்.




  தல வரலாறு:

எமதர்ம ராஜனுக்கு சாபம் ஏற்பட்டதுஇச்சாபத்தை போக்க பூலலோகத்தில் தற்சமயம் ‌கோயில் இருக்கும் அழகர் மலை விருசுபகிரி என்னும் இம்மலையில் தபசுசெய்கிறார்.   இம்மலை 7 மலைகளை கொண்டது.
தர்மராஜனின் தபசை மெச்சி பெருமாள் காட்சிதந்தார்இறைவனின் கருணையை போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளிடம் தினந்தோறும்நின்னை ஒரு முறையாகிலும் பூஜை செய்ய வரம் தர வேண்டும் என்று கேட்டார்அதன்படியே பெருமாளும் வரம் தர இன்றும் இக்கோயிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எம தர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம்எல்லா மக்களுக்கும் அருள் தருமாறு தர்ம ராஜன் விருப்பத்தின் பேரில் விஸ்வகர்மாவினால் சோமசந்த விமானம் (வட்ட வடிவஉள்ள ‌கோயில் கட்டப்பட்டது




சிறப்பம்சம்:

விஞ்ஞானம் அடிப்படையில்: தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக